Followers

Showing posts with label அரசியல் பணி. Show all posts
Showing posts with label அரசியல் பணி. Show all posts

Wednesday, August 10, 2011

எப்படிப்பட்ட அரசியல் வாதி வேணும் - விளம்பரம்!

வணக்கம் நண்பர்களே....



இப்படி ஒரு ஆள் தேவை - பொய் சொல்லக்கூடாது , கொள்ளையடிக்க கூடாது, அடுத்தவர் காசுக்கு பேயா அலையக்கூடாது, தன் சொந்த உழைப்பில் தான் சாப்பிடனும், திருடக்கூடாது, நேர்மை, ஞாயம், உண்மை, உழைப்பு......etc

எங்கே இப்படி பேசியவர்கள்....காணவில்லை...வரலாறு ஒரு முறை திரும்பி பார்க்கிறது....

நாலு முழம் வேட்டி போதும் எனக்கு....எனக்கெதுக்குய்யா விலையுயர்ந்த சட்டை....

அம்மாவுக்கு ரொம்ப வேர்க்குதாம்..ஒரு மின்விசிறி கேட்டாங்க....


நான் என்ன அம்புட்டா சம்பத்திக்கறேன்....பாக்கறேன்னு சொல்லு....

- இப்படி ஒரு முதலமைச்சர் இருந்தாரு....

கல்விக்காக பல கோடி செலவு பண்ண வேண்டி வருமே....

நம்ம குழந்தைங்க கல்விதான் இந்த நாட்ட பல படி உயர்த்தும்னே என்றார் அவர்...

இன்று...

கல்வி - " குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே....படிக்கும் படிப்பை நீ விலை போட்டு விற்காதே.."

 - இன்று இது தான் நிலை....


அன்று ஒருவர் சொன்னார் -

திராவிட இனம் தான் நம் மாநிலத்தை ஆளனும்...அப்போது தான் நாம் நம் நாட்டு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்...

இன்று ஒருவர் சொல்கிறார் -

என் மகவுகள் பணக்காரர் ஆவது பலருக்கு பிடிக்கவில்லை...அவர்தம் சொந்த(!) மூலதனதாலேயே இந்த அளவுக்கு முன்னேறி உள்ளனர்(!)

அன்று -

நான் பிறந்தது வேறு இடமாக இருந்தாலும்...என்னை வளர்த்து பாராட்டி சீராட்டி இந்த அளவுக்கு கொண்டு வந்தது இந்த நாடே....இதற்கே என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர விழைகிறேன்....

இன்று -

நான் இருக்கும் வரை நானே எல்லாம்....யாரும் இதற்க்கு போட்டி இல்லை...


நேற்று:

லஞ்சத்துக்கு எதிரானவன் நான்...என் கையில் நிர்வாகம் இருந்தால்(!)...இந்த நாட்டை சோலையாக மாற்றுவேன்....

இன்று -

தம்பி ஒரு லொகேஷன் பாரேன்...

அன்று -

நாங்கள் இல்லையேல் இங்கு ஒருவரும் நிர்வாகத்தின் தலைமையில் உட்கார முடியாது...

இன்று -

ஐயோ போச்சே போச்சே...என்ன பெத்த ராசாவே...இப்படி வெறும் பயலா பூட்டியே...


நேற்று நீ...இன்று நான்...நாளை ?


கொசுறு: உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை முன் வைக்கவும்...நீங்கள் எப்படிப்பட்ட அரசியல் வாதிகளை (வியாதிகள் அல்ல!) விரும்புகிறீர்கள்....இது ஒரு சர்வே....உங்கள் கருத்துக்கள் தேவை!

Post Comment

Thursday, June 30, 2011

இவங்கல்லாம் நண்பர்களா!

வணக்கம் நண்பர்களே.....


சமீபத்தில் ரெண்டு பழைய நண்பர்களிடம் பேச நேர்ந்தது...இந்த ரெண்டு நல்லவங்களும்(!) எனக்கு ஒரு காலத்துல முக்கிய(முக்காத!) நண்பர்கள்...ஒருத்தரு காலேஜ் முடிச்சப்புறம் சொந்த நிலத்த பாக்க போயிட்டாரு...இன்னொருத்தரு B.E படிச்சி முடிசிட்டதா சொல்லி ஏமாத்திட்டு திரியிறாரு(இன்னும் அரியர்ஸ் இருக்கு!)...

ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமைன்னா அது ரெண்டு பெரும் அரசியல்வாதி ஆயிட்டானுங்க(ஆயிட்டார்கள்!)....திடீர்ன்னு என் ஞாபகம் வந்து என்னோட மெயில்ல தொடர்பு கொண்டார்கள்...நானும் பம்மிகிட்டே பேசுனேன்..அரசியல் வியாதிகள் ஆச்சே சாக்கிரதையா இருக்கோனும்ல...

தொலைபேசி உரையாடல் உங்களுக்காக...... 

என்ன மாப்ள எப்படி இருக்க...

இதுவரைக்கும் நல்லாத்தான் இருக்கேன்...நீங்க....

என்னய்யா புதுசா மரியாதை எல்லாம் குடுக்கற....

நீங்க இப்போ பெரிய ஆளுங்கன்னோவ்...


அப்படியெல்லாம் இல்ல..திடீர்னு உன் ஞாபகம் வந்தது....அதான் எப்படி உன்ன புடிக்கறதுன்னு யோசிச்சேன்....நம்ம பஷீரு உன் மெயில் ஐ டி கொடுத்தான்!...எப்படியோ ரொம்ப வருஷம் கழிச்சி உன்ன புடிச்சிட்டேன்...மாப்ள!

அப்புறம் எப்படி போகுது அரசியலு...

அதான் பாக்குற இல்ல..நம்ம ஆட்சி நடக்குது...இனி பாரு எப்படி போகுதுன்னு...சரி உன் குடும்பம் எப்படி இருக்கு...

எல்லாம் நல்லா இருக்காங்க..உன் வீட்ல எப்படி இருக்காங்க...

அவங்களுக்கு என்ன சூப்பரா இருக்காங்க...

நான் ஒன்னு கேள்விப்பட்டனே...

சொல்லு மாப்ள....

இல்ல...நீ போற வண்டிக்கு முன்னாடி ஒரு Scorpio பின்னாடி ஒரு Scorpio போகுதாமே..

என்ன பண்றது ஒரு பாதுகாப்புக்குத்தான்(!)....

சரிய்யா அந்த அரியர்ஸ முடிச்சியா....

டேய் அத ஏன்டா இப்போ ஞாபகப்படுத்துரே...இங்க நான் முடிசிட்டதா தான் மெயின்டைன் பண்றேன்...

(பயபுள்ள இப்பவும் அப்படியேத்தான் இருக்கா!)

வேற என்ன விசேஷம்....

சரி எப்போ ஊருக்கு வர்ற சொல்லு...

இல்ல நண்பா இப்போதைக்கு இல்ல....


டேய் அங்க என்னத்த சம்பாதிக்கற...வந்து சேரு இங்க ராசா மாதிரி நான் பாத்துக்கறேன்(ஏற்கனவே இந்த பேருல ஒருத்தரு களி தின்றாரு!)....

அதெல்லாம் வேண்டாம்யா...

ஏன்..உன் பேச்சி ரொம்ப தள்ளியே காட்டுதே...உனக்கு அரசியல் ஆர்வம் அதிகம்னு எனக்கு தெரியும்யா...

அப்படியெல்லாம் இல்லையா....விடு!

அதெல்லாம் முடியாது நீ சீக்கிரத்துல வர்ற...என்னடா ரொம்ப பிகு பண்ற...

மாப்ள கண்டிப்பா...சீக்கிரத்துல வந்து நேர்ல பேசுறேன்...


இந்த நண்பர் இப்போது பெரிய தொழில் அதிபர்...அதுவும் கட்டிட காண்ட்ராக்ட் தொழிலில் தனக்கென்று தனி பெயர் எடுத்து இருக்கிறார்(நல்ல பேர்தாங்க!)...

இவர் இப்போதைய ஆட்சி பொறுப்பில் உள்ள புள்ளி(!)...இன்னொரு நண்பரை பற்றி நாளை சொல்கிறேன்..

கொசுறு: அரசியல் பாதை தனிப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே என் அவா!....காலம் என்னை எந்த வழியில் பயணிக்க சொல்லப்போகிறதோ...காத்திருக்கிறேன்...! 

Post Comment