Followers

Friday, December 31, 2010

ததாதிதிது...(புத்தாண்டு(English new year) பிடுங்கல்கள்!?)


முதலில் எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீங்கல்லாம் எல்லா சந்தோசத்தையும் இந்த வருசம் இரட்டிப்பா பெறனும் என்று விரும்புகிறேன்.



எல்லோரும் இந்த வருஷ குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள் என்று சபதமெடுப்பது வழக்கமாகிவிட்டது(நடக்குதோ இல்லையோ அதுவேற!!). நானும் எடுத்துதான் வைப்போமே என்றால்.....................?


அ. வீட்டுல மனைவி இந்தியா போயி திரும்பி வந்து மறுபடியும் பெரிய விக்கட்டு(அதாங்க இன்னொரு பெரியவங்க இயற்கஎய்திட்டாங்க) ஒன்னு விழுந்திடுச்சின்னு போய் இருக்காங்க. இந்த வீட்டு சாப்பாடு பறிபோய் ஏற்கனவே ரெண்டு மாசமாச்சி. அதனால bachelor ஆக இருந்த போது நல்ல சமையல்காரன்னு நண்பர்கள் கிட்ட பேர் வாங்கிய அந்த பழைய கலைய திரும்ப கொண்டு வர்றதா முடிவு பண்ணி இருக்கேன்.

ஆ. இது வரை பதிவுலகத்துல யாரிடமும் எந்த வாக்குவாதமும் நடத்தாம ஏதோ பொழப்பு நல்ல விதமா போயிட்டு இருக்க எனக்கு துணையா இருக்கும் எங்காத்தா மாரியாத்தாவுக்கு பொங்க வைக்கணும்(இந்த வருசம் முடியாது - ரெண்டு பெரிய தல போச்சே)

இ. இந்த வருடம் - ரொம்ப வருசமா விட்டு இருந்த பல நட்புகள் திரும்ப கிடச்சதுல மிகுந்த சந்தோசம். வரும் வருடமும் மீத மிருக்கும் நண்பர்களையும் கண்டு பிடுச்சிடுவேன்னு நம்பிக்கை வந்து இருக்கு.....


ஈ. எப்படியாவது தேர்தல் நேரத்துல லீவு எடுத்து சென்னைக்கு போயி என் ஓட்ட நான் பதிவு பண்ணனும்(ஆண்டாவா அதுவரை யாரும் என்னோட ஓட்ட போடாம பாத்துக்க!?)

உ. உலக பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்து பல பெரிய ஒப்பந்த வேலைகள் அடுத்த வருசம் ஆரம்பமாக இருக்கு. இதன் மூலம் என்னோட கனவு பலிசி நானும் ஒரு நல்ல அரசியல்வாதியா(வியாதியா அல்ல) என் தமிழ் மண்ணுல கால் பதிக்க முடியும்னு நம்புறேன்(எத்தன நாள் தான் அவன் சரியில்ல இவன் சரியில்ல என்பது).


ஊ. இன்னும் நாலு வருஷ கடமை நாளையிலிருந்து ஆரம்பிக்குது. அது முடிஞ்சி என் மக்களுக்கு என்னால் ஆன சேவையை செய்ய கடவுள் எனக்கு துணை இருப்பார் என்று நம்புகிறேன்.


எ. என் பழைய நண்பர்களும் இந்தியாவுக்கு இன்னும் நாலு வருடத்துல திரும்ப இருப்பதால் நல்ல பல விஷயங்கள செய்யறதா முடிவு எடுத்திருக்கோம். அதுவரை எங்க ஊர காப்பாத்து சாமியோவ்!!

கொசுறு: என்ன முடியும் இந்த மக்களால் என்பவரை, எல்லாம் முடியும் இதே மக்களால் என்பதை நிரூபிப்போம்(தும்பிக்கை போன்ற நம்பிக்கையுடன் நாளை நமதே).
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, December 30, 2010

அர செயல் வாதி - !?-

எல்லோரும் சூடாவே பதிவு போடுறாங்க. அரசியல்வாதின்னா அவ்வளவு இளக்காரமா சொல்லுங்கப்பு. இன்றைய அரசியல் வாதிகளின் செயல்களில் எனக்கு பிடித்த சில விஷயங்களை(சொல்லிப்புட்டேன் இது பொது அல்ல!) இங்கு பதிவிடுகிறேன்.




அ. தானைத்தலைவர் (தனக்கு தானேவா ன்னு எல்லாம் கேக்கப்படாது!)

ரசித்த விஷயம்: எத்தன குடும்பம் இருந்தாலும் அத அரவனச்சு போற நேர்த்தி. எவன் பாடையில போனாலும் அது தன் குடும்பத்தால அப்படி என்னும்போது ஏற்படும் பூரிப்பு(இன்னாப்பூ!) .

பிடித்தது: எவ்வளவு வயசானாலும், உடம்பு ஒத்துழைக்கலன்னாலும் யாராவது பாராட்டு விழான்னு சொன்னதும் ஆட்டோ புடிச்சாவது நாளு பேரோட போற நல்ல(!) பழக்கம்.
இத்தன வயசுலயும் மக்கள் போனாப்போகுதுன்னு விட்டுடாம தினமும் ஒரு கடிதாசி எழுதி அவங்கள பொங்க வெக்கிற திறமை...................(நெறைய சொல்லணும் ஆனா பாருங்க நல்லவங்கள பத்தி ரெண்டு விஷயம் சொன்னாபோதும்ல!)


ஆ. ராணி மகாராணி (தங்க தாரகை - மவனே எடைய மட்டும் எவனாவது கேட்டீங்க!)

ரசித்தது: அண்ணாவுக்கும், புரட்சி தலைவருக்கும் எப்பவும் போடும் நாமம் - ஐயோ நான் சொன்னது அவங்களோட மரியாதயங்க(!).
நாங்கல்லாம் கிங்கு அப்படின்னு சொல்லிட்டு இருந்த கடின உழைப்பாளிகளான
அரசாங்க ஊழியர்களை "நீங்க கிங்குன்னா நான் உங்களுக்கு ஊதுறேன் சங்கு" என்றது.

பிடித்தது: தில்லு (எவனுக்கு இருக்கு!) - இத மத்தவங்க திமிருன்னு சொன்னாலும் கவலைப்படாம போயிட்டு இருக்கறது.
சாணக்கியனுக்கே பெப்பே காட்டுற தெனாவட்டு.....


இ. லாடு லபக்கு தாஸு(ஜாதி சொல்ல விரும்புகிறேன்!)

ரசித்தது: ஆரம்பிச்சவங்கள எல்லாம் அடிச்சி விரட்டிட்டு (கோமணத்தையும் புடுங்கிகிட்டு) தானும் தன் சொந்தமும் சேர்ந்து கட்சிய கட்டுப்பாட்டுல வச்சிருக்கறது. ஆங்கில வழில டாக்குடரு பட்டம் வாங்கிட்டு இருக்குறவங்கள எல்லாம் ஆடு மாடு மேய்க்கசொல்லுறது.

பிடித்தது: ஆரம்பிச்ச தொலைக்காட்சில இன்றும் தமிழ் படங்களை போடாமல் உலக படங்களை போட்டு தமிழை வளர்ப்பது. இன்னிக்கும் நானும் ரவுடிதான்னு உதாரு உட்டுகினு சுத்தி வர்றது.


ஈ. ப்ளாக் டைசன் (கப்பல் தலைவன்)

ரசித்தது: பின்னங்கால்லையே தீவிரவாதிகள அடிச்சி விரட்டினது(படத்துலமட்டுமுங்க!).  
வயசானாலும் பாடியே ஸ்லிம்மா(எது!) மெயின்டைன் பண்றது.

பிடித்தது: யாருக்கிட்ட பெட்டி வாங்குனாலும் அத காட்டிக்காம அவங்களையே போற போக்குல திட்டிகினு போறது.
இன்னிக்கும் முதல்வர் நெனப்புலேயே இருக்கறது (நம்பிக்கைதான் வாழ்கை!)


உ. குரங்கு குட்டிகள்(பண்ணக்கார பயபுள்ளைங்க)

ரசித்தது: எந்த குட்டி யாரோட இருக்குன்னே தெரியாம கத்துறது. எவ்ளோ அடிச்சாலும் நாங்க செண்ட்ரல்ல இருந்து வாங்குற அடிமாதிரி வருமா என்பது.

பிடித்தது: சொம்படிப்பது, ஜிங் ஜக் வேலைக்கு என்று பத்து பேரை பிரியானிப்போட்டு கூடவைத்திருப்பது.

கொசுறு: கலி முத்திடுச்சி!?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நண்பர்கள்-(friends!)


அந்த கடையில் நுழைந்ததும் ஆளாளுக்கு என்ன ஆர்டர் பண்ணலாமுன்னு பிளான் பண்றாங்க........ கார்த்திக் சொன்னான் - "வந்தது எதுக்கு கதுக்கரதுக்கா இம்சைகளா சீக்கிரம் பேசி முடிங்க"




வித்யா ஆரம்பித்தாள் "என்னம்மா இவன லவ் பண்றியாமே அப்படியா" .....

ஆமாங்க அக்கா என்றாள் அந்தப்பெண்.

இன்னாது அக்காவா அடியேய் என்று பாய்ந்த அவளை அமைதிப்படுத்தினாள் zoo.

"சரி உனக்கு ஆளே கிடைக்கலியா, இவன் முகத்த பாரு கொஞ்சமாவது maturity இருக்கா மாதிரி தெரியுதா" என்றாள் வித்யா.


"நான் இவர லவ் பண்றேன் அவ்ளோதான்" - என்றாள் அவள்.

"இங்க பாரு இவனுக்கு உன் லவ்ல விருப்பம் இல்ல தயவு செஞ்சி இவன விட்டுடு, ரொம்ப பாவப்பட்ட ஜீவன் இது please" - என்றாள்.

இங்க பாருங்க இது எங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விசயம் நீங்க எல்லாம் friends ன்னு சொல்லி தலையிடுறது நல்லாயில்ல என்றாள் அந்தப்பெண்.

"ஏன்டா டேய் எங்கள பாத்தா என்னா ஊருக்கு நேர்ந்து விட்டவங்க மாதிரி இருக்கா என்றேன்" நான்.


"இல்லடா please காப்பாத்துங்க" என்றான் சிவா.

"இப்போ என்னாதான் முடிவா நீ சொல்ல வர்ற" என்றாள் சித்ரா அந்தப்பெண்ணிடம்.

"இதுதான் என் முடிவுன்னு" சொல்லிக்கொண்டே அந்தப்பெண் தான் வைத்திருந்த பேனாக்கத்தியின் மூலம் தன் மணிக்கட்டை கிழித்துக்கொண்டாள்.


ரத்தம் கொட்டியதை பார்த்த எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. அதுவரை
தெளலத்தாக பேசிக்கொண்டு இருந்த நாங்கள் அடிச்சி புடிச்சி அந்தப்பெண்ணை ஆட்டோவில் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிக்கொண்டு ஓடுவோம் என்று நினைத்துக்கூடப்பார்கவில்லை.

இப்படி ஆரம்பித்த இவ்விருவரின் லவ் இன்று சென்னை அண்ணா நகரில் குடும்ப குத்து விளக்குகளாக சிவா - மகா மற்றும் இரு குழந்தைகளுடன் மையம் கொண்டு இருக்கிறது.

ஆட்டங்கள் தொடரும்......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, December 29, 2010

நண்பர்கள்(friends) - அன்பு,பாசம், நட்பு....!?



எனக்கு இந்த காதல் விஷயத்துல ஆர்வமோ, அனுபவமோ அதிகமாக இல்லை(நம்மள போயி யாரு!). காரணம் எனக்கு எந்தளவுக்கு ஆண் நண்பர்களோ அதற்கு சரி சமமாக பெண் நண்பர்கள் இருந்த காரணத்தால் காதல் என்பது ஏதோ காமடி விஷயமாகவே போய்விட்டது(இப்போது அதுதான் வாழ்க்கையே!). 

நாங்க ஒரு பெரிய க்ரூப் என்று இருந்ததால், எங்க போகரதுன்னாலும் ஒரு படையா போவோம். இந்த படைகிட்ட மாட்டாத மக்களே இல்ல என்று சொல்லும் அளவுக்கு ரொம்ப நல்ல பேரு எங்களுக்கு(இதுக்கு காரணமே எங்க அம்மா என்ற அக்காதான்).


இன்று வரை எங்க கேங்குல இருந்த ஆண் பெண் அங்கத்தினருக்குள்ளே காதல் எனும் விஷயம் எட்டிப்பார்த்ததில்லை. காரணம் நாங்க எல்லாம் நண்பர்கள் மற்றும் சகோதர உணர்வு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எங்க கேங்குல சிவான்னு ஒரு நல்லவன் இருந்தான். எங்களுக்கு அடிக்கடி வரும் டவுட்டே இவன் எப்படி எங்க கேங்குல சேர்ந்தான் என்பது தான். ஏன்னா இவன் பேசறத்துக்கு நாங்க காசுகுட்டுக்கணும் அந்த அளவுக்கு அமைதியான ஒரு படிப்பாளி. எப்ப பாரு ஏதாவது படிச்சிட்டே இருப்பான். 


கிரிக்கெட் ஆட கூப்பிட்டாலும் அங்க வந்து ஓரமா உட்க்காந்து ஏதோ ஒரு புக்க வீட்டுல இருந்து எடுத்து வந்து படிச்சிட்டு இருப்பான். அந்த அளவுக்கு படிப்பின் மீது இவனுக்கு காதல்.

