நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே -
நான் பிழைக்க வந்த நாட்டில் நான் ஒரு இந்தியன் என்பதாலேயே அதிகமாக மதிக்கப்படுகிறேன். அதற்க்கு காரணம் இந்தியர்கள் உதவும் குணம் அதிகமாக கொண்டவர்கள் என்றும் எதிரிக்கும் உணவு படைக்கும் குணம் கொண்டவர்கள் என்றும் இந்த மக்கள் என் இந்தியாவை நினைத்து கொண்டு இருக்கின்றனர்.
நான் எவ்வாறு இவர்களிடம் என் மனக்குறையை எடுத்து சொல்லுவேன்............என் நாடு என் மக்கள் மீதே மறைமுக போர் தொடுத்துக்கொண்டு இருக்கிறது. என்பதை. இந்தியனாகப்பிறந்ததை நினைத்து பெருமைப்படுவதா அன்றி தமிழனாக இந்தியாவில் பிறந்ததை எண்ணி வருந்துவதா!?
எதிரி நாடு எனும் பக்கத்து நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாலும் அவருக்கும் பல சுவை உணவு அளித்து அவர்களை பத்திரமாக திருப்பியனுப்பும் இந்தியாவா இது...............நம்ப முடியவில்லை...............என்றோ எவனோ தவறாக எடுத்த முடிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறதே................
குட்டித்தீவு ஆதி வாசிகள் என் மீனவ மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் போது எதிர்த்து குரல் கொடுக்க துப்பில்லாமல் இருக்கும் என் இக்கால முதல்வனை நினைத்து பெருமைப்படுவதா...........அல்லது ஒன்னுத்துக்கும் உதவாமல் தலையாட்டி பொம்மை கணக்கா ஆமாம் சாமி போடும் என் பிரதமனை நினைத்து கவலைப்படுவதா..............
ஒரு காலத்தில் நிலமும் நிலம் சார்ந்த இடத்தையும் நினைத்து பெருமைப்பட்ட நான் இன்று அம்மக்களின் வாழ்க்கை நிலையை நினைத்து வருத்தப்பட வைத்தது யார் குற்றம்.........விதியின் குற்றமா..........அல்லது அந்த விதியை தன் மதியால் அரசியலாக்கிகொண்டு இருக்கும் வீணர்கள் குற்றமா...........சொல் என் இந்தியத்தாயே.............உன் தங்கை என்தமிழ் தாய் கையேந்தி நிற்கிறாள் காப்பாற்று என் பிள்ளைகளை என்று...........உன் மனம் இளக வில்லையா..........இன்னும் நாங்கள் என்ன செய்தால் நீ மனம் குளிர்வாய்.........
வெறும் சில தொலைவு தூரத்தில் இருக்கும் போதே எம் தொப்புள் கொடி உறவுகள் அலறல்களை கேட்க்காமல் மானாட மார்பாட பார்த்துகொண்டு இருந்த எங்கள் தவறுக்காக நீ என் சகோதரிகளின் தாலிகளை பலியாகக்கேட்க்கிறாயா....
கடலுக்கு மீன் பிடிக்கப்போன கணவன் திரும்பி வரும்வரை என் சகோதரி என்ன கோலத்தில் பொறுத்து இருக்கவேண்டும் என்று நீ எதிர் பார்க்கிறாய் தாலியுடனா அன்றி கைம்பெண் கோலத்திலா............முடிவை நீ எடுக்க தவறினால் காலம் உன்னையும் கைம்பெண்ணாக்கும்...........
கொசுறு: மனப்பாரம் முடியாமல் கொட்டிய சிறு துளியே இது......
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |