Followers

Showing posts with label தனி மனித வாழ்கை. Show all posts
Showing posts with label தனி மனித வாழ்கை. Show all posts

Monday, June 27, 2011

எவன் உன்ன பெத்தான்...அவன் கைல கெடச்சா செத்தான்!

வணக்கம் நண்பர்களே.....


ஹாய் எப்படி இருக்கீங்க....

நான் நல்லா இருக்கேன் நீங்க.....

உங்க கிட்ட சாட் பண்றேன்னு நெனைக்கும் போதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...........


அப்படியா......நான் அவ்ளோ பெரிய ஆளா...

இல்லையா பின்ன...உங்க மாதிரி வெளிப்படையானவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.........

எனக்கு இப்படி ரசிகைகளா....பெருமையா இருக்கு....

என்ன இப்படி சொல்லிட்டீங்க...உங்க எழுத்துக்கு நான் அடிமை...

எனக்கு என்னமோ பண்ணுது...இந்த அளவுக்கு என்ன புகழரீங்களே..

சார்...நீங்க வேற ஏதாவது சொல்லுங்க....

நீங்க #$#@#$ பாத்து இருக்கீங்களா..........

சே...இல்லீங்களே...நீங்க எதப்பத்தி சொல்றீங்க....


புரியாத மாதிரியே பேசிறீங்களே...

இல்ல சார் எனக்கு உண்மையா புரியல..........

அதுதான்...அதே தான் நான் சொல்ல வர்றது...என்னமா இருக்கும் தெரியுமா....

அப்புறம் சார்............

அதுக்கு அப்புறம் அதுதான்............

எதுக்கு அப்புறம் சார்..........

அதாங்க அதுக்கு.......@#@##@@##


என்ன சார் இப்படி பேசுறீங்க....

ஏன் உங்களுக்கு பிடிக்கலையா.....பிடிக்கலன்னா முதல்லையே சொல்லி இருக்கலாமே..........

நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு தெரியாதே...

நான் ஒரு வெளிப்படையானவன்...அப்படித்தானே இருப்பேன்.......


அய்யய்யோ என்னை அசிங்கமா பேசிட்டான்....கைய புடிச்சி இசுத்துட்டான்..........(சாட்ல எப்படி கைய புடிச்சி இழுக்க முடியும் டவுட்டு!)...

அய்யய்யோ இது சரியான ##யி.........

மலர்ந்த இரு மலர்களின் புரியாத பாஷை இது

கொசுறு: ச்சே என்னப்பா ஆச்சி இன்னிக்கி....ஒன்னும் பிரியல...ஹிஹி!

Post Comment

Friday, June 3, 2011

காதல் திருமணம் - காலத்தின் கட்டாயமா!

வணக்கம் நண்பர்களே..........



இந்த தலைப்பு கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னோட பதிவுல ஓட்டெடுப்பு மூலமா உங்க எண்ணத்தை புரிஞ்சிக்க நெனச்சி வச்சேன்..........

தேவை - 13

தேவையில்லை - 5

மனமுடைதல் அதிகம் - 10

முயற்சிக்க பயம் - 4

இவை வெறும் ஓட்டுக்கள் மட்டுமா அல்ல மனித மனங்களின் பிம்பங்களா......


இருந்தாலும்........தேவை என்று சொல்பவர்கள்..........தங்களின் அடுத்த சந்ததிக்கு இதனை தெரிவிப்பார்களா.........சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.......ஏனென்னில், காதல் வெறும் உடம்பு சம்பந்தபட்டே அதிகமாக வருவதாக தோன்றுகிறது.....இந்த இனக்கவர்ச்சி மட்டுமே அடுத்த 25 வருடங்களுக்கு போது மானதாக இருப்பதில்லை........அதனால் தானோ என்னவோ அதிகப்படியான பிரிவுகள் ஏற்படுகின்றன..........(மனமுடைதல்!)


காதல் புனிதமாவது என்பது எப்போது........!

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்கையிலும் இந்த காதல் தன் வலியை பதிவு செய்துவிட்டு செல்லும்......அதை வெறும் அப்போதைய வலியாக நினைப்பவன் மட்டுமே(!)....தொடர்ந்து செல்ல முடியும்....என்பது யதார்த்தம்......

இந்த கால கட்டத்தில்......காதல் எப்படி பார்க்கப்படுகிறது..........புரியவில்லை!

ஆனால், காதல் திருமணம் புரிந்தவர்களும் தன் குழந்தைகள் காதலித்தால் ஏன் எதிர்க்கிறார்கள்..........தன்னை போல தன் குழந்தைகள் எதையும் இழக்ககூடாது என்பதாலா.........!

எனக்கு ஒரு பெண் இருந்தால் நான் என் பெண்ணை காதல் திருமணம் செய்ய அனுமப்திப்பேனா!

இந்த கேள்வி என் நண்பர் என்னை கேட்டார்........

நானும் நிச்சயமாக.......என்றேன்....


இல்லை......நீ ஒரு தகப்பனாக இருந்து பார் என்றார்.........

உண்மைதான்........பேச்சிக்கு சொல்வதும் அதனால் நேரிடையாக பாதிக்கப்பட்டு சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது......