இந்த கல்லுளி மங்கனையும் ஒரு பொண்ணு லவ்வினா. திடீர்ன்னு ஒரு நாளு வந்து எங்ககிட்ட "டேய் ப்ளீஸ் நீங்கல்லாம் நாளைக்கு என் காலேஜுக்கு வர முடியுமா" அப்படின்னு கேட்டான்.

என்னடாஇது என்னிக்கும் இல்லாம என்று "என்னதான் விஷயம் சொல்லுடா" என்று ரீல் ஆனந்தி கேட்டா...........


"ஒன்னும் இல்ல ஒரு பொண்ணு என்னை லவ் பண்றேன்னு டெய்லி டார்ச்சர் குடுக்குறா கொஞ்சம் வந்து என்னன்னு கேளுங்கப்பான்னு" சொன்னான்.

"என்ன கொடும சாமி இது இவன ஒரு பொண்ணு லவ்வராலா, ஸ் ஸ் ஸ் டேய் எனக்கு மயக்கமே வந்துடும்போல இருக்குடா" என்றாள் ஹாக்கி சித்ரா.

"ஹேய் அவன்தான் சாமியாருன்னு தெரியும்ல வாங்க நாளைக்கு போய் இன்னா விஷயம்ன்னு பார்த்துட்டு வருவோம்" என்றேன்.

"இங்க பாரு அந்த ஏரியா கோடம்பாக்கம் அப்படியே படத்துக்கு எதாவது போயிட்டு வந்துருவோமாடா" என்றாள் zoo லக்ஷ்மி.

"அடிப்பாவிகளா அவன் எவ்ளோ சீரியஸா வந்து சொல்லிட்டு இருக்கான் படம் தான் இப்போ முக்கியமா போச்சா உங்களுக்கு"...........(படம் பார்த்துவிட்டு வந்தது தனிக்கதை)

"சரி யாரு அந்தப்பொண்ணு கிட்ட பேசுறது............பசங்க நாங்க போயி பேசுனா எதாவது பிரசினயாயிடப்போவுது"........ அதனால.............


"ஏய் விடு நான் பேசுறேன்" என்றாள் வித்யா.

அடுத்த நாள் எல்லோரும் அவங்க அவங்க வீட்டுல சிவா காலேஜுல cultural program என்று சொல்லிட்டு கிளம்பி போனோம்.

சிவா அந்தப்பெண்ணை சுட்டி காட்டினான். 

"டேய் போய் கூப்பிட்டு வாடா பேசுவோம்" என்றான் முனி......

இல்லடா நான் வந்து............எப்படி.....போயி................கூப்பிட்டு..............

"டேய் இது ஆவறது இல்ல ரீலு நீ போய் கூட்டு வா" என்றேன் 

கொழுப்புதாண்டா உனக்கு............


சரி சீக்கிரம் முடிங்கப்பா படத்துக்கு நேரமாகுது....என்றாள் zoo 

சிறிது நேரத்தில் அந்தப்பெண்ணுடன் வந்து நின்றாள் ரீல் ஆனந்தி.

எதிரே இருந்த "Mcrennet" உள் நுழைந்தோம்.........

தொடரும்...........

கொசுறு; இந்த உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பு நீங்கள் அளிக்கும் ஆதரவை பொறுத்தே தொடரலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் என் பார்வையில் சொல்லப்படும் இக்களம்   பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேட்கப்படுகிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, December 28, 2010

3 அழகிகள்(என்னைப்பாதித்த தோழிகள்)-!?


கொஞ்ச கொஞ்சமாக தரை இறங்கும் விமானம் போல சராசரி மனநிலைக்கு வந்துகொண்டு இருக்கிறது என் மனம். இந்த நேரத்தில் என்னைப்பாதித்த தோழிகளைப்பற்றி கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.



என் சிறுவயது முதல் கடந்து வந்த பாதையில்(முட்கள் எனும் அனுபவங்களின் கோர்வைக்கு நன்றி) பல பெண்கள் என்னை மனதளவில் பாதித்துள்ளார்கள். அவர்களின் ஒரு பகுதி தொகுப்பு இந்தப் பதிவு.


அ. சித்ரா (ஹாக்கி சித்ரா):

எங்க கேங்குல இருந்த பசங்க எப்பவுமே ஒரு புனைபெயருடன் தான் சுத்துவோம். அதுவும் நமக்கு நண்பி ஆயிட்டா கேக்கவே வேணாம்!?. அவங்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வச்சி ஓட்டுவோம்(பட்டப்பேர மட்டும்).
இவங்க சாதாரண ஆள் இல்லீங்க பயங்கர வேகமா ஹாக்கி விளையாடக்கூடிய பெண் சிறுத்தை(புலின்னு சொல்லப்படாதுள்ள!?). இவளுடைய மேட்சுக்கு மறக்காம லீவு போட்டுட்டாவது போயிடுவோம். இல்லன்னா வீட்டுக்கே வந்து அவளோட ஹாக்கி ஸ்டிக்கால மண்டயப்பொலந்திடுவா! அவ்ளோ பொறுமைசாளின்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லப்படாது இவளோட ரிவர்ஸ் ப்ளேக்கு நாங்க அடிமை(கூட்டாளிங்க கூட்டுத்தொகை 12).


ஆ. ஆனந்தி (கதை, கவிதைப்புயல்- ரீல் ஆனந்தி)

இவங்க கத சொல்ல ஆரம்பிச்சாங்கன்ன நம்ம டைரடக்கருங்க கெட்டாங்க போங்க. சீன் சீகுவன்செல்லாம் சொல்லுவா. அப்போ நமக்கிருந்த அறிவுக்கு இவ தான் எங்க கேங்குலையே பெரிய கவிப்பேரரசு. எவன் வந்து கேட்டாலும் அவன் ஆள மடக்கரத்துக்கு என்கந்து சுட்டு கொண்டு வருவா தெரியாது, சும்மா கவிதைய கேட்ட அந்தப்பய்யன்னுடைய ஆளு அப்பிடியே மயங்கி விழுந்துடுவான்னா பார்த்துக்கோங்க. யாரு சொன்னா கட்டடிக்கரதுல பசங்கதான் பெரிய ஆளுன்னு!?
இவ சூப்பரா ப்ளான் பண்ணிக்குடுப்பா, எப்படி வீட்டுல, காலேஜுல மாட்டிக்காம கட் அடிக்கறதுன்னு ஒரு புக்கே போடக்கொடிய தகுதி இவளுக்கு உண்டு.


இ. லக்ஷ்மி (வரைகலை நிபுணி- zoo லக்ஷ்மி)

இவங்க பெரிய வரைகலை நிபுனிங்க. எங்க ரெகார்டு புக்கு காலத்துல இருந்து எங்களுக்ககாவே சேவை செய்ய வந்தவுங்க. யார் எத சொல்லி வரையசொன்னாலும் சும்மா அரைமணில வரைஞ்சி அசத்திப்புடுவாங்க. இந்த அம்மணியாலதான் ஸ்கூல்ல விலங்கியல் பிரிவுல அதிக மார்க்கே வந்தது. கொஞ்சம் கூட அடுத்தவங்க மனச புண் படுத்த தெரியாத அப்பாவி. படிப்புல பயங்கர சுட்டி மற்றும் விளையாட்டுலயம் தான்.

மிச்சம்: இவங்க மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுன்னா அது இந்த மூணு அறிவாளிகளும் காதல்ங்கிற அரக்கனால எங்கள விட்டு பறந்து போன பட்டாம்பூச்சிக்கள். உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள். காலம் எனும் காலன் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை. எத்தன இழப்புகள தான் நான் தாங்குறது................. அவ்வளவு கொடியவனா நான்....................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, December 27, 2010

எங்கே அவள்!?-அக்கா அல்லது அம்!?


எதையோ தொலைச்சிட்டு கொஞ்ச நாளா தேடிட்டு இருக்கேன்னு தெரியுது. ஆனா எத தொலசேன்னுதான் ஞாபகம் வரமாட்டேன்குது. எல்லோரும் என்னை என்னா கஷ்டம் வந்தாலும் கலங்காத மடயன்னு சொல்லும்போது வந்த சிரிப்பும், நய்யாண்டியும் என்னை விட்டு சற்று ஒதுங்கி நின்று என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.



சாதாரணமா ஒரு நடிகன் படத்துல கண்ணீர் காட்சில நடிக்கும்போது, காமடி மட்டுமே நினைவுக்கு வந்த இந்த முட்டாப்பய மனசுக்கு இப்போ என்னாச்சி............

என்னவோ படிச்சே, ஏதோ முடிச்சே உனக்கு உன்னப்பதெரிஞ்சிக்கவே நெறைய காலம் ஆச்சி உனக்கு. உன் பலம் என்ன பலவீனம் என்னன்னு உனக்கு தெரியாது இருந்தப்போ, எங்கிருந்தோ வந்தாள் அவள்................


வீட்டுல கொஞ்ச காலத்துலேயே முதல்வி ஆனாள். இவ்வளவு பெரிய கூட்டுக்குடும்பத்துல அதுவும் புதிய எண்ணங்களை விதைக்கும் தலைமுறை கூட்டம் கம்மியா இருந்த குடும்பத்துக்குள்ள வந்து கோலேசுவது அவ்வளவு சுலபமில்லையே.


இந்த பெரியவங்க சாதரணமாவே நான் செய்யற எதையும் ஒத்துக்க மாட்டாங்க. அதுவும் நான் எங்க போனாலும் எதாவது ஒரு தீவட்டி என்னப்பத்தி வீட்டுல வந்து போட்டுக்கொடுத்துடும்.

இந்த நிலமையில கைதி வாழ்க்கைய உடச்சி விடுதலை காற்றை சுவாசிக்க செய்ஞ்ச அன்புள்ள அம்மா அல்லது அக்கா. நான் எப்போதுமே நினைப்பதுண்டு என்னோடு கூடப்பிறக்காமல் போனவளே!


தாய் தன் குழந்தைக்கு செய்யும் பணிவிடைகளும் அறிவுரைகளும் அவளுடைய கடமை என்பது என் கருத்து. ஆனால், இந்ததாய்க்கு என்ன கடமை என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.


"நீ சொல்ற விதத்த மாத்து அந்த வித்தை தான் மத்தவங்ககிட்ட உன் பேச்சிக்கு மரியாதைய கொடுக்கும், உன்ன தொடர்ந்து கவனிப்பாங்க"

" என்னடா எங்கள எல்லாம் விட்டுட்டு வெளிநாடு போறேன்னு ஒன்னும் வருத்தப்படாதே .........எம் மூத்த பையன் வெளி நாட்டுல நல்ல உத்தியோகத்துல இருக்கான்னு சொல்லுறதுல எனக்கு தாண்டா பெரும உங்க அம்மாவவிட"

"எந்த ஊருல என்ன வேலையா இருந்தாலும், இந்த அக்கா கூப்பிட்ட உடனே லீவு கிடைக்கிற மாதிரி கேட்டுக்க"

இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விடும்போதும் தான் பெற்ற மகனை நினைக்காமல் என்னை நினைத்தாய் என்று சுற்றமும்,நட்ப்பும் கூறியபோது நான் அலறியதை என் சொல்வேன்.


ஒரு முறையும் மருத்துவமனைக்கு நோய் என்று செல்லாதவளே. இன்று ஒரே நாளில் உன் இதயம் துடிக்க மறந்து நின்றதேன்!?

சாவே உனக்கு சாவு எப்போது!?

ஏய் காலமே ஏன் என்னை இப்படி ஒரு கருணை கொள்ளைகாரியிடம் அறிமுகம் செய்து வைத்தாய்!?................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, December 24, 2010

அக்கா - தாயா!நண்பியா!?


நான் இந்த தளத்தை என் மனசாட்சியாக கருதுவதால். என் மனதில் தோன்றுவதை, பாரத்தை இறக்கிவைக்கும் ஒரு சுமைதாங்கியாகவே நினைக்கிறேன். அதனால் நண்பர்கள் யாரும் இது ஒரு அழுகாச்சி பதிவு என்று எண்ணிவிடவேண்டாம்!



அவள் எப்போது என் வாழ்வில் வந்தாள்.....................

அது நான் 8 வது படித்துக்கொண்டு இருக்கும்போது நடைபெற்ற சம்பவம்:

டேய் குமாரு ..........

என்னப்பா ........... வா மாம்பலத்துக்கு போயி ட்ரஸ் எடுத்துட்டு வரலாம் வா.

என்னா திடீர்னு...........

மாமாக்கு கல்யானம்ல அதேன்........... அந்த திருமண நிகழ்வின் போது தான் அவளை நான் முதல் முறையாகப்பார்தது.

அதற்கடுத்து பல நாட்கள் கழித்து மாமா வீட்டுக்கு செல்லும்போது அன்புடன் அவள் அளித்த பலகாரங்களை தின்றபோது.......... அவள் கூறிய வார்த்தைகள் இன்றும் ஞாபகம் வருகிறது...

இங்கபாரு கூச்சப்படாதே .......உனக்கு என்னா வேணும் நா வாங்கி தாரேன்............ஆனா நீ நல்லா படிச்சி பெரியா ஆளா வரணும் சரியா.

எல்லோரும் சொல்லும் சாதாரண வார்த்தைதான். ஆனால் அதற்க்காக அவள் செய்த முயற்சிகள் கணக்கில் அடங்காதவைகள்.......... என் மீதும் என் படிப்பின் போக்கின் மீதும் வீட்டில் உள்ளோருக்கு நம்பிக்கை போனபோது....

