அந்த கடையில் நுழைந்ததும் ஆளாளுக்கு என்ன ஆர்டர் பண்ணலாமுன்னு பிளான் பண்றாங்க........ கார்த்திக் சொன்னான் - "வந்தது எதுக்கு கதுக்கரதுக்கா இம்சைகளா சீக்கிரம் பேசி முடிங்க"
வித்யா ஆரம்பித்தாள் "என்னம்மா இவன லவ் பண்றியாமே அப்படியா" .....
ஆமாங்க அக்கா என்றாள் அந்தப்பெண்.
இன்னாது அக்காவா அடியேய் என்று பாய்ந்த அவளை அமைதிப்படுத்தினாள் zoo.
"சரி உனக்கு ஆளே கிடைக்கலியா, இவன் முகத்த பாரு கொஞ்சமாவது maturity இருக்கா மாதிரி தெரியுதா" என்றாள் வித்யா.
"நான் இவர லவ் பண்றேன் அவ்ளோதான்" - என்றாள் அவள்.
"இங்க பாரு இவனுக்கு உன் லவ்ல விருப்பம் இல்ல தயவு செஞ்சி இவன விட்டுடு, ரொம்ப பாவப்பட்ட ஜீவன் இது please" - என்றாள்.
இங்க பாருங்க இது எங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விசயம் நீங்க எல்லாம் friends ன்னு சொல்லி தலையிடுறது நல்லாயில்ல என்றாள் அந்தப்பெண்.
"ஏன்டா டேய் எங்கள பாத்தா என்னா ஊருக்கு நேர்ந்து விட்டவங்க மாதிரி இருக்கா என்றேன்" நான்.
"இல்லடா please காப்பாத்துங்க" என்றான் சிவா.
"இப்போ என்னாதான் முடிவா நீ சொல்ல வர்ற" என்றாள் சித்ரா அந்தப்பெண்ணிடம்.
"இதுதான் என் முடிவுன்னு" சொல்லிக்கொண்டே அந்தப்பெண் தான் வைத்திருந்த பேனாக்கத்தியின் மூலம் தன் மணிக்கட்டை கிழித்துக்கொண்டாள்.
ரத்தம் கொட்டியதை பார்த்த எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. அதுவரை
தெளலத்தாக பேசிக்கொண்டு இருந்த நாங்கள் அடிச்சி புடிச்சி அந்தப்பெண்ணை ஆட்டோவில் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிக்கொண்டு ஓடுவோம் என்று நினைத்துக்கூடப்பார்கவில்லை.
இப்படி ஆரம்பித்த இவ்விருவரின் லவ் இன்று சென்னை அண்ணா நகரில் குடும்ப குத்து விளக்குகளாக சிவா - மகா மற்றும் இரு குழந்தைகளுடன் மையம் கொண்டு இருக்கிறது.
ஆட்டங்கள் தொடரும்......
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
10 comments:
தொடர்ந்து எழுதுங்க.......
உங்கள் தளத்தில் சில நேரங்களில் தமிழ்மணம் ஒட்டுபட்டை சரியாக வேலை செய்யவில்லை சரிப்பார்க்கவும்.
நல்ல முடிவுதானே இதை போய் சீரியஸ் முடிவுன்னு சொல்றீங்க ?
@THOPPITHOPPIவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே
"உங்கள் தளத்தில் சில நேரங்களில் தமிழ்மணம் ஒட்டுபட்டை சரியாக வேலை செய்யவில்லை சரிப்பார்க்கவும்".
என்ன செய்ய வேண்டும் என்று சற்று விளக்கப்படுத்தினால் முயற்சிக்கிறேன்.
ஃஃஃஃஃஇப்படி ஆரம்பித்த இவ்விருவரின் லவ் இன்று சென்னை அண்ணா நகரில் குடும்ப குத்து விளக்குகளாக சிவா - மகா மற்றும் இரு குழந்தைகளுடன் மையம் கொண்டு இருக்கிறது.ஃஃஃஃ
வாழ்த்துக்கள்.. தங்களுக்கும் அவர்களுக்கும்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.
@ம.தி.சுதாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா ,
அவர்களே ,
"கண்டிப்பா வரேன் உங்க கடைக்கு"
நல்லா இருந்துச்சு
தொடர்ந்து எழுதுங்க!!!!!
நல்லா இருந்தா சந்தோசம்தான்... உங்களுடைய இந்த இடுகையை அந்த இணை படிப்பார்களா...
@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.
"நல்ல முடிவுதானே இதை போய் சீரியஸ் முடிவுன்னு சொல்றீங்க?"
>>>>>>>
"நீங்க கவனிக்கலையா, அவருக்கு அந்தப்பெண்ணுடனேயே திருமணம் ஆகிவிட்டது"
அதத்தான் சொன்னேனுங்கோ.
@ஆமினாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே ,
"நல்லா இருந்துச்சு
தொடர்ந்து எழுதுங்க!!!!!"
>>>>>
நன்றி, கண்டிப்பா எழுதறேங்கோ
@philosophy prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே,
"நல்லா இருந்தா சந்தோசம்தான்... உங்களுடைய இந்த இடுகையை அந்த இணை படிப்பார்களா..."
>>>>>>
இதப்படிச்சுட்டு நல்ல வேல அட்ரசும் பின் கோடும் போடதத்துக்கு நன்றி சொன்னாங்க!?
Post a Comment