Followers

Tuesday, July 26, 2011

அதிசயம் ஆனால் உண்மை! - Air lines!

வணக்கம் உறவுகளே,

கொஞ்ச நாள் முன்பு ஒரு விமான நிறுவன ஏமாற்று பற்றி பதிவிட்டு இருந்தேன்....



என்னுடைய முதல் விமானப்பயணத்தை பற்றிய பதிவுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி....இந்தப்பதிவு நான் விமான நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட கதையை தெரிவிக்கும் பதிவு!

StarredMALAYSIA AIRLINES CHENNAI to me
show details May 25

Dear Sir,
Refund details as below:
For Adult: Approximately - Rs.11900/- and Child - Rs10,000/-
Once Onward journey is commenced , please submit the ticket for Partly refund.
Documents reqiured:
1. Passport copies
2. Letter signed by the passenger which should contain ticket numbers, contact number, name as per Bank account, bank name ( scan and attach with the mail).
Please note Cheque will be issued in Passenger Name.
Any further clarification, please contact 044-42191919/42199999
Thanks and regards
Sandhya

சென்னையில் இருந்து ஹனோயிக்கு விமான டிக்கெட் வழங்கும் இடத்திற்க்கு சென்று இருந்தேன். அங்கிருந்த பெண் முதலில் சொன்னது ஒருவழி டிக்கட்டுக்கான பணம் மற்றும் ஒரு வழி டிக்கட் அளித்தால் immigration இல் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினாள். சரியென்று இருவழி டிக்கட் எடுத்தோம்...அப்போதே கேட்டேன்...எனக்கு ஒரு வழி டிக்கட் போதும்....திரும்பும் வழி டிக்கட் பணத்தை பற்றி கேட்டேன்..
அதற்க்கு அந்த பெண் 21,500 ரூபாய்கள் திரும்பக்கிடைக்கும் என்றாள்(ருபாய்  58,000 இருவழிக்கு!)..சரியென்று வீட்டவரிடம் போனில் சொல்லி விட்டு அந்த பணத்தை கட்டி விட்டு வந்தோம்....அப்போதே கேட்டுக்கொண்டேன்...நான் வியட்நாம் சென்று விடுவேன் என் பேங்க் அக்கவுன்ட் எண்ணில் அந்த பணத்தை இட முடியுமா என்று...அதற்க்கு அந்த பெண் ஒரு இமெயிலில் அந்த விஷயங்களை போட்டு அனுப்பினால்...அதன் படி பணத்துக்கான காசோலை என் தந்தையிடம் அளிக்கப்படும் என்று உறுதி கூறினாள்....

அதனை நம்பி சென்று விட்டேன்...அவளும் அதற்க்கான ஈமெயிலில் எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தாள்..

fromMALAYSIA AIRLINES CHENNAI mhticketing@gmail.com
tovenkat kumar <vbvvvmv@gmail.com>
dateTue, Jun 14, 2011 at 7:17 PM
subjectRe: Ticket refundable Matter
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details Jun 14 (5 days ago)

Dear Sir,
This is to inform you that refund is processed. Cheque is ready to collect.
You can send your person tomo to collect the cheque . The Total amount is  Rs.11532/-
Tks nd rgds
Sandhya

இப்போது எல்லாம் முடிந்து அந்த காசோலை பற்றி கேட்டால்...அந்த சகோதரியின் மேலாளர்....அவ்வளவு தர இயலாது என்றும்..ஏதேதோ இடையில் கழித்து வெறும் ரூபாய் 10,500 மட்டுமே தர முடியும் என்றும் கூறி விட்டாராம்....என்னால் இதனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

என்ன செய்வது...தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.....(என் கணவர் இதைப்பற்றி கேட்டு சலித்துவிட்டார்...கன்சூமர் கோர்ட் மூலமாக போவதானால்...யாராவது தொடர்ந்து இந்த விஷயத்தை எடுத்து செல்லவேண்டும் என்பதால் விட்டு விட சொல்கிறார்!)

நான் சிரத்தையுடன் விடாமல் தொடர்ந்து வந்தேன்.....அந்த பெண்ணை என் தந்தை நேரில் சந்தித்த போது தொடுத்த வார்த்தைகள்(நியாயமான) அந்தப்பெண்ணை நெகிழ வைத்திருக்கக்கூடும். திடீரென்று ஒரு மாதத்துக்கு பிறகு தொலைபேசி அழைப்பு வந்தது எனக்கு!

என்னவென்று கேட்டேன்,

மேடம் நான் சந்தியா பேசுகிறேன் சென்னையிலிருந்து....

சொல்லுங்கள்..என்ன விஷயம் என்றேன்!

நான் தங்களுக்காக எழுதிய மெயில் மேலிட நபரால் சிரத்தையுடன் பார்க்கப்பட்டது...அதனால் உங்கள் மீதப்பணம் கிடைத்து விடும் இன்னும் இரு நாளில் என்றாள் அந்தப்பெண்!

எனக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கிடைத்தால் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்வேன் என்றேன்!

venkat kumar
Dear Madam Sandhya, Please find the attachment. Further contact number is :
 
ReplyReply
More|
MALAYSIA AIRLINES CHENNAI to me
show details Jul 23 (3 days ago)

Madam Vidya,
Please note the balance refund amount Rs.10230/- is processed and ready to collect our end.
Kindly send your father to collect the cheque on your behalf.
Tks n rgds
sandhya

இன்று அந்தப்பணம் எனக்கு கிடைக்கப்பெற்றது. என் தந்தை அந்த பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டு வந்ததாக கூறினார்!...நானும் தொலைபேசியில் என் நன்றியை கூறினேன்! முயற்சி விடாமல் தொடர்ந்து சென்றோமானால் எல்லாம் நம் வசம் உறவுகளே!

கொசுறு: உழைத்த பணம் கண்டிப்பாக திரும்பி வரும் என்பார்கள். கிடைக்காத போது எப்படி அதை பதிவிட்டேனோ, அது கிடைத்த போது பகிர வேண்டாமா தங்களிடம்! நன்றி!

வித்யா குமார்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆச்சர்யம்தான்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உழைத்த பணம் கண்டிப்பாக திரும்பி வரும் என்பார்கள். கிடைக்காத போது எப்படி அதை பதிவிட்டேனோ, அது கிடைத்த போது பகிர வேண்டாமா தங்களிடம்! நன்றி!///////

பாராட்டுக்கள்......!

சி.பி.செந்தில்குமார் said...

எப்படியோ பணம் கிடைச்சிடுச்சு.. ம் ம்

டிஸ்கி அழகு

சென்னை பித்தன் said...

//உழைத்த பணம் கண்டிப்பாக திரும்பி வரும் என்பார்கள்.//

ஏதோ கொஞ்சம் குறைத்துக் கொண்டாவது(குரைத்துக்கொண்டு அல்ல!) கொடுத்தார்களே !முயற்சிக்கு வெற்றி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

tamilmanam inachchaachchulla..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உழைத்த பணம் கண்டிப்பாக திரும்பி வரும் என்பார்கள்.-- correctuuuuu...

காட்டான் said...

உண்மைதான் சகோதரி கஸ்டப்பட்டு உழைத்த பணம் திரும்பிவரும்தான் ஆனால் அதை திரும்ப பெறுவதற்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்திருக்கிறீர்கள்... அதை விட காசை பெற்றுக்கொண்டதையும் பதிவிட்டுள்ளீர்கள்.. உங்கள் விடா முயற்சி பாராட்டற்குரியது வாழ்த்துக்கள் சகோதரி..

காட்டான் குழ போட்டான்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

விழிப்போடு இருக்கனும்..
அமைதியா இருந்தா அத்தனையும் கூட போயிடும்...


எல்லோரும் தெரிஞ்சிக்கங்கப்பா...

கந்தசாமி. said...

கஸ்ரப்பட்டு உழைத்த பணம் கையில் கிடைத்தால் சந்தோசம் தான். அந்த பெண்ணின் பொறுப்புணர்வுக்கும் வாழ்த்துக்கள் .

HajasreeN said...

அது கிடைத்த போது பகிர வேண்டாமா தங்களிடம்! //

இதுதான் மாஸ்டர் பாயிண்ட்

koodal bala said...

மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரிய விஷயம் ..........பட் ட்ரீட்டேல்லாம் கேக்கமாட்டேன் ...ஹி ...ஹி ...

FOOD said...

உழைச்ச பணம், உள்ளபடியே திரும்பக் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

விடா முயற்சிக்குப் பரிசு வாழ்த்துக்கள்..:)

அம்பாளடியாள் said...

நல்லதொரு பகிர்வு இதில் விடாமுயற்சிக்கு
கிடைத்த வெற்றி மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று .
பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

செங்கோவி said...

//உழைத்த பணம் கண்டிப்பாக திரும்பி வரும் என்பார்கள். கிடைக்காத போது எப்படி அதை பதிவிட்டேனோ, அது கிடைத்த போது பகிர வேண்டாமா தங்களிடம்! //

இது சூப்பர்க்கா!

மைந்தன் சிவா said...

இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...

தமிழ்வாசி - Prakash said...

template மாத்திட்டு இருக்கீங்க போல... பதிவு அருமை.

நிரூபன் said...

டெம்பிளேட் சூப்பர், ஆனால் கூகிள் குரோமில் ஓப்பின் பண்ணும் போது, கொஞ்சம் டைம் எடுக்கின்றது, சரி பார்க்க முடியுமா அண்ணாச்சி.

நிரூபன் said...

வணக்கம் சகோ,

ஆச்சரியமான விடயம், உழைத்த பணம் கிடைத்திருக்கிறது, என்பதற்கப்பால், உங்களது நம்பிக்கைக்கும் நல்லதோர் பலன் கிடைத்திருக்கின்றது.

இறைவன் எப்போதும் துணையிருப்பாராக.

Abdullah said...

முயற்சி திருவினையாக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

கொசுறு அருமை....!!!

MANO நாஞ்சில் மனோ said...

உழைச்ச பணம் கண்டிப்பா திரும்பி வந்துரும்னு நம்பலாம் இல்லையா....

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் அக்கா. விக்கி மாமா அக்காவ பார்த்து கற்று கொள்ளுங்க விடா முயற்சி கண்டிப்பாக வெற்றியில் முடியும் என்பதை. உங்கள மாதிரி அடிப்பேன் மிதிப்பேன்னா எல்லா வேலையும் நடந்திடாது. அக்கா அந்த பணத்த அவருக்கு தராதிங்க ஹீ ஹீ

இப்னு ஹம்துன் said...

இதே பணியிலிருப்பவன் என்கிற முறையில் சில செய்திகளைச் சொல்ல முடியும்:

பயன்படுத்தாத விமானச் சீட்டுகளின் பண மீட்பளிப்பில் ஒவ்வொரு (விமான) நிறுவனத்துக்கும் அவற்றுக்கேயுரிய விதிமுறைகள் இருக்கின்றன தாம்.
நீங்கள் விரும்பினால் அவர்களின் அந்தக் கணக்கீட்டுத் தாளைக் கேட்டுப் பெறுங்கள். அதன் உள்விவரங்களை ஆராயுங்கள். சரியாக இருக்கவே வாய்ப்புள்ளது.

இச்சிறு அனுபவத்தையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். அந்த வகையில் எனக்கு நிறைய கிடைக்கும் - உங்களைப் போல் பய(ண)னர்களிடமிருந்தே! :-))

மாய உலகம் said...

உழைத்தபணம் கைக்கு வந்தது.. உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்

டக்கால்டி said...

Santhosham Magizhchi...
Vida muyarchi..viswarooba vetri!!!

mohan said...

வணக்கம் தோயாரே மிகவும் பயனுள்ள விஷயம் மிக மிக நன்று