ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா..............
வாங்க மானி பாட்டு ரொம்ப அர்த்தத்தோட கீது.............
மானி: நீ வேறப்பா நான் எங்கம்மாவ நெனச்சி பாடிகின்னு வந்தேன்..........
குவா: சரிங்க மானி..........என்னதான் நிலவரம்.......!
மானி: எதிர் பார்த்தது தான் ஆனா சும்மா சொல்லக்கூடாது அம்மாவ...........யாரு ஓவரா ஆடுனாலும் கூட்டிவச்சி சீட்டு குடுக்குற மனசு பெருசு..........இப்படித்தான் அந்த விறகு வெட்டிய வளத்து விட்டாங்க.......இதயக்கனி தலைவரு இருக்குற வரைக்கும் பம்மிட்டு இருந்த அந்தாளு இந்த அளவுக்கு உதாரு விடுறதுக்கு அம்மாதானப்பா காரணம் ஹி ஹி!
குவா: சரி...........கொஞ்சம் இழுபறியா இருந்தது போல..........
மானி: இப்பவும் கொஞ்சம் அப்படித்தான் இருக்கு............ஆனா இந்த முறை மீன் பீர் மொதலாளி நான் பண விஷயத்த பாத்துக்கறேன்னு சொன்னதால அம்மாவும் சரின்னுட்டாங்க ஹி ஹி!................A/C குடியும் டாஸ்மாக்கும் சேர்ந்து ஒரே குடியா மாறிப்போச்சி...........!
குவா: அந்த மத்திய கட்சிக்கு இன்னும் பேரம் சரியா படியளியாமே.............
மானி: நம்ம தலிவரு யாரு.........சும்மாவா...........15 சீட்டுக்கு பம்மிட்டு நின்னவருக்கு இவ்ளோ வாரி வழங்கும்போதே தெரியலியா.........இந்த முறை ரிசல்ட்டு தெரிஞ்சி போச்சின்னு...........அதான் அவங்க கிட்ட இவ்ளோ தான் முடியும்னு கறாரா சொல்லிட்டாங்க.......ஹி ஹி!...........இதுல அந்த தலைவருங்க ரொம்ப டென்சன் ஆயிட்டாங்க.........எல்லாரும் ஒரு மப்பா திரியுறாங்க...........
குவா: இந்த கட்சி தாவலுக்கு ஏதாவது தடை வருமாபா..........
மானி: என்ன இப்படி கேட்டுபுட்ட...........அதுக்கு மட்டும் தடை வந்துச்சினா நம்ம நாட்டுல அரசியல் வாதிங்கள தேடித்தான் கண்டு பிடிக்கணும்...........பாரு கடந்த முறை எதிர்ல இருந்து இந்த முகாமுக்கு வந்த பல பேரு ஒரே டென்சனா கீறாங்க..........
குவா: ஏம்பா...........
மானி: அந்தம்மா மறுபடியும் வந்துட்டாங்கன்னா கொய்யால எங்க அடிப்பாங்கன்னே தெரியாதுல்ல ஹி ஹி!
குவா: நம்ம மண்ணு சொல்லிகிறாரு பாத்தியா..........மீனவங்கள கொல்றத ஏற்க முடியாதுன்னு............
மானி: டேய்.............இப்படிதான் அடிக்கடி உதாரு விட்டுக்கனும்...........இல்லன்ன நீங்க என்னதான் செய்வீங்கன்னு கேக்குறவங்களுக்கு............பாரு நான் எத்தன முறை உதாரு உட்டுகிறேன்னு சொல்லிக்கலாமுள்ள.........இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவு வராமலா போகும்........பாப்போம்.
குவா: ஆமா அந்த சினிமா நடிக கன்னட அரசியல்வாதியாள நல்லா செட்டுலாயிட்டாங்க போல........
மானி: ஆமா, அந்த இயற்க பொண்ணுதானே..........அது ரொம்ப நாளா நடக்குது அந்த தலீவரு அந்த பொண்ணுக்கு தனி சேனலு வாங்கி குடுத்து கிறாரு.......ஹி ஹி!
குவா: பாரு மானி இவ்ளோ கஷ்டப்பட்டு இப்படி ஆயிடுச்சே கிரிகெட்டுல இந்தியா நிலைமை..........!
மானி: நேத்து ஆனத சொல்றியா...........எப்பவுமே ரெண்டு ராசி உண்டு நம்ம டீமுக்கு........ ஒன்னு கிரிகெட்டு தெய்வம் செஞ்சுரி போட்டாலே அன்னிக்கி இந்தியா உதவாங்கும்னு சொல்லுவாங்க.......ரெண்டாவது அந்த யுவி அர செஞ்சுரி போட்டாலே இந்தியா ஜெயுக்கும்னு சொல்லுவாங்க...........நேத்து ரெண்டுமே நடந்ததால ட்ரா ஆயிருச்சி...........ஆனா சரியான காரணம் என்னான்னா நமக்கு சரியான பந்து வீச்சாலருங்க இல்லாததுதான்.
குவா: சினிமா மேட்டரு.......
சரக்கு 1. 3 ஷா நடிகைக்கு குயந்த கீதாமே..........
நெசம் : விசாரிச்சதுல அது உண்மை இல்லன்னு சொல்றாங்கப்பா ஹி ஹி!
சரக்கு 2. நிசி டைரடக்கரு இந்திக்கு போறாரு!
நெசம்: இல்லைங்கோ அந்தப்படம் பப்படம் ஆனதால இன்னொரு காதல் படம் எடுக்க முடிவு பண்ணி கீறாரு.
சரக்கு 3. எம் பேரு மீனா குமாரி நடிகை சொந்தப்படம் எடுக்கப்போறாங்களாம்!
நெசம்: ஆமாங்கோ.........தெலுங்குல எடுக்குறாங்களாம்.
ஆரோக்கியசாமி சொல்றாரு:
சுறுசுறுப்பாய் வாழ பச்சை பட்டாணி சாப்பிடுங்க. தினமும் ஒரு கைப்பிடி அளவு உணவுல சேர்த்துகிட்டீங்கன்னா உங்க இதயம் பலம் பெரும். ஒல்லியாய் இருப்பவர்கள் தொடர்ந்து இதை உணவில் சேர்த்துக்கொண்டால் உடம்பு ஆரோக்கியமாக சதைப்பிடிக்கும்.
செய்தி: தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது!
கொசுறு: பொண்ணு எப்படி ஹி ஹி!(சிபி,மனோ கவனிக்க!)
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |