Followers

Tuesday, December 28, 2010

3 அழகிகள்(என்னைப்பாதித்த தோழிகள்)-!?


கொஞ்ச கொஞ்சமாக தரை இறங்கும் விமானம் போல சராசரி மனநிலைக்கு வந்துகொண்டு இருக்கிறது என் மனம். இந்த நேரத்தில் என்னைப்பாதித்த தோழிகளைப்பற்றி கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.



என் சிறுவயது முதல் கடந்து வந்த பாதையில்(முட்கள் எனும் அனுபவங்களின் கோர்வைக்கு நன்றி) பல பெண்கள் என்னை மனதளவில் பாதித்துள்ளார்கள். அவர்களின் ஒரு பகுதி தொகுப்பு இந்தப் பதிவு.


அ. சித்ரா (ஹாக்கி சித்ரா):

எங்க கேங்குல இருந்த பசங்க எப்பவுமே ஒரு புனைபெயருடன் தான் சுத்துவோம். அதுவும் நமக்கு நண்பி ஆயிட்டா கேக்கவே வேணாம்!?. அவங்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வச்சி ஓட்டுவோம்(பட்டப்பேர மட்டும்).
இவங்க சாதாரண ஆள் இல்லீங்க பயங்கர வேகமா ஹாக்கி விளையாடக்கூடிய பெண் சிறுத்தை(புலின்னு சொல்லப்படாதுள்ள!?). இவளுடைய மேட்சுக்கு மறக்காம லீவு போட்டுட்டாவது போயிடுவோம். இல்லன்னா வீட்டுக்கே வந்து அவளோட ஹாக்கி ஸ்டிக்கால மண்டயப்பொலந்திடுவா! அவ்ளோ பொறுமைசாளின்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லப்படாது இவளோட ரிவர்ஸ் ப்ளேக்கு நாங்க அடிமை(கூட்டாளிங்க கூட்டுத்தொகை 12).


ஆ. ஆனந்தி (கதை, கவிதைப்புயல்- ரீல் ஆனந்தி)

இவங்க கத சொல்ல ஆரம்பிச்சாங்கன்ன நம்ம டைரடக்கருங்க கெட்டாங்க போங்க. சீன் சீகுவன்செல்லாம் சொல்லுவா. அப்போ நமக்கிருந்த அறிவுக்கு இவ தான் எங்க கேங்குலையே பெரிய கவிப்பேரரசு. எவன் வந்து கேட்டாலும் அவன் ஆள மடக்கரத்துக்கு என்கந்து சுட்டு கொண்டு வருவா தெரியாது, சும்மா கவிதைய கேட்ட அந்தப்பய்யன்னுடைய ஆளு அப்பிடியே மயங்கி விழுந்துடுவான்னா பார்த்துக்கோங்க. யாரு சொன்னா கட்டடிக்கரதுல பசங்கதான் பெரிய ஆளுன்னு!?
இவ சூப்பரா ப்ளான் பண்ணிக்குடுப்பா, எப்படி வீட்டுல, காலேஜுல மாட்டிக்காம கட் அடிக்கறதுன்னு ஒரு புக்கே போடக்கொடிய தகுதி இவளுக்கு உண்டு.


இ. லக்ஷ்மி (வரைகலை நிபுணி- zoo லக்ஷ்மி)

இவங்க பெரிய வரைகலை நிபுனிங்க. எங்க ரெகார்டு புக்கு காலத்துல இருந்து எங்களுக்ககாவே சேவை செய்ய வந்தவுங்க. யார் எத சொல்லி வரையசொன்னாலும் சும்மா அரைமணில வரைஞ்சி அசத்திப்புடுவாங்க. இந்த அம்மணியாலதான் ஸ்கூல்ல விலங்கியல் பிரிவுல அதிக மார்க்கே வந்தது. கொஞ்சம் கூட அடுத்தவங்க மனச புண் படுத்த தெரியாத அப்பாவி. படிப்புல பயங்கர சுட்டி மற்றும் விளையாட்டுலயம் தான்.

மிச்சம்: இவங்க மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுன்னா அது இந்த மூணு அறிவாளிகளும் காதல்ங்கிற அரக்கனால எங்கள விட்டு பறந்து போன பட்டாம்பூச்சிக்கள். உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள். காலம் எனும் காலன் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை. எத்தன இழப்புகள தான் நான் தாங்குறது................. அவ்வளவு கொடியவனா நான்....................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

19 comments:

THOPPITHOPPI said...

லக்ஷ்மி (வரைகலை நிபுணி- zoo லக்ஷ்மி)
---------------------------------------

zoo லக்ஷ்மி

உங்க கேங்க்ள நல்லா புனைப்பெயர் வைக்கிறிங்க

வைகை said...

என்ன விக்கி இவ்ளோ சொல்லிட்டு கடசில வருந்த வக்கிரிங்க?! பிரிவு யாருக்கா இருந்தாலும் கொடுமைதான்!

நா.மணிவண்ணன் said...

பிரிவின் கொடுமை உணர முடிகிறது

எப்பூடி.. said...

வலிகள் எழுத்துக்களாய்

பதிவுலகில் பாபு said...

என்ன சொல்றதுன்னு தெரியலங்க.. :-(

ஆமினா said...

:(

ஜீ... said...

நல்லா தொடங்கி கடைசில இப்பிடி ஒரு சோகம்! என்ன சொல்றது? :-(

Philosophy Prabhakaran said...

எப்படியோ எங்களோட பகிர்ந்துக்கொள்வதால் உங்கள் மனவேதனை குறையும் என்று தோன்றுகிறது...

Philosophy Prabhakaran said...

// உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள் //

நீங்க சொல்லும் ஒவ்வொன்றுமே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது...

சி.பி.செந்தில்குமார் said...

padhivum பதிவும் எழுத்தும் அருமை + அதிர்ச்சி

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே.

பாக்கப்போறிங்கள்ள எங்க கேங்கு ஆடிய ஆட்டங்கள!

தொடர்ந்து வருக...

விக்கியுலகம் said...

@வைகைவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.வைகை அவர்களே.

மறக்க முடியாத வடுக்கள் நண்பரே!

தொடர்ந்து வருக...

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

மறக்க முடியாத வடுக்கள் நண்பரே!

பிரிவு கொடுமைதான்!

தொடர்ந்து வருக...

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.அவர்களே.

மறக்க முடியாத இறந்த காலம் நண்பரே!

தொடர்ந்து வருக...

விக்கியுலகம் said...

@ஆமினாவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே.

தொடர்ந்து வருக...

விக்கியுலகம் said...

@பதிவுலகில் பாபுவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.பதிவுலகில் பாபு அவர்களே.

விக்கியுலகம் said...

@ஜீ...வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே.

வெளியில் சிரிப்போர் உள்ளே அழும் கொடுமையே உலகம்.

தொடர்ந்து வருக...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.சி.பி.செந்தில்குமார் அவர்களே.

அதிர்ச்சிகளின் கோர்வையே இந்த முட்டாள் மனிதன்!

தொடர்ந்து வருக...

விக்கியுலகம் said...

@philosophy prabhakaran

வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே.

வெளியில் சிரிப்போர் உள்ளே அழும் கொடுமையே உலகம்.

அதிர்ச்சிகளின் கோர்வையே இந்த முட்டாள் மனிதன்!

மனவேதனை குறைக்கத்தான் முயற்சிக்கிறேன்

தொடர்ந்து வருக...