இங்க பாருங்கப்பா இங்க சொல்ற பல விஷயங்கள் உண்மையானவை அதனால சமூக அக்கரைகொண்டவர்களும், நாங்கள்லாம் உத்தமர்கள் என்பவர்களும் தொடர்ந்து படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபப்டுகிரார்கள் (இனி நோ problem ஹி ஹி)
என்ன உக்கார்ந்துகிட்டு இருக்க ....... ஏன் என்ன பண்ணனும் வா அங்க போய் என்ன வெரைட்டி இருக்குன்னு பார்த்துட்டு வரலாம் .............என்னாது ?
ஸ் ஸ் நான் சரக்க சொன்னேன் ....... எந்த சரக்க .......... அடப்பாவி குடிக்கிற சரக்க சொன்னேன். அதானே பார்த்தேன் யப்பா நல்லவங்களே எனக்கு என்னமோ இது சரியா படல நீங்க வேணா போயிட்டு வாங்க...
இங்க பாரு வரியா இல்லயா அவர் முறைத்தார் (என்னடா கூட்டிவந்து கும்மியடிக்க விட்டுடுவானோ!!)
அந்தப்பெண் எங்கலேயே ஒரு முறை கூர்ந்து பார்த்து விட்டு என்ன வேண்டும் என்றாள்.
(என்ன வேணும்?.......என்னதான் வேணும் ! - வடிவேலு காமடி ஞாபகத்துக்கு வந்தது)
ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொண்டு ஒரு உயர்ந்த சக்கர நாற்காலியில் அமர்ந்தேன்.
சரிப்பா ..... அப்புறம் என்ன பிளானு.......... எப்போ கிளம்பறோம்...... யோவ் இப்பதான வந்தோம் (யோவா என்னடா இது நல்லாதான போயிட்டு இருந்துது ஓ ரெண்டு ரவுண்டுக்கேவா....ம்ம் இது ஆவறது இல்ல கிளம்பிடுவோம்)
இரு போவோம் ரெண்டு ரவுண்டு தானே போய் இருக்கு (அடப்பாவிகளா இன்னிக்கு என்ன ஆகப்போகுது தெரியலையே, நல்ல படியா வீடு போய் சேந்தா உனக்கு வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லி பொங்க வைக்க சொல்றேன் சொக்கநாதா - நம்மதான் போக முடியாதுல்ல)
கொஞ்ச நேரம் போனது விளக்குகள் இன்னும் மங்கலாகின ..............(தட்டட்ட... இசை காதை கிழித்தது)
திடீரென்று அந்த காதைபிளக்கும் இசை நின்றது................. எதிரே கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த மரத்தாலான மேடையில் ஒரு பெண் தோன்றினாள்.............. அவள் மேல் மட்டும் வெள்ளை ஒளி பாய்ச்சப்பட்டது.
(அடப்பாவிங்களா என்னடா இது இவ அர குறையா நிக்கறா, இதுக்குதான் எங்கண்ணே சொல்லாம கூட்டி வந்தீங்களா, கடவுளே இந்த மொழி தெரியாத ஊருல......)
இத பாரு.... ரொம்ப நல்லவன் மாதிரியே 3 வருசமா நடிச்சினு இருக்க, இனி முடியாது என்றார் அவர்.
சரிப்பா இப்ப என்னதான் பன்னலாம்ங்கிறீங்க!?
யோவ் உன்ன ஒன்னும் பண்ண சொல்லல ...... என்னமா டான்சு போயிட்டு இருக்கு இத உட்டுப்புட்டு போலான்ற ..............
என்னங்கடா இது பாட்டே புரியல........
பாட்டாடா முக்கியம் பாருடா............. (நேரம் போகப்போக மரியாத......)
(மனதுக்குள் கேட்ட பாடல் - ஏய் ஆத்தா அத்தோரமா வாரியா....... சாரி ஒரு flow ல வந்துடுச்சி)
ஆடிய பெண் உடல் முழுவதும் கண்ணாடி வைத்த உடுப்பை அணிந்து இருந்தாள்.