முதலில்...........காதல் வருமானத்தை பார்த்து வந்தால்........அது கண்டிப்பாக.....ஒரு இடத்தில முறிவதை நம்மால் தடுக்க இயலாது...........அதுவே திருமணத்துக்கு பிறகு வரும் காதல் பல விஷயங்களுடனே முதிர்ச்சியுடன் காணப்படும் என்பது என் தாழ்மையான கருத்து...........

அதே நேரத்தில்............சமுதாயம் என்று வரும்போது.........இந்த ஜாதி மத விஷயங்கள் ஒடுங்கி(!) போக இந்த காதல் திருமணம் தேவையானதாக உள்ளது.........இதை எந்த மாதிரி மாற்ற இயலும்...........


சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் போக வேண்டும்......அதே நேரத்தில் திருமணம் புரிந்தவர்களும்...........மனம் ஒத்து நீண்ட காலம் வாழ வேண்டும்........தங்களின் கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன நண்பர்களே........

கொசுறு: வாழ்கை எனும் நீண்ட நேர பயணத்தை துணையுடன் ரசிப்பவன் அறிவாளி.......அதை வினையுடன் பார்ப்பவன் முட்டாள் - இது என் தாழ்மையான கருத்து........நன்றி!

Post Comment

Wednesday, June 1, 2011

வாழ்கையே கொஞ்ச காலம்தான்!

வணக்கம் நண்பர்களே..........


வியட்நாமிய மக்களைப்பார்த்து நெறய விஷயம் புரிஞ்சிகிட்டேன்.......முதல்ல உழைப்பு........என்னமா தீயா உழைக்கிறாங்க.........ஆணும் பெண்ணும் சும்மா பறந்து பறந்து(!) உழைக்கிறாங்க(நம்மூர்ல இல்லையான்னு கேட்டுப்புடாதீங்க!).......அதுக்கேத்த வாழ்கை வாழறாங்க.........(என்சாய் பண்ணுறாங்கப்பா!)

நம்ம பாரம்பரியம் எப்படின்னா......கடினமா உழைச்சி அந்த உழைப்போட வருமானத்த நம்ம அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வச்சிட்டு போயிருவோம்......நமக்கு தெரிஞ்ச அந்த உழைப்போட அருமை நம்ம சந்ததிகளுக்கு தெரியாம போக நிறைய வாய்ப்பு இருக்கு............


ஆனா இங்க அப்படியில்ல.........தனி மனித சுதந்திரம் அதிகம்.........அதாவது.....குழந்தைகளோட படிப்பு 10 வரை பெற்றோர் பொறுப்பு..........அதுக்கு பிறகும் உதவி செய்வார்களே தவிர......அந்த குழந்தைகளோட தனிப்பட்ட செலவுகளுக்கு அவர்களே பகுதி நேரம் உழைச்சி சம்பாதிசிக்கோணும்......தங்களின் வயதான காலத்திலும் தங்கள் வாரிசுகளிடம் அண்டி வாழ்வதை இவர்கள் விரும்புவதில்லை.......

ஒரு U turn.......

மிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் உடையில் மட்டுமே.....ஆனாலும் மிருகம் சேமிப்பு என்ற போர்வையில் நாலு தலைமுறைக்கு சேத்து வைக்க நினைக்கறது இல்ல.....மனுஷன் தன்னை விட தன் தலைமுறைக்காகவே அதிகமாக கவலைப்படுகிறான்((தலீவர் போல!)........பணத்துக்காக துடிக்கிறான்.......


இந்தியர்கள் மட்டுமே குடும்பத்துக்காக மிகவும் வருந்துபவர்களாக தோன்றுகிறது.......மேலை நாட்டவர் அந்த அளவு வருந்துவதாக தெரியவில்லை.....

நம்ம நாட்டுல தான் 50 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சி அந்த காசை புள்ளைங்க கிட்ட கொடுத்து புட்டு பெரியவங்க தீண்டத்தகாதவர்களாக பல முதியோர் இல்லத்துல இருக்குறாங்க.........ஏன் இந்த கஷ்டம் நம்ம மக்களுக்கு மட்டும்!.......தன் புள்ளைங்க வாழ்கைய நெனச்சிக்கிட்டு எந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காம காச சேத்து அதுங்க படிப்பு, எதிர்காலம் இத நெனச்சிகிட்டே வாழ்ந்துடுறாங்க........... 

இந்த நிலைமை மாறனும்.......ஒரு பக்கம் குடும்பத்த பத்தி கவலைப்படாத குடிகார கூட்டம்......இன்னொரு பக்கம் குடும்பத்த பத்தியே நெனச்சிக்கிட்டு சோறுதண்ணி நேரத்துக்கு திண்ணாம வாழ்கைய ஓட்டுற கூட்டம்..........

என்னதான் பையனுக்கும் பொண்ணுக்கும் செய்ஞ்சி வச்சாலும் கடைசில நமக்கு நல்ல கதி இல்ல...........முடிஞ்ச வரைக்கும் நமக்கு கெடைச்ச இந்த மனுசப்பய வாழ்கைய சந்தோசமா அனுபவிக்கனும்............

"பேக்கட்டுல பத்து ரூபா இல்லைன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க...."

கடைசில நாமெல்லாம் "வால்மீகி" தான்!

என்னதான் குடும்பத்துக்கு செஞ்சாலும்......கடைசில சொல்லுவாங்க பாருங்க ஒரு வார்த்தை.......இது உங்க "கடமை" அப்படின்னு......அந்த வார்த்தைக்குள்ள தான் நம்ம வாழ்கையே அடங்கி கெடக்குதோ...........!

என்னோட தாழ்மையான கருத்து என்னன்னா கடமைய செய்யுங்க...........அதே நேரத்துல அந்த கடமை உங்கள எதிர்காலத்துல காப்பாத்தும்ங்கர எண்ணத்தை தூக்கி போட்டுடுங்க...........உங்களுக்காகவும் கொஞ்சம் சேமிச்சி வச்சிக்கோங்க.........


ஏன்னா நீங்களும் உங்கள நம்பி வர்ற மனைவியும்(நல்லா கவனிங்க உங்கள நம்பி!)............மட்டுமே நிஜம்..........மத்ததெல்லாம் "passing clouds"................

குழந்தைங்க மேல அன்பு வைங்க........ஆனா அவங்க தான் நம்ம எதிர்காலம்ங்கர எண்ணம் வைக்காதீங்க..........நம்மளோட கனவுகள அவங்க மேல திணிக்காம........அவங்கள ஒரு Product அப்படின்னு நெனைக்கறத விடுத்து.......அவங்கள அவங்க சொந்த கனவுகளோட வாழ விடுங்க........

கனவு மெய்ப்பட வேண்டும்..............


"வாழ்கை வாழ்கை இன்பமடா........வாழ்வது அவரவர் கையிலடா........வாழ நினைப்பவன் மனிதனடா...........வாழ வைப்பவன் தெய்வமடா............."

கொசுறு: வாழ்கையே கொஞ்ச காலம்தான்........இந்த வாலிபம் கொஞ்ச நேரம்தான்.......! 

Post Comment

Friday, May 27, 2011

பொய் நல்லதா....!

வணக்கம் நண்பர்களே...........



வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது.......அதுவும் உண்மை மட்டுமே பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்த முன்னோர்கள்...........காலம் மாறும், காட்சி மாறும்........உலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு உண்மை பொய்யாகும் என்பதை சொல்லவில்லையோ என்று ஒரு சிந்தனை அதுதான் இந்த பதிவுக்கு காரணம்.......

நம்மில் பலர் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்........உதாரணமாக.......உண்மை பேசுபவனிடம் "தான்" என்ற சிறு அகந்தை இருக்கும்.......அவனுக்கு நடிக்க தெரியாது..........அதனால் பார்ப்பவர்கள் இவனுக்கு என்ன ஒரு திமிர் என்று கூற வாய்ப்பு அதிகம்.......ஏனெனில், உண்மைக்கு ஒரு பழக்கமுண்டு அது வீரம்............


அதாவது யாருக்கும் பயப்படாமலும் தன் மனசாட்சிக்கு மட்டும் நேர்மையாக வாழ்பவரில் நிறய பேர் அவப்பெயர் மட்டுமே கிடைக்கபெறுகிறார்கள்..........

உதாரணமாக...........

ஒரு கம்பனில வேலை செய்யுரவங்கல்ல யாரு உண்மை பேசுவாங்கன்னு மேலதிகாரிக்கு தெரியும். அந்த நல்லவன மட்டுமே பல துட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கூடவே வச்சி இருப்பாங்க.......அதே நேரம் வியாபார விஷயம் பேசும் போது கிட்ட சேக்கறது அதிகமா இருக்காது.....அப்படியே சேத்தாலும்.....அவர்கிட்ட சொல்லி இருப்பாங்க........ஏதும் பேசக்கூடாதுன்னு..........


என் நண்பர் ஒருவர் உண்மை மட்டுமே பேசுவேன்னு தீர்க்கமா இருந்து வர்றார்......இது வரை 27 வேலை மாத்தி உள்ளார்.......என்னிடம் கடந்த வாரம் வேலை நிமித்தமாக உதவி கேட்டார்..........

மாப்ள.......உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆளு கிடையாது.......

இல்ல சொல்லுடா கேட்டுக்கறேன்.......

இப்போ உன்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு...........

அதனால............

மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

அப்போ என்னை விளங்காதவன்னு சொல்ற.....இத நீ சொல்றது தான்டா கஷ்டமா இருக்கு............

இல்லடா.......என்ன பண்றது சில நேரத்துல........எனக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்......பல மொள்ளமாரிகள் கூட வேல செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும்..........அப்போ நான் அமைதியா இருந்திடுவேன்.....நீ என்னை சந்தர்ப்பவாதின்னு கூட நெனச்சிக்க..........

நான் பொய் சொல்ல மாட்டேன்......எந்த நிலைமையிலும்.......!..எனக்கு உன்னால வேலை வங்கி தர முடியுமா முடியாதா................

