Followers

Monday, August 15, 2011

65 வது சல்யூட்...என்னதான் செய்யப்போறோம்!

வணக்கம் நண்பர்களே....


இன்னும் கிடைக்காத சுதந்திரத்துக்கு இன்று நாம் அடிக்கும் சல்யூட்டின் எண்ணிக்கை 65.....

(சோ!)காந்தி தேசமே காவல் இல்லையா....இந்த சுதந்திரத்துக்காக தன்னுயிரை அடுத்த சந்ததிக்காக கொடுத்து மறைந்த புண்ணிய ஆத்மாக்களை நினைவு கூறும் நாள்....எல்லோர் மனதிலும் ஒரு வித சந்தோசம் தவழ வேண்டிய நாள்....நாம் நினைப்பதை யோசிப்பதை வாய் திறந்து பேசவாவது முடிகிறதே என்று சந்தோஷப்படும் நாளிது....(!)

இந்த நன்னாளில்...இன்றும் வெள்ளையரிடம் அடிமையாய் கிடக்கும் தேசத்து பிரஜையின் ஒரு குமுறலே இந்த பதிவு.....


இது வரை ஓடிக்கொண்டு இருந்த நிர்வாகம்...கடந்த சில வாரங்களாக முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது....இந்த நாட்டின் அச்சாணி என்று தூக்கி உட்கார வைக்கப்பட்டவரால் ஒன்றும் பேச முடியாத நிலைமை(!)...பல்லாயிரம் உயிர்களை துவம்சம் செய்து தன் ஓருயிருக்கு காணிக்கை செலுத்தியவரை காணவில்லை....

இந்த சுதந்திரம்(!) கிடைத்து மக்கள் கண்ட வியத்தகு காட்சிகள்....

காந்தி கொல்லப்பட்டது.....காந்தியம் கொல்லப்பட்டு வருவது....(!)


நேதாஜி காணாமல் போனது...அந்த மனிதரைப்பற்றி கவலைப்படாதது...(!)

காந்தி பெயரை பின்னே போட்டோர் எல்லாம் அவர் முகம் போட்ட பணத்தை முன்னே போட்டது...

.....ந்திரம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள ஒரு சனநாயக கூட்டம்(!)....அதை காட்டியே பிச்சை எடுக்கும் நிலமையில் (>>>)வாதிகள்(!)...

யாரை காப்பாற்ற இந்த வேஷம் என்று தெரியாமல் ஒரு முகமூடிக்கூட்டம்....


வாங்கி விட்டோம் சுதந்திரத்தை அந்நியரிடம் என்று இனியும் கூற முடியுமோ!....அன்றி இன்றும் அந்த அன்னியரின் கண்ணசைவுக்காக காத்து கிடக்கும் நிர்வாக கூட்டத்துக்கு தலையாட்டும் ஓர் அடிமையாய் யாமும்(!)....


இன்றும் விடியாத தன் வாழ்கையை பற்றி தெரியாமல் ஓர் குழந்தை தொழிலாளியின் சுதந்திரம்!

கொசுறு: சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....ஜெய் ஹிந்த்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....ஜெய் ஹிந்த்!

மாய உலகம் said...

சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....கூட நானும் ஜெய்ஹிந்த்!

காட்டான் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் மாப்பிள.. அகிம்சையால் கிடைத்த சுதந்திரத்தை வன்முறையால் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

காட்டான் குழ போட்டான்..

காட்டான் said...

மன்னிச்சுகோ மாப்பிள ஓட்டு போடுறன்னு இன்ட்லி யில இனைச்சு விட்டுட்டன்... சாரி

M.R said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

கந்தசாமி. said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

கந்தசாமி. said...

///நேதாஜி காணாமல் போனது...அந்த மனிதரைப்பற்றி கவலைப்படாதது...(!)///

இந்திய சுதந்திரம் என்றாலே என் மனதில் வந்து மறைபவர் காந்தியை விட நேதாஜி தான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

செங்கோவி said...

// அகிம்சையால் கிடைத்த சுதந்திரத்தை வன்முறையால் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். //

நச்சுன்னு சொன்னார் காட்டான்..காட்டு அடி!

koodal bala said...

சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....கூட நானும் ஜெய்ஹிந்த்!

பாரத்... பாரதி... said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

பாரத்... பாரதி... said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

ஆமினா said...

///நேதாஜி காணாமல் போனது...அந்த மனிதரைப்பற்றி கவலைப்படாதது...(!)///
நச் பதிவு

# கவிதை வீதி # சௌந்தர் said...

மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் பயனிப்போம் விக்கி கண்டிப்பாக ஒரு நாள் மாறும்...


என் சுதந்திரதின வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

jey ஜெய் ஹிந்த்

மாணவன் said...

சுதந்திரம் கிடைக்காவிடினும்.....அது கிடைத்ததாகவே கனவு கண்டு வாழும் ஓர் பிரஜையாய் அடியேனும்!....ஜெய் ஹிந்த்!

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

மைந்தன் சிவா said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் நம்ம தலைக்கு!!!!
கவிதையும் கொஞ்சம் வருதோ"??:)

மைந்தன் சிவா said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் நம்ம தலைக்கு!!!!
கவிதையும் கொஞ்சம் வருதோ"??:)