கொஞ்ச கொஞ்சமாக நானும் ஜோதியில் ஐக்கியாமானேன்.,
ஒன்னு ரெண்டாச்சி ரெண்டு மூனாச்சி (சரக்கு ரௌண்ட சொன்னேன்... ஹி..ஹி)
சிறிது இடைவெளிக்குப்பிறகு வேறு பெண் என பெண்கள் மாறிக்கொண்டே இருந்தனர்( டான்சு ஆடும் மேடையில்)
அங்கே ...............
சந்திப்போம்.......
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
20 comments:
என்ன நண்பரே உண்மையான அனுபவமோ !?
/////கொஞ்ச கொஞ்சமாக நானும் ஜோதியில் ஐக்கியாமானேன்.,
.//////////
இவளவு நாட்களா நீங்க ரொம்ப கேட்டவருனு நினைத்தேன் இவளவு நல்லவரா நீங்க . சூப்பரப்பு கலக்குறிங்க சரக்கை சொன்னேன்
////திடீரென்று அந்த காதைபிளக்கும் இசை நின்றது................. எதிரே கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த மரத்தாலான மேடையில் ஒரு பெண் தோன்றினாள்.............. அவள் மேல் மட்டும் வெள்ளை ஒளி பாய்ச்சப்பட்டது. ////////
பாருட ! பயலுக்கு சரக்குப் போட்டாத்தான் வர்ணனைகள் கூட கவிதை நயத்தில் கசிகிறது .நல்ல இருக்கு நண்பரே வார்த்தை அலங்காரம்
நன்றி திரு. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ அவர்களே,
எழுதும் விஷயம் உண்மை அதில் கொஞ்சம் நம்ம நய்யாண்டி அவ்வளவே!
நண்பரே உங்க அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் ட்ரை பண்றேன் அவ்வளவே!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு காலத்தில்,
இப்போ உங்க மனைவி அவங்களோட அன்பாலயும் அடுப்பங்கரை பாத்திரங்களாலும் உங்களை திருத்திட்டாங்க... அப்படித்தானே...
// ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு காலத்தில் //
ஆஹா... அவனா நீ...
//இப்போ உங்க மனைவி அவங்களோட அன்பாலயும் அடுப்பங்கரை பாத்திரங்களாலும் உங்களை திருத்திட்டாங்க... அப்படித்தானே...//
அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.
நன்றி திரு. எப்பூடி.. அவர்களே,
எப்போ கெட்டேன் திருந்தறதுக்கு.
நாம எப்பவுமே ஓபன் டைப்புங்க.
களவும் கற்று மற - நிதர்சனமான உண்மை.
நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே,
எப்போ கெட்டேன் திருந்தறதுக்கு.
நாம எப்பவுமே ஓபன் டைப்புங்க.
களவும் கற்று மற - நிதர்சனமான உண்மை.
அருமை
ம்ம்ம்.. கலக்குங்க...
நன்றி திரு. ரஹீம் கஸாலி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி திரு. sivatharisan உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி திரு. பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி திரு. தல தளபதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனுபவம் புதுமை
தொடருமா கண்டிப்பா வந்துடுறேன் ஹிஹி
அலும்புக்கு அளவே இல்லையா..அம்பேத்கார் படத்தை வெச்சிகிட்டு அவ்வவ்வா
நன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
"அலும்புக்கு அளவே இல்லையா..அம்பேத்கார் படத்தை வெச்சிகிட்டு அவ்வவ்வா"
நீங்க இதுக்கு என்ன கூப்பிட்டு நாலு அர விட்டு இருக்கலாம் சாமியோவ்வ் !!
என்னணே தமிழ் படம் மாதிரி சென்சார் பண்ணிட்டிங்க. ஹி..ஹி...
Post a Comment