அத ஏன்கேக்குற.............
அவர்களின் இன்றைய(நாளைய!) நிலை:
காட்சி 1
ஏன்டா மவனே இந்த வயசான காலத்துல இந்த அத்துவான காட்டுல கொண்டு வந்து நம்மள போட்டு போயிட்டானுங்களே படுபாவி பசங்க.........
ஏன்பா உன் வயசுக்கு நீ சும்மாவா இருந்தே என்னா ஆட்டம் அதான் உன்னோட சேர்த்து எங்களையும் கொண்டுவந்து இங்க போட்டுட்டானுங்க............ஆனா பாரு இப்பதான் உனக்கு சராசரி மனுசன மாதிரி பேச்சு வருது................
அண்ணே சத்தமா பேசாதிங்க ஏதாவது சிக்கலாகிடப்போகுது ..............
டேய் நீ ரொம்ப நல்லவன்டா வேலை கைல இருக்க வரைக்கும் இந்தாளுக்கு ஜால்ரா அடிச்சே காலத்த ஓட்டிட்ட...........நான் எப்படி இருந்தேன் தெரியுமா.......டிஜிடலு பேனரு கணக்கா........என்னயுமில்லடா கூட்டியாந்துட்டீங்க உங்களோட............
அண்ணே என் தலைஎழுத்த பாருன்னே ..........இங்க வந்து சாணி அல்ல வச்சுட்டானுங்க...........
அடியே என்னா ரவுசு உட்ட நீ ...........இந்தப்பக்கம் பேசுவாளாம்...........அந்தப்பக்கம் பேசுவாளாம் ....ஒரு போனு கிடைச்சதுன்னு என்னா ஆட்டம்! ........... ஏதோ இங்கிலீசுல நாலு வார்த்த தெரிஞ்சி வச்சிக்கிட்டு ........என்னைய என்னமா ஓட்டுன நீயி...........
என் குலக்கொழுந்தே உண்மையை ஊருக்கு கேட்க்கும்படி உரக்கசொல்லாதே.......
என்னடா இது இன்னும் உங்க ரெகுலர் டயலாக்க காணுமேன்னு பார்த்தேன்...........
இந்த மாதிரி ஓவரா பெசுனதுனால தானே இங்க கொண்டுவந்து போட்டு பன்னி மேய்க்க விட்டு இருக்கானுங்க நீ திருந்தவே மாட்டியா...........
hey what is this? whats happening here? lets talk something good?
வாடா பிஞ்ச வாயா ஏன்டா டேய் இந்த அமுலு பேபி மூஞ்ச வச்சுக்கிட்டு நாலு வார்த்தைய சொளட்டி பேசிட்டா நீ இங்கிலீசுகாரனுக்கு மவனா .............வாயில அசிங்க அசிங்கமா வருது............
இனமே பயம் கொல்லாதே நானிருக்கிறேன்.............
எலேய் நீ இருப்ப நாங்க இருப்பமா சொல்லு.........சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த கணக்கா ஊட்டுல இருக்க பின்சது பிய்யாததுக்கு எல்லாம் வேலை கொடுத்து ஊட்டையே கொண்டாந்து பன்னி மேக்க விட்டவனே ..............
அய்யோ அய்யோ நான் தான் அப்பவே சொன்னேன்ல..............
வாடா ராசுக்குட்டி ..........உன்ன தான் தேடிட்டு இருக்கேன்.......என்னாமா பம்முன ..........இப்ப எங்க வந்து இருக்க பாத்தியா...........ஒரு சொட்டு தண்ணி கிடையாது குடிக்க..........இந்த மாதிரி வனாந்தரதுல கொண்டாந்து போட்டதுக்கு யாரு காரணம்.............
அண்ணே நான் இல்ல..........
உன்ன எனக்கு அன்னிக்கே தெரியும்டா....... நீ நான் வேலைல இருக்கும்போதே என்னப்பத்தி ஓவரா பேசனவன் ஆச்சே......வாடா ஒத்தைக்கு ஒத்த மோதலாம் வா...........