இங்க பாருங்க..... இவன என்கூட அனுப்பி வைங்க நான் பாத்துக்கறேன் என்று அவள் வீட்டுக்கு கூட்டி வந்து என்னை படிக்கவைத்தது.

இவன் 10 வது பாஸ் ஆனாலே பெரிய விஷயம் என்று எல்லோரும் சொன்ன போது இவனை டிகிரி முடிக்க வைக்கிறேன் என்று அவள் போட்ட சபதம்............

என் தந்தை ஐயோ இப்படி முரட்டு பயலா போயிட்டானே என்று வருந்தும் போது.........கவலைப்படாதிங்க இந்த வயசுல அவனுக்கு பொறுப்புன்னா என்னா தெரியும்..........போக போக சரியாப்போயிடுவான் என்று தட்டிக்கொடுத்து ஊக்கு வித்த பாங்கு ...............

ஸ்பெஷல் கிளாசுக்கு போவதாக சொல்லிவிட்டு சினிமா பார்த்து விட்டு வந்த என்னை அடிக்க வந்த அப்பாவுக்கு முன் ....... ஏம்பா சினிமாவுக்கு தான் போறேன்னு என்கிட்டே சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் பணம் அதிகமா கொடுதிருப்பேனுள்ள..... 1st கிளாஸ் டிக்கட்டுக்கு போயி இருக்காலாமுள்ள என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்த அவள்.......

காலேஜுக்கு போயும் திருந்தாம சீனியரு ரெண்டு பேர காலேஜ் கிரவுண்டுல வச்சி புரட்டி புரட்டி எடுத்த போது (இதுல வீரம்னு நெனப்பு இவனுக்கு) பிரின்சிபால் என்னை காலேஜ விட்டே தூக்க முடிவு பண்ண போது ........... அங்கு வந்து எனக்காக பரிந்து பேசி உண்மையை விளக்கி ..........என் தம்பி வேணும்னு அடிச்சிருக்க மாட்டான்... நீங்க என்னப்பா பண்ணீங்க என்று விளக்கம் கெட்டு அவர்களின் அசிங்கமான (ராகிங்கு) நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி என்னை காப்பாற்றிய அவள்.

டேய் இந்த வயசுல சைட்டு அடிக்காமா சாமியாரு மாதிரி எப்ப பாரு உம்முன்னு மூடியா இருக்காத .............அது உன் எதிர்காலத்துக்கு நல்லது இல்ல ............ சந்தோசமா இரு ..........ஆம்பள.. பொம்பளன்னு பாத்து பாத்து பழகுனா நல்ல விதமா யோசிக்க வராது......வக்கிர புத்தி தான் பெருகும் என்று எனக்கு நடு மண்டையில் ஆணி அடித்தாட் போல உணர வைத்த அவள்.........


இன்று எங்கு சென்றாள் இந்த முரட்டு தம்பியை பார்க்காமல்............

தொடரவா வேண்டாமா.............தெரியவில்லை..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மானிட்டர் மூர்த்தி!?- போடா வெங்காயம் 24/12/2010

குவாட்டர்; கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்....

மானிட்டர்: டேய் அதோட நிறுத்திக்க..



குவா: ஏன் தல?

மானி: ஏன்டா நாட்டுல என்னா நடக்குதுன்னே தெரியாதா!?

குவா: சொல்லு ......சொன்னாத்தானே தெரியும்!?

மானி: வெங்காயம் வெல இப்போ ராக்கெட்டு வேகத்துல போயிட்டு இருக்கு மச்சி. நம்ம தெருமுக்கு கோவாலு டீ கடையில பெரிய வெட்டு குத்து ஆயிப்போச்சி.

குவா: அயாயோ அப்புறம் என்னதான் மேட்டரு!

மானி: நம்ம ரவி, கடையில இருந்து ஒரு பஜ்ஜி எடுத்து துன்னுபுட்டு காசு கொடுக்காம கிளம்பிட்டான். அதுக்கு நம்ம கோவாலு ஏன்டா காசு குடுக்கலன்னு கேட்டா - இது வெங்காய பஜ்ஜின்னு சொன்னியே வெங்காயம் எங்கன்னு கேட்டுப்புட்டான். கோவாலுக்கு வந்துதே கோவம். ஏன்டா துன்னியே துட்ட குடுத்தியா போயிட்டே இரு. இந்த வெங்காயத்த எல்லாம் பெரியாரு கிட்ட போயி கேளுன்னு நம்ம கலைஞர் கணக்கா சொல்லிப்புட்டாம்பா.

குவா: இதுல தலிவரு எங்கப்பா வந்தாரு!

மானி: அட கூமுட்டி .... பேப்பரு காரங்க தலிவர பேட்டி எடுக்க போயி கீறாங்க. அப்போ வெங்காயம் வெல ஏறிபோச்சே என்னதலிவா பண்ணப்போரிங்கன்னு கேட்டுகீராங்கோ. தலைவரு அதுக்கு போயி பெரியாரு கிட்ட கேளுன்னு கிண்டலா சொல்லிகிறாரு. அப்புறம் என்னொரு மேட்டரு ரெண்டு பொம்பளைங்க பேசிகிட்டு இருந்தத நாம எதுக்கு கண்டுக்கரதுன்னு வேற சொல்லிகிறாரு.

குவா: இதுலருந்து என்னா தெரியவருதுன்ற!

மானி: டேய் மக்கு....அவரு என்னா சொல்ல வராருன்னா....ஓட்டு போட்ட மக்களே அதப்பத்தி கவலைப்படாம "மானாட" பார்த்துன்னு கிறாங்க. நீங்க ஏய்யா கவலைப்படுரீங்கன்னு சொல்றாரு. அதுவும் இல்லாம ராடியாவும், சின்ன மேடமும் ஏதோ கடைல என்னா புச்சா சேல வந்துகிதுன்னு பேசிகினு இருந்ததப்போயி இவ்ளோ பெரிசாக்கிபுட்டீங்கலன்னும் சொல்ல வராரு.

குவா: நம்ம பயபுள்ள இன்னிக்கு ஒரே டார்சருப்பா?

மானி: ஏன்?

குவா: பைக்குக்கு போடற பெட்ரோலு காச விட அந்த பைக்கு போற தூரம் கம்மியாகிதாம்பா!

மானி: ஆமாம். மச்சி 3 ரூவா ஏத்தி புட்டாங்கள்ல அதான். அதுவும் இல்லாம அதப்பத்தி கொஞ்சம் கூட மத்தில கவலப்படரா மாதிரியே தெரியல....

குவா: நம்ம சூப்பர பத்தி அவா இவா ஏதோ சொன்னாராமே!

மானி: ஆமாம்பா சூப்பருக்கு அரசியல்ல பயமாம். ஆனா இந்த சுனா சானா எல்லாரும் நினைக்கிறமாதிரி காமடிப்பீசு இல்லப்பா.

குவா: பின்ன!?