என்னால முடியும்..........ஆனா..அது வியாபாரம்........அதுவும் பெரிய அளவுல நடக்குற தொழிலுக்கு ஆள் தேவை..........நீ அங்க சில நேரம் வளைந்து கொடுத்து ஆகணும்.......

அது முடியாது.............

டேய்..........உன் பொண்டாட்டி ரொம்ப கஷ்டப்படுராடா...........பாவம்டா உன்ன நம்பி வந்ததுக்கு அவ வேலைக்கு போயி உனக்கு சாப்பாடு போட்டுட்டு இருக்கா.....ஏன்டா இப்படி இருக்க.......கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து போ......அதுதான் வாழ்க்க..........

நான் படிச்ச படிப்புக்கு........என் உண்மைக்கு கெடைக்காத வேலை.......வளைஞ்சி கொடுத்தாத்தான் கெடைக்கும்னு இருந்தா அது வேணாம்..........

எலேய்....இதெல்லாம் நீ தனியா இருந்தா ஓகே..........இப்போ உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கு........ஒரு குழந்த இருக்கு..........மவனே இப்படி பேசிட்டு இருந்தா......இதுக்கு பேரு விதண்டா வாதம்...........

என் நல்ல குணங்களை பார்த்து தான் என் பொண்டாட்டி என்னை கல்யாணம் பண்ணிகிட்டா.......இன்னிக்கி வரைக்கும் அவள் எதுவும் சொல்லல.......


அடங்கோ.......அதான்டா நீ இப்படி இருக்க.....காதலிக்கும்போது நீ நல்ல ஆண்மகனா இருந்தா போதும்.......ஆனா திருமணம் ஆனா நல்ல குடும்பஸ்தனா இருக்கணும்.......உன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..........அதான் உன் பொண்டாட்டி அமைதியா இருக்கா.........அவ சம்பாதிக்கற துட்டுல எத்தன நாளு இப்படியே ஓட்டுவ வாழ்கைய......நமக்காக இல்லாட்டியும் குடும்பத்துக்காக சில நேரங்களில் வளைஞ்சி போகுறது தப்பு இல்லடா மாப்ள..........

சரி முடிவா என்னை என்ன செய்ய சொல்ற..........

கொசுறு: நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!

Post Comment

Thursday, April 21, 2011

சென்னை என்னை போடா வெண்ணை என்றது - 3

வணக்கம் நண்பர்களே..............


தடம் மாற தொடங்கிய தக்காளி...........

இதற்க்கு இடையில் கொஞ்ச கொஞ்சமாக கலைமகள் என்னை விட்டு விலகி சென்று கொண்டு இருந்தாள்............அதாங்க படிப்பு எனும் செல்வம் என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தது.............பள்ளி மாத ரேங்குல இருந்து என் பெயர் வெளியேறியது...........

6 வது வகுப்பில் இருக்கும் போது அம்மாவின் சொந்தக்காரர் மூலமாக வெளிநாட்டு மக்கள் கொடுக்கும் படிப்பு உதவித்தொகை எனும் விஷயம் எனக்கு கிடைத்துக்கொண்டு இருந்தது.........அதாவது அதில் ஒரு வருடம் தேர்ச்சி பெறவில்லை என்றால் உதவித்தொகை நிறுத்தப்படும்.............


முதல் வகுப்பில் இருந்தே தமிழ் வழிகல்வியில் பயில ஆரம்பித்து இருந்ததால்......என் தந்தை என்னுடைய தம்பியை தொடக்கத்திலிருந்தே ஆங்கில வழிக்கல்விக்கு சேர்த்து விட்டார்.........எனக்கு வந்த உதவித்தொகையில் இருந்தே அவருக்கு பணம் கட்ட ஆரம்பித்தார்கள்...........

அவர்களை சொல்லி குற்றமில்லை.......ஒரு பிள்ளையாவது ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை தான்...........அதுவுமில்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அந்த உதவித்தொகை கொடுத்து வந்தார்கள்..........பிறகு இந்த தமிழ், ஆங்கில வழிப்படிப்பே எங்களை பிரித்தது.......(நானொரு முட்டாப்பய ஹிஹி!)

பத்தாவது பாஸ் ஆயிட்டா போதும்னு கும்பிடாத சாமியில்ல அம்மா(!)......அப்போ அப்பா கடவுள் சித்தம் போல நடக்கட்டும்னு சொல்லிட்டு இருந்தாரு..........அப்பத்தான் எங்க அக்கா எனும் அறிவாளி பெண் எங்கள் குடும்பத்தில் நாட்டாமை போஸ்ட் வாங்கினாள்(மாமாவின் மனைவி)..........

இன்று............


வாத்தியார்.....அவருடைய இடத்தில் நடைபெற்று வந்த கராத்தே வகுப்பு மாஸ்டர கூப்பிட்டார்............இந்த பயலுக்கும் சொல்லிக்கொடு என்றார்..........துட்டு நான் பாத்துக்கறேன் என்றார்...........நீங்க சொல்லிட்டீங்க அதுவே போதும் அய்யா என்றார் அந்த மாஸ்டர்...........அடுத்த நாள் அங்கு பயிற்சி ஆரம்பித்தேன்.........


