Followers

Showing posts with label பதிவர் கசமுசா. Show all posts
Showing posts with label பதிவர் கசமுசா. Show all posts

Saturday, August 27, 2011

பதிவரே என் பதிவுக்கு வரமுடியுமா...முடியாதா!!

வணக்கம் நண்பர்களே.......




இந்தப்பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்....என்ன நண்பர்களே ஆரம்பிப்போமா...

இந்த தமிழ்மண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே...7 வது ஓட்டுக்கு ஆளா(!) பறக்கும்படி ஆயிடுச்சி(ஹிஹி நான் உற்படத்தான்!)..ஏன்னா அப்போத்தானே முதல் பக்கத்துல வர முடியும்.....


நான்(!) உற்பட எல்லா நண்பர்களுமே ஒரு வித பிடிமானத்துக்க்காகத்தான் பதிவுகளை இடுகிறோம்...இருந்தாலும் பய புள்ளைங்க ஒருத்தர் நம்ம பதிவுக்கு வந்து போய் இருக்காரே....அவருக்கு எம்புட்டு வேலை(!) மற்றும் நேர 
விரயம்(!௦ )தாண்டி வந்துட்டு போயிருக்காரு அப்படின்னு அவரு பதிவுக்கு வர்ரதில்லன்னு பெரிய விவாதமே நடக்குது(எங்க!)...

இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...


பதிவெழுத மேட்டர்(விஷயம்!) வேண்டி யோசிக்கும் மக்கள் இந்த அன்னா(அண்ணா அல்ல!) எழுதாம தவிர்த்து வந்ததையும் காண முடிஞ்சது....இந்த விஷயத்துல எதாவது போட்டு(எழுதி!) கெட்ட பெயர் வந்துருமோன்னு பயந்தவங்களையும் தெரிஞ்சிக்க நல்ல வாய்ப்பா அமைஞ்சது கடந்த 15 நாள்கள்(!).....


சரி விஷயத்துக்கு வரேன்(கொட்ட வேண்டியது கொட்டிட்டேன்!)....முடிஞ்ச வரை அடுத்தவர் பதிவுக்கு போயிட்டு அவங்க வரலன்னு அவச்தைப்படாதீங்க...அவங்களுக்கு பல இன்னல்கள் நடந்திருக்கலாம்...

நேரம் இல்லாம இருக்கலாம்

நெட் கட்டாயிட்டு இருக்கலாம்

ஒரு நாளைக்கு 100 பதிவுகளுக்கு போறதில மறந்து(!) இருக்கலாம்...

வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....

etc..........



அதனால உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)

கொசுறு: இவை எனக்கு நானே கொட்டிக்கொண்ட கொட்டுக்கள்(அப்படியும் வச்சிக்கலாம்!)ஹிஹி!....குட்டிச்சுவர் தொடர் திங்கள் வரும் என்று தெரிவித்துகொள்கிறேன்(கொல்கிறேன்!)

Post Comment

Tuesday, May 17, 2011

பதிவருக்கு நேர்ந்த கொடுமை!

வணக்கம் நண்பர்களே......


இந்தப்பதிவு ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டது.......அதனால் சம்பந்தப்பட்ட பதிவர் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்(ஹிஹி!)........வாங்க நெசத்த பாப்போம்...........

சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்குள் நுழைகிறார்..........

பதிவர்: ஸ் ஸ் ஸ் யப்பா என்னா வெயிலு......முடியல முடியல.........


மனைவி: வாங்க என்ன ஆச்சி இம்புட்டு டயர்டா இருக்கீங்களே.........

பதிவர்: என்ன பண்றது வேலையோட சேந்து வெய்யிலும் கொல்லுது............சரி விடு.......

மனைவி: எங்க ஓடுறீங்க..........

பதிவர்: அதுவா காலையில ஒரு பதிவ போட்டு போனேன்......என்ன ஆச்சின்னு நிலவரம் பாக்கத்தான்........

மனைவி: யோவ் என்னை கல்யாணம் பண்ணி இருக்கியா இல்ல அந்த ப்ளோகய்யா.......சொல்லுய்யா.......


பதிவர்: இங்க பாரு என்ன பதிவ பாக்கவிடு.......

மனைவி: முதல்ல இதுக்கு பதில் சொல்லுட்டு போங்க..........

பதிவர்: இப்ப என்ன ஆச்சின்னு இந்த விஷயத்த பெரிய விஷயமா பேசுறே..........

மனைவி: இனிமே நீங்க ஒரு நாளைக்கு ஒரு மணி நேரந்தான் அந்த Computer தொடணும்........அவ்ளோதான் சொல்லிட்டேன்.......


பதிவர்: என்ன நீ என்ன அதிகாரம் பண்ற..........அதெல்லாம் முடியாது.......எனக்கு பதிவு போடணும் Computer விடு...........

மனைவி: இது இருக்கறதுனால தானே இவ்ளோ பிரச்சனே..........

(விசுக்கென்று கையிலிருந்த தண்ணீர் சொம்பை அந்த கம்பியூட்டர் திரையை நோக்கி வீச அது உடைந்து போனது)

மனைவி: இப்ப என்ன பண்றீங்கன்னு பாக்குறேன்.........

பதிவர்: அநியாயமா இப்படி உடைசிட்டேயே.........நான் என்ன பண்ணுவேன்(அப்பவும் பதிவைப்பற்றி எண்ணி அழுகிறார்!)

அப்போது அவர் நண்பரிடம் இருந்து போன் வருகிறது.........

பதிவர்: ஹலோ......என்னய்யா சொல்லு!


நண்பர்: என்னாச்சிய்யா உன் பதிவுல கமண்டுக்கு ரிப்ளையே பண்ண மாட்டேங்குறே.....

பதிவர்: ஏன்யா நீ வேற கடுப்ப கெளப்புரே...........வீட்டுக்காரமா Computer உடைச்சிட்டாங்க......

நண்பர்: அப்ப நீ இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டே.....தரவரிசை போயிருமே......

பதிவர்: எலேய் நக்கல் பண்றியா.........(ஓ வென்று கத்திக்கொண்டு இருக்கிறார்.....ஹிஹி இன்று வரை!).............


கொசுறு: அந்த நல்ல மனுஷன் இவ்ளோ நடந்தும் பதிவ போன் மூலமா போட்டுக்கிட்டு மனைவி கிட்ட மொறசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காரு....யாராவது அவர பாத்தா கமெண்டுக்கு பதில் போட சொல்லுங்க ஹிஹி! 

Post Comment