மானி: இவரு முன்னால் பிரதமர பகைசிக்கிட்ட போது, அந்தம்மா இவர பார்லிமெண்டுல கூட்டம் முடிஞ்ச உடனே கைது செய்ய சொல்லிட்டாங்க!
ஆனா இந்தால புடிக்க முடியல.... ரெண்டு நாளு கழிச்சி அமெரிக்கால இருந்து அறிக்கை உட்ட பெருசுப்பா இது.

குவா: நம்ம அன்பு என்னா சொல்லிகிறாரு பாத்தியா!

மானி: நானும் பாத்தேன், மத்த கட்சி வளர்ச்சி எல்லாம் நின்னு போச்சாம். இவங்க கட்சி வளர்ச்சி தான் இப்போ மக்கள் கிட்ட பெருசா பேசப்படுதாமே.
எனக்கு தெரிஞ்சி எவ்ளோ கஷ்டம் மக்களுக்கு வந்தாலும் கிச்சி, கிச்சி மூட்டும் காமடி கச்சி இவங்க மாதிரி யாரு இருக்கா சொல்லு. இவங்க கட்சில டெய்லி ஒரு லட்சம் பேரு சேர்ராங்கலாம்பா..... அப்புறம் இவங்களுக்கு எதுக்கு கூட்டணி சீகிரதுல தமிழ் நாடே இவங்க பின்னாடின்னு வேற கைப்புள்ள கணக்கா பெசிகினுகிறாங்க.

குவா: சினி நியுசு எதுவுமில்லையா?


மானி: அதான பாத்தேன் இன்னும் கேக்கலேன்னு! நம்ம உலக அழகி கொண்டு வந்த ட்ரசு பொட்டி விமான நிலையத்துல கானாமப்போசாம்பா. அப்புறம் வேற புது மாடல் ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு நிகழ்ச்சிக்கு போனாங்களாம்.

குவா: இதுல்ல என்னா பெசலு!

மானி: இந்த பய புள்ளைங்க இந்த மேட்டர என்னமோ அவங்க ட்ரஸ்சே இல்லாம நின்னா மாதிரி நியுசு போட்டுடுசிங்க. என்னா பண்றது பிரபலமுன்னாலே கஷ்டம்தான்.


கொசுறு: போடா ஜொள்ளு (நாந்தேன்). வேற என்னத்த கேக்கப்போறேன் காசா பணமா ஓட்டும், கருத்தும் மட்டும்தேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, December 23, 2010

சமர்ப்பணம்- 50 வது பதிவு


என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.



என் பதிவுகளை மதித்து, எவ்வளவு மொக்கைபதிவாக இருப்பினும் அதைத்தாங்கிக்கொண்டு என்னைப்பின்தொடரும் கலியுக கடவுள்கள்(அவர்தான நாம என்னா சொன்னாலும் அமைதியா போவாரு) 48 பேருக்கும் நன்றி.

இந்த மாதத்தில் தான் நான் நிறைய பதிவுகள் (உட்டாலக்கடி!?) எழுதிஉள்ளேன். இதற்கு முழு முதல் காரணமான என் மனைவிக்கு நன்றி(ஒன்னரை மாதங்களாக இந்தியா சென்று இருந்தார்).

இத்துடன் எனது சிறிய சுயபுராணத்தை (அதாங்க பயோடேட்டா!?) இணைத்துள்ளேன்.

பெயர்: குமார்.

வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects)

உப வேலை : ப்ளாக் எனும் பெயரில் ஊர் வம்பை விலைக்கு வாங்குவது(கொல்றாங்களே ,காப்பாத்துங்க, காப்பாத்துங்க).

தலைவர்கள்: தமிழ் ஆர்வலர்கள்.

உப தலைவர்கள்: மனைவி மற்றும் மகன்.

வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!)

நண்பர்கள்: ப்ளாகில் ஓட்டும் கருத்தும் சொல்பவர்கள்.

பலம் : எதையும் தாங்கும் மனைவி கிடைத்தது.(யப்பா ஐஸ் போதுன்னு நெனைக்கிறேன்)

பலவீனம்: சொந்தங்களை பிரிந்து வேலை(பணம்) காரணமாக வெளிநாட்டில் உழைப்பது.

சமீபத்திய சாதனை: நானும் ஒரு ப்ளாக்கர்.

நீண்ட நாளைய சாதனை: முன்கோபத்தை விட்டது.

பாதித்த விஷயம்: சகோதரி சமீபத்தில் இறந்தபோது வேலை விஷயமாக அணை பார்வையிட சென்றதால் கைப்பேசி இரண்டு நாள் எடுக்காமல் போய் சாவுக்கு கூட இந்தியாவுக்கு போக முடியாமல் போனது.


சாதித்தது:  இதுவரை நண்பர்களைத்தவிர ஒன்றுமில்லை (ஐயோ கல்யாணம் மறந்துட்டனே!)

கொசுறு: வழக்கம்போல ஓட்ட குத்துங்க, கருத்த மறக்காம சொல்லுங்க.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, December 22, 2010

மானிட்டரு மூர்த்தி!? - இன்று 22/12/2010



வாங்க மச்சான் வாங்க...............

மானிட்டர்: என்னப்பா வரும்போதே போகசொல்ற?

குவாட்டர்: ஐயோ வாங்கன்னு தானே பாடுனே!?
மானி: அடுத்தவரி என்னா? வழியப்பத்து போங்கன்னு இருக்குல்ல!

குவா: சாரி மச்சான்.  சரி விஷயத்துக்கு வாங்க!

மானி: மச்சி நேத்து ரெண்டு பெரிய காமெடி நடந்திருக்கு....

குவா: என்னாது அது?


மானி: ஒன்னு நம்ம ஜாதி தலைவரு மேட்டரு, இன்னொன்னு நம்ம காமடி அரசியல்வாதி இளங்கோ....

குவா: சொல்லுங்க விலாவரியா.............

மானி: நேத்து ஒரு மீடிங்குல பேசும்போது ஜாதி தலைவரு சொன்னாரு - எங்க கட்சி மாதிரி கொள்கை, குடி எதிர்ப்பு இந்த மாதிரி பல விஷயத்துல கொள்கை பிடிப்போட இருக்குற கட்சி எங்குல்து. யாராவது இந்த மாதிரி ஒரு கட்சி வேற எங்காவது இருக்குன்னா எங்க கட்சி கலைச்சிட்டு அங்கு பூட்ரோம்னு சொல்லிப்புட்டாரு.

குவா: ஐயையோ அப்புறம்....

மானி: ஸ்ஸ்ஸ் ............ முடியல ... சின்னப்புள்ளதனமால்ல இருக்கு இவரோட காமடி. தேர்தலுக்கு தேர்தலு காவடி தூக்கிட்டு இந்த வயசுலயும் ரெண்டு திராவிட கட்சிங்க வாசல்ல போய் நிக்கற இவரு பேசுராருபா இப்படி. விஷயம் என்னான்னா போற போக்கப்பாத்த ரெண்டு பக்கமும் சேக்கலன்னு வெச்சிக்க... டெபாசிட்டு போயி....இப்படி ஒரு கட்சி இருந்ததுன்ற சேதி வந்துடுமோன்னு இவருக்கு பயம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்.