முதல் வகுப்பிலேயே அந்த கராத்தேகாரியை கண்டேன் அங்கே...........உடல் நடுங்கியது......அவள் பெயர் சித்ரா.......ஹாக்கி சித்ரா என்றார்கள்...........அவள் என்னை பார்த்து முறைத்தாள்.......மற்ற அனைவரும் கொஞ்சம் வசதியானவர்கள்......நான் மட்டும் அந்த வகுப்புக்கேற்ற உடை அணிய இயலாதவன்.........நான் சொல்லியும் கேற்க்காமல் அந்த உடையையும் வாத்தியார் வற்புறுத்தி வாங்கி கொடுத்தார்.........அடிதடி ஆரம்பமானது(வகுப்புலங்க ஹிஹி!)

இதனிடையில் என் அக்கா(மாமி) அடிக்கடி என்னை கண்காணிக்க ஆரம்பித்தாள்......காலையில் நான் எடுக்கும் தற்க்காப்பு பயிற்ச்சியில் இருந்து என்னை தொடர ஆரம்பித்தாள்...........அந்த வாத்தியாரிடம் நேரே சென்று பேசி இருக்கிறாள்.......அவர் என்னை கூப்பிட்டு கல்வி ரொம்ப முக்கியம் என்றார் .......நானும் சரி என்று அப்போதைக்கு மண்டையாட்டினேன்......அப்போதைக்கு படித்து 10 வது பாஸ் செய்தேன்.....


11 வது ஆரம்பித்த புதிதில் ஒரு நாள் லேப் இருக்கும் இடத்தில் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தால்.......உள்ளே ஒரு மாணவியை துரத்திக்கொண்டு இருந்தான் ஒரு காமுக ஆசிரியன்....

தொடரும்................

கொசுறு: கொட்டப்படும் உண்மைகள் படக்கதைகள் அல்ல எனவே......நம்புவது தங்கள் விருப்பம் நண்பர்களே........இனி சனியின் ருத்ர தாண்டவம்.......படங்கள் அருளிய Google.com க்கு நன்றி!

Post Comment

Tuesday, April 19, 2011

சென்னை என்னை போடா வெண்ணை என்றது - 2

வணக்கம் நண்பர்களே...........இந்தப்பகுதிக்கு வரவேற்ப்பு அளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.............தொடர்கிறேன்.......


வாத்தியார்................இந்த பெயர் அங்கு ரொம்ப பிரபலம்............அவர் ஒரு முன்னாள் ரவுடி என்று ஊருக்கே தெரியும்.......ஆனாலும் அவருக்கு எல்லோரிடமும் பயம் கலந்த மரியாதை இருந்தது.......அவருக்கு ஒரு கை ஒரு கால் நரம்பு துண்டிக்க பட்டதால் அவரால் சராசரியாக நடக்க இயலாது..........


இன்றைய படங்களில் நம் தலைவலி நடிகர் ட்ரெயினில் ஜம்ப் செய்வது போல இவரு அந்த காலத்தில் காவலர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு ட்ரெயினில் இருந்து அடுத்த ட்ரெயின்னுக்கு ஜம்ப் அடித்து விட்டாராம்.......அதனால் ஒரு முறை கைது செய்யப்பட போது மருத்துவமனையில் வைத்து இரு நரம்புகளை கட் செய்து விட்டார்களாம்......

ப்ளாஷ் பேக் ஓவர்..........

தொடருகிறது கலிகாலம்:

"தம்பி எனக்கு ஒரு உதவி செய்றியா"

சொல்லுங்க அய்யா......

எனக்கு தினமும் காலையில் பால் வாங்கி வந்து தருவியா............

வாங்கி தரேனுங்க.....(அப்போது பால் டோக்கன் முறை 4 மணிக்கு பூத்தில் போய் நின்றால் தான் கிடைக்கும்)

இப்படி ஆரம்பித்த அவருடைய தொடர்ப்பு வலுவானது.......(சனி உச்சத்துக்கு போய் கொண்டு இருந்தது!)

கொஞ்ச கொஞ்சமாக அவர் எனக்கு ரோல் மாடலானார்..........

ஒரு நாள் ரோட்டில் கிரிகெட் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ரப்பர் பந்து அந்த பக்கம் சைக்கிளில் போன அந்தப்பெண் முதுகில் பட்டது..........வலி பொறுக்காமல் சைக்கிளை நிறுத்திய அவள் இறங்கி வந்தாள்...........என்னைப்பார்த்து யாரு பந்த அடிச்சது என்றாள்..........நான் ஒரு நிமிடம் தயங்கினேன்....விட்டா ஒரு அறை(செவிலு பழுத்திருச்சி!).....


என்னா அடி அது.....அத்லட்டு கையி இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சது..........என் நண்பன் ஓடி வந்து.........ஏன்...இப்ப எதுக்கு அடிச்ச பந்து தெரியாம உன் மேல பட்டுடுச்சி.......என்னா தைரியம் உனக்குன்னு சொல்லி அடிக்க கை ஓங்க........அதுக்குள்ள ஒரு கிக்கு விட்டா அந்த கராத்தேக்காரி.......தொப்புன்னு சத்தம்.....திரும்பி பாத்தா அவன் கீழ விழுந்து கிடக்குறான்.........பிச்சிடுவேன்னுட்டு கெளம்பி போயிட்டா...........(மானம் போச்சி மரியாத போச்சி!.....எப்ப இருந்தது டவுட்டு!)

எனக்கு எதோ பேய் அறைஞ்சா மாதிரி நின்னுட்டு இருந்தேன்.......அவன தூக்க கூட இல்ல...........அவனே எழுந்துட்டான்........

டேய் பொண்ணாடா இது பேயி அம்மா என்னமா வலிக்குது...........என்றான்...


சாயந்திரமா........வாத்தியாருகிட்ட இந்த விஷயத்த சொன்னேன்..........அதுக்கு அவரு......உனக்கு நெஞ்சில தைரியமே இல்ல.........வெறும் உடம்ப வளக்காத உள்ள தைரியத்த வளன்னு சொன்னாரு.......

அது எப்படி அய்யா..........

நான் சொல்லித்தாரேன்...........

(தடம் மாற ஆரம்பித்த தக்காளி.........)

தொடரும்.............


கொசுறு: எல்லாரும் நல்லவரே.......இது உலக பழ மொழி.......எல்லோரும் சூழ்நிலைக்கேற்றவரே இது தனி மொழி..........(போட்டோ நான் எடுக்கல்ல ஹிஹி!)- படங்கள் உதவிய google.com க்கு நன்றி.

Post Comment

Monday, April 18, 2011

சென்னை என்னை போடா வெண்ணை என்றது! -1

வணக்கம் நண்பர்களே............



என்னுடைய அனுபவங்களை பதிய வைக்கிறேன்........உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பதிலுரை இடவும்.......(உனக்கு எப்பவுமே தமாசு தக்காளி ஹிஹி!)

காலம்: கலி காலம்....


8 வது வகுப்பிலிருந்தே எதோ ஒரு வேலை செய்து என் சொந்த செலவுகளுக்கு வைத்து கொள்வது வழக்கமாகியது(தந்தை வேண்டாம் என்றாலும்!).......அப்போ காட்டன் துணிகளுக்கு அயர்ன் போடும் வேலை ரொம்ப அதிகமா நடந்துட்டு இருந்துது........அம்மாவுக்கு தெரிஞ்சவங்க என்னைப்பார்த்து....ஏய்யா கண்ணு லீவு விட்டா வாய்யா கொஞ்சம் துட்டு கெடைக்கும் என்றார்கள்..........(ஊரில் இருந்த மரியாதைக்கும் நாங்க சென்னையில் வாழ்ந்த இந்த வாழ்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம்!)

நானும் வீட்டில் சொல்லிவிட்டு செல்வேன்.........வாரத்தில் மூன்று முறை அந்த வேலைக்கு சென்று வந்தேன்.........ஒரு துணிக்கு 50 பைசா தருவார்கள்......அதுவும் அந்த துணியில் ஒரு வித சாய வாடை அடிக்கும்......முதலில் சந்தோஷமாக வேலைக்கு வந்த பலர் அதிகமாக ஜலதோஷம் கண்டு நின்று விட்டார்கள்..........

அதிலும் நான் ஜெயித்ததாக நினைத்து கொண்டேன்(ஒரு குழந்தைக்கு தாய் தந்தை கொடுக்கும் சிறந்த சொத்து ஆரோக்கியமான உடல் மட்டுமே!).........அப்பா அடிக்கடி சொல்வார்.......தம்பி என்னால உனக்கு பல விஷயங்கள் வாங்கி கொடுக்க முடியல.....இருந்தாலும் நீயே இந்த வயசுல போயி சம்பாதிக்கறது கஷ்டமா இருக்கு....அந்த துட்டு உன்னோட உழைப்பு......அத நெனச்சிக்கிட்டு படிப்ப விட்டுடாதே என்பார்........அதே நேரம் உடம்பு முடியாம படுத்துடப்போறே ....பாத்துக்க சுவரு இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும்....உடல் ரொம்ப முக்கியம் என்பார்......(இப்போ குடலு முக்கியம்!)

அந்த நேரத்தில்........வீட்டுக்கும், எங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் நான் ரொம்ப நல்ல பிள்ளையாக தெரிந்தேன்.....காரணம் நம்ம ரோலு அப்போ நல்லா இருந்துது(இப்போ டவுட்டு!) தெய்வ பக்தி என்பது..என்தாயால் எனக்கு புகட்டப்பட்டது(திணிக்கப்பட்டதோ!)......தினமும் காலையில் 5 மணிக்கு கிரவுண்டில் இருப்பேன்.......கிட்டத்தட்ட 8 கிமீ ஓட்டம் பிறகு குளியல்.....வேட்டியை(இன்று வரை கைலி பிடிக்காது!) கட்டிக்கொண்டு கோயிலுக்கு சென்று வருவேன்....


பல நண்பர்களின் ஏச்சுக்கு ஆளான சமயம் அது....பாருடா அந்த புள்ளைய......காலையில எழுந்து என்னமா நடந்துக்குது.........நீயும் இருக்கியே என்று பல நண்பர்களை நொறுக்கிதள்ளும் அப்பாக்கள்(ஹிஹி!)......அதைக்காணும் போது ஒரு வித இறுமாப்பு.....மாலையில் கிடைத்த வேலைகளை செய்வேன்.....என் தாய்க்கு உடலில் 6 அறுவை சிகிச்சைகள் என்பதால்.........அவர்களால் துணி தோய்ப்பது......வீட்டு சாமன்களை கழுவி எடுப்பது என்பது கடுமையான போராட்டம்.......


பல குடும்பங்கள் இருந்த காம்பவுண்ட்டில் பல பெண் நண்பிகளுக்கு இடையே நான் இந்த வேலைகளை செய்வேன்....பலர் கிண்டலடிப்பார்கள்...இவன் பொண்ணா பொறக்க வேண்டியவன் என்று......என்னை பொறுத்தவரை அந்த பேச்சுக்கள் என்னை இன்னும் உற்சாகப்படுத்தவே செய்தன.....காரணம் என்தாய், தந்தை இருவரும் பாவம், அவ்ளோ நல்லவங்க மற்றும் வீட்டில் நடக்கும் கஷ்டத்தை வெளியில் காட்டிக்கொள்ளாத சாமர்த்தியமான வாழ்கையை எண்ணி வியந்ததால்....

தினமும் ஓடும் மைதானத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு உண்டு......வாத்தியார் என்று பலரால் அன்போடு அழைக்கப்பட்ட ஒருவர் வாழ்ந்து வந்தார்.....யாருடனும் பேச மாட்டார்....(அவர் மனைவி மற்றும் குழந்தை ஒரு விபத்தில் இறந்ததனால்!).......ஒரு நாள் என்னை அழைத்து.....தம்பி எனக்கு ஒரு உதவி செய்வியா என்றார்.....?


தொடரும்......

கொசுறு : வாழ்கையில் எல்லாம் சந்தோஷமே....வாழும்வரைக்கும்!....கடைசி போட்டோக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்க(தப்பிச்சிட்டேன் ஹிஹி!)

Post Comment

Saturday, December 18, 2010

பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!?

நண்பர்களே அரசியல் பதிவு எழுதும் அனைவரின் பதிவுலக விஷயங்களும் ட்ராக் செய்யப்படுகின்றன.


தயவு செய்து யாரை தாக்கி எழுதும்போதும் உங்கள் பதிவுலக முகவரியை மறிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உங்களுடைய எழுத்து அரசாங்கத்துக்கு எதிராக இருப்பின் இரவோடு இரவாக நீங்கள் கைது செய்யப்பட்டு அரசாங்க விருந்தினராக சரியாக முட்டிக்கு முட்டி தட்டி
விசாரிக்கப்படுவீர்கள் என்று தெரிகிறது.


தயவு செய்து முடிந்த இடத்தில போய் பதுங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
யாராவது பயப்படுபவர்கள் இருந்தால் எனபதிவுக்கு வந்து தைரியமாக பதுங்கி இருக்கும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

யம்மா மகமாயி காப்பாத்து என் சக சொந்தங்கள...........

Post Comment

Friday, December 17, 2010

அமெரிக்கனும் நானும் (ஆப்பு யாருக்கு!?)

வந்தவங்க அத்தன பேருக்கும் வணக்கமுங்க .

நானு இப்போ தனியாளு(கூட்டம் இந்தியால இருக்கு) என்று இருப்பதால் நிறைய இடத்துக்கு நண்பர்களின் அழைப்பின் பேரில் செல்வதுண்டு.





அப்படியாக நேற்று ஒரு கெட் டு கெதர் இடத்துக்கு போக வேண்டி வந்தது. அது வெளிநாட்டுக்காரங்க நிறையபேரும், நம்ம நாட்டுப்பயபுள்ளைங்க யாரும் வராததினால நான் மட்டும் வகையா போய் மாட்டுனாப்புல ஆயிடுச்சி. சரி நாமத்தான் ரொம்ப ஸ்டடியாசேன்னுட்டு நானும் ஒரு ஆரஞ்சு ஜுஸ கைல வச்சுக்கிட்டு ஒவ்வருதருகிட்ட போய் ஹாய் சொல்லிக்கிட்டு இருந்தேன்.


என் கெட்ட நேரம் ஸ்டீவன் என்னை பார்த்துட்டாரு. அவரு நம்ம ராபர்ட்டு பிரெண்டு (கேபரே பாக்க போன சோகத்தோட நாயகன்). கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கும் போது எப்பவும் போல பேச்சி அரசியலு பக்கம் வந்துச்சி. அவரு கேட்டதுக்கு நான் அப்படியே ஷாக்காயிட்டேன்(வடிவேலு பாணியில்). அந்தாளு என்னடான்ன நம்ம ஊரு ஸ்பெக்ரம் ஊழல பத்தி புட்டு புட்ட வைக்கிறான். நானும் என் தரப்புக்கு அவங்க ஊரு நாட்டாம விஷயத்த விக்கிலீக்கு போட்டு கிழிச்சதப்பத்தி உடு உடுன்னு உட்டேன்(நாமயாரு!!! ஆமா நாம யாரு?). 

இந்த விஷயத்துல பல பெரிய நாட்டு பத்திரிகைகள் நம்ம நாட்டு ஊழல் விஷயத்த பெரிய அளவுல கொண்டு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். சரி விஷயத்துக்கு வரேன் ....


அவரு அவங்க அரசியல்ன்னா என்னன்னு சொல்லிட்டு இருந்தாரு அதுல அவரு சிந்துன சில முத்துக்கள் மற்றும் அதோட நம்ம நாட்டு அரசியல் ஒரு ஒப்பீடு:

அங்க தனி மனித ஒழுக்கம்ங்கறது நம்மள விட கம்மி ஆனா அரசியல் ஒழுக்கம்கிறது ரொம்ப அதிகம் - நம்ம லெவெலுக்கு சொல்லனும்னா மக்கள் எப்படி வேணா இருப்பாங்ககல்யாணம் செய்யாம புள்ள பெத்துக்கறது, கல்யாணம் செய்யாமலேயே பல வருஷம் சேர்ந்து வாழறது, கலவு(sex) பற்றி கவலைப்படாமல் எத்தன பேரு கூடவாவது உறவு வைத்திருத்தல், போதை விஷயங்கள் என்று பல விஷயங்கள் நம்ம நாட்டைவிட அதிகம்(அமெரிக்கர்கள் மன்னிக்கவும்)

அதே நேரத்துல ஒரு அதிகார வர்கத்துக்கு வர்றவங்களோட தனி மனித ஒழுக்கும் சிறந்ததாக இருக்கவேண்டும்னு ஒரு வரையறை இருக்கு (உதாரணம் - கிளிண்டன் மோனிகா மேட்டர்).


இங்க(இந்தியால) மக்கள் முடிஞ்சவரைக்கும் ஒரு மனைவியுடன் வாழறாங்க (பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான் அதுவேற..). நேர்மை, நியாயம், உண்மை இது பேச்சு மட்டும் இல்லாமல் செயலிலும் இன்னும் தனி மனித ஒழுக்கம் நம்ம மக்கள் கிட்ட அதிகம் - அதே நம்மள ஆளும் அதிகாரா வர்க்கம் இந்த விஷயங்களுக்கு நேர்மாராத்தான் இருக்கு (உதாரணம் கலைஞர், லாலு


எந்த இடத்துல நமக்கு ஆப்பு விழுதுன்னு பாக்கும் போது நம்ம நாட்டு மக்களோட வறுமையும், அப்பாவித்தனம் மட்டுமே மேலோங்கி காணப்படுது

இந்த இரண்டையும் சரியா பயன் படுத்திக்கும் அரசியல் வியாதிகள நம்மளால ஒன்னும் செய்ய முடியல. இத தலவிதின்னு ஒதுக்கவும் முடியாம ஒதுங்கவும் முடியாம இப்ப இருக்க generation தவிக்குது.இதுக்கு என்ன பண்றதுன்னு இது வரைக்கும் யாருக்கும் தெரியல(பொதுவான தேசவிரும்பிகளுக்கு).


அதும் இல்லாம அவர் சொன்ன விஷயங்கள் - அமெரிக்கால கல்வி என்பது ஸ்கூல் வாழ்கைவரைக்கும் பெரிய அளவுக்கு செலவு என்பது இல்லன்னும், அதுக்கு பிறகு கல்லூரிப்போகும்போது (குறிப்பாக engineer, doctor) அதுக்காக அந்த குறிப்பிட்ட நபர் வங்கி மூலமா கடன் வாங்கித்தான் படிக்கிறார்ன்னும் சொன்னார். அந்த நபர் கடன் பெற்று படித்து முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்து சம்பாரித்து அந்தக்கடனை திரும்ப அடைக்க பல வருடங்கள் தேவைப்படும் என்றும் சொன்னார்.

பாவிங்க இங்க LKG குழந்தைகிட்ட 1 லட்சம் பிச்ச கேக்குற கல்வி முறை என்ன கொடும. அப்படியே பள்ளிக்கல்விய முடிச்சிட்டு கல்லூரிக்கு போகணும்னு முடிவு பண்ணா எவன் கல்விக்கடன் குடுக்குறான். அப்படியே எங்கேயோ கடன வாங்கி படிச்சி முடிச்சா வேலை என்பது இன்னும் சரியான அணுகுமுறைக்கு வரலை. 


யப்பா தல(என் கழுத்துக்கு மேல இருக்கறதா சொன்னேன்) சுத்துது. கடைசில கருத்து யுத்தத்துல வழக்கம்போல என்னென்னமோ பேசி அவர ஒரு வழி பண்ணிட்டேன்(நாமத்தான் என்னதான் ஆப்பு வாங்குனாலும் அத வாங்குனா மாதிரியே காட்டிக்க மாட்டோம்ல).

கடைசில அவரு யப்பா உட்டுடுன்னு சொல்லிட்டாரு...........(என்ன அவரு அடிச்சது விஸ்கி நான் குடிச்சது ஜூசு - நம்புக்கப்பா நிசம்தான்)

கொசுறு: என்னதான் சொன்னாலும் மனசு கேக்கல இந்த அடிமை வாழ்கை என்று மாறும் என் இந்தியனே.

Post Comment