அண்ணே நான் வறுமை கோட்டுக்கு கீழ பொறந்தவன் ...............
அப்போ நாங்க எல்லாம் .........அந்தரத்துல பாகிஸ்தான் பார்டர்லய பொறந்தோம்........டேய் நீயாருன்னு எனக்கு தெரியும் .......கண்ணு வா கண்ணு.............ரெண்டு சாத்து...ரெண்டே சாத்து தான்..........
என் தலைமகனே கலங்காதே ..........நாளை விடியும் நமக்காக...........
ஏலே இது உனக்கே ஓவரா தெரியல ..........இன்னிக்கே குடிக்க தண்ணி இல்ல .......எப்போ உசிரு போகப்போதுன்னே தெரியல.....இதுல நாளைக்கு............உன்ன சொல்லி குத்தமில்ல எல்லா அந்தக்காலப்பெருசுங்க ..........உன்னைய உசுபேத்தி இந்தமாதிரி பேசவச்சி பாத்துடுசிங்க............அதே பேச்சு தான் இங்க கொண்டாந்து விட்டுருக்கு............
எப்பே நான் படந்தேன் நடிச்சேன் அதுக்காக என் கோவணத்த உருவிட்டாங்க...........
சரி விடு அது மட்டும் போச்சே.........
இப்பவாவது நான் சொல்றத கேளுங்க ..........
ஏண்ணே எதாவது வழி இருக்கா தப்பிக்க............என்னா சொல்லுங்க................
எல்லோரும் ஒழுங்க வேலயப்பருங்க ...........அதப்பாத்தாதான் கூழு ஊத்தறதா இப்போதான் அந்தப்பயபுள்ள சொல்லிட்டு போச்சி................
கொசுறு: இந்த டயலாக்கு எல்லாம் யாரோடதுன்னு தெரியலீங்க........ தொலைவிலே ஒரு வானொலி பாட்டு கேக்குது இருங்க கேப்போம்-
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்......சமயம் பாத்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்......
தொடரும்.................
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
14 comments:
அருமையா எழுதுறிங்க. அதுவும் இன்றைய கொசுறு அதன் பின் வானொலியில் வாந்த பாட்டு. நல்ல மேட்சிங்
//அடியே என்னா ரவுசு உட்ட நீ ...........இந்தப்பக்கம் பேசுவாளாம்...........அந்தப்பக்கம் பேசுவாளாம் ....ஒரு போனு கிடைச்சதுன்னு என்னா ஆட்டம்//
:-))
கலக்கல்ஸ்!
அருமை..அருமை...
அண்ணே உங்க 'காட்சியை' கற்பனைசெய்து பார்த்தேன் குமால்டியாக இருந்துச்சு
செம செம செமயா இருந்துச்சு
ம்ம்ம்.. கலக்கலாக எழுதியிருக்கீங்க..
மக்களாட்சின்னு முழுசா தலைப்பில் போட்டிருக்கலாமே...
@THOPPITHOPPIவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே ,
என்னவோ போங்க ....இப்படி பதிவு போட்டு மனச தேத்திக்க வேண்டியது தானா........... முடியாது............
@பட்டாபட்டி....வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.பட்டாபட்டி....அவர்களே ,
@ஜீ...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே ,
@நா.மணிவண்ணன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன்.. அவர்களே ,
நினச்சு வேற பாக்குறீங்களா.......நிசமே இதுதானுங்க....
@இரவு வானம்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.இரவு வானம் இருந்துச்சு அவர்களே ,
@பதிவுலகில் பாபுவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.பதிவுலகில் பாபு அவர்களே ,
@Philosophy Prabhakaranவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே ,
"மக்களாட்சின்னு முழுசா தலைப்பில் போட்டிருக்கலாமே.."
>>>>>>
எதாவது வித்தியாசமா இருக்கணுமுங்க......இல்லன்னா நம்மள என்னன்னு நெனப்பாங்க கடைக்கு வர்றவங்க......
Post a Comment