இளங்கோ என்னடான்னா அதிமுக, காங்கிரசு கூட்டணி வர வாய்ப்புன்னு சொல்லி காமடி பண்ணிக்கிட்டு இருக்காரு.

குவா: ஏன் வராதுன்றியா! அந்தம்மா அத தானே விரும்புது!

மானி: டேய் கும்மாங்கோ ........ இப்ப இருக்க நிலமையில ஏற்கனவே தங்கள உத்தமனுங்கோன்னு மத்தில இருக்கவங்க காட்டிக்க படாத பாடு பட்டுட்டு இருக்காங்க. எங்க இந்த ராசா போட்டு குடுத்து அப்புரூவரா மாரிடுவாரோன்னு தானே அவருக்கு சிபிஐ மூலமா பயம் காட்டிட்டு இருக்காங்க.

குவா: இதுக்குள்ள இவ்ளோ விசயம் கீதா..........

மானி: அரசியல்ன்னா சும்மாவா......எவ்ளோ செலவு பண்ணி ஆட்சிக்கு வந்து இருக்காங்க...நாம நல்லா இருக்கவா இவ்ளோ செலவு பண்ணி அரசியல்ல இருக்காங்க.

குவா: ஆமா விசயீ மேட்டரு ஒன்னுமில்லயாபா....

மானி: அத ஏன் கேக்குற இந்த நடிக சங்க கிரிகெட்டு அணி பத்தி சொல்லுறப்போ நம்ம சமத்துவ நடிகரு முதல்ல சூர்யா பேரையும் அப்புறமா விசயீ பேரையும் அழுத்தமா பேசிகிறாரு. அப்போ எல்லாரும் நெனச்ச மாதிரி நானும் நெனச்சேன்...........

குவா: என்னனு..............

மானி: ஒரு படம் போச்சுன்னாவே இந்த பய புள்ளைங்க சம்மந்த பட்ட நடிகர எப்படி வறுத்து எடுக்கலாமுன்னு வயுத்தெரிச்சல்லோட திரிவாங்க. இப்போ வேற... ஆள்றவங்க கூட வேற அந்த நடிகருக்கு லடாய். அதனால இத்தாண்டா சமயம்னும் குத்துறாங்க. 


குவா: கமலுக்கு ஏதோ பாட்டு விஷயத்துல கேசு போடறத சொன்னாங்க! 

மானி: ஆம்மம்பா கமலு வேற வழி இல்லாம அந்த அர்த்தம் பொங்கிய நாட்டுக்கு முக்கியமான கருத்த சொன்ன பாட்ட படத்துலருந்து தூக்கிட்டாராம். என்ன பண்றது படம் யாரோடது தெரியும்ல! அதனாலதான்! 

குவா: ஏம்பா இந்த வெலவாசிப்பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற!?

மானி: மச்சி அதுக்கு என் மனைவி அவங்க தளத்துல பேசப்போறேன்னு சொல்லிபுட்டாங்க அதேன்.... நாம எப்பவுமே அம்மா பேச்சையும், அம்மணி பேச்சையும் தட்டுறதில்ல அதேன்....

குவா: அது என்ன தளம்?

மானி: http://dandanakavijay.blogspot.com/   இன்னிக்கு மீண்டும் ஆரம்பிக்க போறாங்க.....

கொசுறு: என் வீட்டு அம்மணி என்னுடன் நடைபெரும் போட்டி காரணமாக பல விஷயங்களை அவர்கள் தளத்தில் பகிரப்போவதாக சொல்லி இருக்கிறார்கள். முடிந்தால் விசிட் செய்யவும்... ஒரு விளம்பரம்தேன்..ஹிஹி ....கறிகாய்தான் வாங்கிகொடுக்கரதில்ல இப்படியாவது உதவுவமேன்னுதேன்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, December 21, 2010

ஆண் தோற்ற பெண்!?-அப்படியா?-18++



இந்த காதையில்(கதை அல்ல) வரும் கதா பாத்திரங்களை ஒரு பார்வையாளனாக எங்கு எது வரும் என்று போட்டு புரிந்து கொள்வது உங்கள் அறிவுக்கு உகந்ததாகப்பார்க்கப்படும்.



அது ஒரு மாலைபொழுது:

ஏன்டா முருகா அந்தா தொலைவுல வருதே அந்த பொண்ணு என்னா அழாக இருக்குது இல்ல.....

அண்ணே இப்ப சொல்லுங்க தூக்கிட்டு வந்துடறேன்.........

டேய் நெறைய விவரம் தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கு.. பாத்து ஜாக்கிரதை!

விடுங்கண்ணே நாம பாக்காததா....

ரெண்டு நாளு கழிச்சி ஒரு ஷூட்டிங்கில்:


ஏன் பாட்டி நானு ஒரு IAS ஆகனும்ன்னு கனவுகண்டுகிட்டு இருந்தேன் என்னை ஏன் ஸ்கூலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்ட...........

இங்க பாரு கண்ணு நீ படிச்சி வேலைக்கு போயி தான் சம்பாதிக்கணும்னு இல்ல .... பாரு சீக்கிரத்துல நீ பெரிய பணக்காரி ஆகப்போறே பாரு!

அதுதான் இப்பவே பணம் நம்ம கிட்டே இருக்கே போதாதா.........

இது போதாது கண்ணு..............

ஒரு பின்னிரவில்:

இங்க பாரு... எங்க போறே இந்த ராத்திரியில.....?


ஹும்...... என் தலையெழுத்து எனக்கு வாச்ச அம்மா அப்படி! வாழ்கைய நல்லா வாழ சொல்லிக்குடுக்க வேண்டிய பாட்டி கூட்டி குடுத்துட்டு போயிட்டா............

அதுக்கு ஏன் கவலைப்படுறே நான் இருக்கேன்..........

யோவ் நீ எதுக்கய்யா லாயக்கு........உன் மனச தொட்டு சொல்லு...... உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்......... நான் பாட்டுக்கு படிச்சுகிட்டு இருந்தேன் என்ன கூட்டியாந்து இப்போ எந்தப்பக்கமும் போக முடியாதபடி ஆக்கிட்டீயே!?

இப்போ என்ன ஆச்சின்னு இப்படி கோவப்படுறே.......


போய்யா..................நீ ஒரு ஆம்பிளையா...... சொல்லு.......... நாய் நக்கரதுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.........உன்னால ஒரு சராசரி மனுஷன், அவன் கூட இருக்க பொண்ணுக்கு குடுக்குற சந்தோசத்த குடுக்க முடியுமா........எவ்ளோ பணக்காரனா இருந்தா என்னாயா......... என்னாத்துக்கு வேணும் உன் பணம்......... என் வாழ்கையையே நாசம் பண்ணிட்டீயே.......நீ நல்லா இருப்பியா.............என்ன விட்டுடு............

அவன் திக்கித்து நின்றான் அவள் அந்த இடத்தை விட்டு சென்று நெடு நேரமாகியது.

என்ன அண்ணே அந்தப்பொண்ண விட்டுடீங்க,,,,,,,,,,

இல்ல முருகா........இன்னிக்கி அவ கேட்ட கேள்விகளால என் உடம்பு அப்படியே கரண்டு அடிபட்ட எலிக்கனக்கா நின்னுடுச்சி.

மூன்று வருடம் கழித்து:

ஏன்டா அங்க பாரு............


ஆமாண்ணே ஒரு பொண்ணு மயங்கி கெடக்கு.......

அண்ணே அதே பொண்ணு தான்னே.....

சரி தூக்கு வீட்டுக்கு கொண்டு போவோம்.

கொஞ்ச நேரம் கழித்து:

என்ன ஆச்சி ..............

என்ன ஆகணும்.........நான் நம்பிய அத்தன ஆம்புளைங்களும் என்னை ஒரு போகப்பொருளா பாத்தானுங்களே தவிர உயிருள்ள ஒரு பெண்ணா பாக்கலியே..... நான் என்னா செய்ய.......எல்லாம் என் தல விதி!

கவலைப்படாதே என் கூடவே இரு உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கும்..........

இனி இருக்கேன் ..... இருப்பேன்


(மனதுக்குள் - என் எதிர்காலம் மற்றும் குறிக்கோள் - ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்)

கொசுறு: இது ஒரு மனசாட்சியின் குரல்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, December 20, 2010

மானிட்டரு மூர்த்தி!? - 20/12/2010



குடிகாரக்குடிலில் நுழைந்தார் மானிட்டர்...............

மானிட்டர்: என்னமா கண்ணு சவுக்கியமா...............



குவாட்டர்: சவுக்கியம்தாம்பா நீ எப்டிகிறே!?

மானிட்டர்: நல்லாகிறேன். அப்புறம் என்னா விஷயம்?

குவாட்டர்: ஒன்னும் சொல்றத்துக்கு இல்லபா ஒரே மழையா கீதா அதனாலதான் கடப்பக்கமா வரமுடியல! சரி ஆரம்பிப்போம்... சொல்லு என்னா நியுசு?

மானிட்டர்: நம்ம தளபதி நடிகரு பத்தி தாம்பா பெரிய பேச்சா இருந்துச்சி, நான் கூட இந்தாளு அரசியல்ல இறங்கி நாலு காசு செலவு பண்ணி காமராசரு கணக்கா வருவாருன்னு நெனச்சா!

குவாட்டர்: ஏம்பா இன்னா ஆச்சி!?

மானி: அவரோட அப்பாரு திடீர்ன்னு எம்புள்ள இப்போதைக்கு வராது நாளு கிழம வருசம் பார்த்து தான் வரும்ன்னுட்டாறு.

குவா: ஏம்பா எல்லாத்திலையும் சூப்பர பாலோ பண்ணலாம்னு நினைக்கிறாரோ என்னமோ !


மானி: இது இப்படின்னா... நம்ம பசு நேச நடிகரு பாவம்பா ஆக்சிடெண்டு ஆயி இப்போ ஆசுபிட்டல்ல இருக்காரு. நல்ல வேல அந்தம்மா உதவி பண்ணுறாங்க. பாரு அவரு வெறும் ஆறு மாசம்தான் M.P யா இருந்ததால அவருக்கு அரசாங்க உதவி எதுவும் கிடைக்காம போயிடுச்சி. ஆனா அவரோட தீவிர கட்சி விசுவாசம் அவர இன்னிக்கும் காத்துக்கிட்டு இருக்கு.

குவா: ஆமாம் நம்ம முருங்கைக்கா புகழ் டைரடக்கரு எப்டிகிராறு?

மானி: வாயும், அறிவும் உள்ள புள்ள பொழசிக்கும். அவரு வர்ற தேர்தல்ல ஆளும் கட்சிக்கு ஆதரவா தான் பிரச்சாரம் பண்ணப்போறதா அறிவிச்சு இருக்காரு. ஆனா அதேநேரம் தீவிர அரசியலுக்கு வரமாட்டாராம்.

குவா: இதுல என்னா செய்தி?

மானி: கவனிச்சி பாரு எம்மாம் பெரிய நடிகருங்க படம்லாம் ரீலீசு பண்ண முடியாம இருக்கும் போது, இவரோட படம் ரீலீசு ஆகிருக்கு. அதாவது நான் உங்ககிட்ட எந்த பதவியும் கேக்க மாட்டேன். தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யும் போது வந்து போற செலவ மட்டும் பாத்துக்கங்கன்னு அர்த்தம்.

குவா: போப்பா ஒரே சினிமா நியுசா சொல்ற!

மானி: மச்சி நம்ம சச்சு குட்டி சும்மா பின்னி எடுத்து 50 ஆவது சதம் போட்டுட்டாரு தெரியுமா.

குவா: ஆமாம்பா எல்லாரும் பேசிகினு இருந்தாங்க. சும்மா சொல்லகூடாது வயசு ஆக ஆக சும்மா பின்றாப்புல. இந்த மொக்க பசங்க அந்த மன்சன சும்மா ரீடைறு ஆகச்சொல்லி இம்ச கொடுக்காம இருந்தா சரி.

மானி: என்னாதான் சொல்லு நம்ம நாடு பெரிய பணக்கார நாடு தாம்பா!

குவா: யாரு சொன்னா?

மானி: நம்ம சாமியில்ல , அதாம்பா இவா அவா!
அவரு சொல்லிகிறாரு... பல பேரு ஊடு, மனைவி மக்களை விட்டுபுட்டு வெளிநாடு போயி எதாவது சம்பாதிச்சி கொண்டு வந்து நம்ம நாட்டுல கடைசி காலதுலாயாவது நிம்மதியா வாழலாம்னு உழச்சினுகிறாங்க.

குவா: அதுக்கு என்னா?!

மானி: அவரோட சைட்டுல சொல்லிகிறாரு... நம்ம தேசிய அன்னை அவங்க சொந்தகாரங்களுக்கு இந்திய பணத்துல இருந்து 18,000 கோடி கொடுத்து இருக்காங்களாம். இதுல இவங்க ஊழல ஒழிக்கப்போறதா சீனு வேற. கண்ண கட்டுதடா சாமி!?

குவா: அப்போ கிளம்பலாமா!?

மானி: கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சின்னா நாம எவ்ளோ ட்ரை பண்ணி இருக்கணும்னு நெனச்சாலும் இருக்கமுடியாது!

கொசுறு: ஜொள்ளுங்கோ
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment