Followers

Friday, January 7, 2011

நான் பார்த்த பாடகர்-!?(நண்பன்டா!)


நண்பர்களைப்பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. அந்த வயசுல, அதாங்க பிஞ்சு(எலேய் என்னா!) வயசுல பல கலாட்டாக்கள் உண்டு.அத இப்பவும் மறக்க முடிவதில்லை என் செய்வேன். மற்றும் நம்ம பதிவுலக நண்பருங்க நம்மள சீரியசு பார்ட்டின்னு நெனைக்கறாங்க போல. அப்புறம் நமக்கு அழுவாச்சி சங்க செயலாளர் பதவி குடுத்துடப்போறாங்க என்று பயம் வந்துடுச்சி அதேன் இந்தப்பதிவு.



அது ஒரு காலேஜு கால காலைபொழுது ..................

மச்சி எப்படியிருக்கே ..................(கேட்டான் ஹரீஷ்)

ஏன்டா பாத்தா எப்படி தெரியுது.................. நல்லாத்தான் இருக்கேன்............என்னா இன்னிக்கி கிளாசுக்கு போகலையா..........

போகணும்...............

ஏன்டா குமாரு .............ஒரு விஷயம் தெரியுமா............

என்னாது .............அதான் நம்ம காலேஜு நோடீசு போடுல போட்டு இருககாங்க பாக்காலையா......

இல்லையே சொன்னாதானே தெரியும்............

காலேசு கல்சுரல் ப்ரோகுராமு பெங்களூருல நடக்குதான்..........அதுக்கு கலந்துக்கறவங்க பேரு கொடுக்க சொல்றாங்க ................

டேய் யாருகிட்ட அவ்வளவு துட்டு இருக்கு.......

அட முட்டாப்பயலே ...........இலவச அழைப்புடா..............

அப்படியா...............சரி என்னா ப்ரோகுராமுன்னு சொல்லி பேர் குடுக்கறது................

(கூட்டம் ஒரு வழியாக கூடி முடிவு எடுத்தது )

அப்போ நாம நாட்டுப்புற நடனம் ஆட பெங்களூரு போறோம் இல்லையா ...........

ஆமாண்டா குமாரு...............இந்த ஹரீஷு இருக்கானே இவன்தான் பாட்டு பாடுறான்............

>>>>ரயிலடி ........

ஏன்டா சரக்க வாங்கி வர சொன்னா என்னாடா இவ்ளோ நேரம் ...........

லூசு சும்மா இரு................நம்ம NCC மாஸ்டரும் வாராரு டோய்..............

என்னடா இங்க சத்தம் ஏதாவது கண்டு பிடிச்சேன் பிச்சி புடுவேன்.......(என்றார் முறுக்கு மீசை)

டேய் போயிட்டாரு.......ரயிலு ஸ்டார்ட் ஆயிடுச்சி...........இந்தா, ஆளுக்கு ஒரு பீரு பாட்ல புடிங்க..........(ரயிலின் ஆட்டத்துடன் எங்க ஆட்டமும் ஆரம்பித்தது......)

எலேய் என்னா அங்கே இதோ வர்றேன்........(குரல் மீசையினுடயது)

மச்சான் வர்றாரு மாஸ்டரு........

எல்லோரும் குடித்து முடித்திருந்தனர் என்னைத்தவிர.............

டேய் அதக்குடுரா என்று பாட்டிலை எடுத்து ஜன்னல் வழியாக வீசினான் ஹரிஷ் ............

டமால்ன்னு சத்தம்.............அய்யோ அம்மான்னு அடுத்த சத்தம்................

1. பீர் பாட்டில் எதிர் வந்த கம்பத்தின் மீது மோதிய சத்தம் முதலில்...........

2. அந்த பாட்டிலின் ஒரு பீசு பறந்து வந்து அடுத்த பகுதியில் இருந்தவரின் நெற்றி ஓரத்தில் கிழித்து சென்றதால் அவர் ரத்தத்துடன் எழுப்பிய சத்தம்...........

சட்டென எல்லா விளக்கையும் அணைத்து விட்டோம்............

அவருக்கு லேசான கீறல் மட்டுமே இருந்திருக்க வேண்டும்......அங்கிருந்து வந்து வண்டி வண்டியாக மஞ்சள், சிவப்பு என்று இரு வித கலர் பூக்கள் போன்ற சொல்களால் எங்களை சந்தொசப்படுத்திசென்று விட்டார்........(ஹி ஹி)

பெங்களூர் காலேஜ் தங்கும் விடுதியில்

ஏன் மச்சி எல்லாம் சரி .........இந்த பாட்டுக்கு எப்படி ஆடுறது.......அத சொல்லிகுடுங்கடா...........

ஆடுனானுங்க , ஆடுனானுங்க எவனுக்கும் டான்சு சுட்டு போட்டாலும் வரல............

என்னதான் பண்றது...........சரி எதுக்கு பெங்களூர் வந்தோம் ..........வாங்க பப்புக்கு போவோம் என்று கிளம்பினோம்.............

ஒரு பெரிய மக்குல (mug) நெறைய பீர ஊத்தி கொடுத்தாங்க...........

மச்சி எனக்கு வேணாம் .............(என்றான் சீனு)

அடச்சீ குடி..................என்றார்கள் நண்பர்கள்.............விடுங்கடா அவன்தான் பயப்படுறானிள்ள என்றான் ஹரிஷ்.

நான் போய் மூச்சா போயிட்டு வரேன்னு போனான் சீனு............ திரும்பி வந்து அந்த கிளாச கையில எடுத்தான்.............

எல்லாம் ஒரு டிக் இடிச்சி ஒரே மூச்சில முழுசையும் குடிக்கறதா பந்தயம்............

குடிச்சி முடிச்சவுடனே.............சீனு சொன்னான் - அய்யோ அம்மா தல சுத்துது டேய் யாராவது என்ன புடிங்க என்றான்.............

அடி செருப்பால............நாயே .........குடிச்சது கோகு(coca cola) என்னமா நடிக்கிராண்டா ...........
என்றான் ஹரிஷ்

ஏன்டா நீ குடிகலையா.........

இல்ல மச்சி நான் நாளைக்கு பாடனும்ல அதான் என்றான்............

போட்டிக்கு கூப்பிடுறாங்க மேடையிலே......:

யாருக்கும் டான்சு வரல............எவனையும் காணும் எல்லாம் எஸ் ஆயிட்டானுங்க நான் உட்பட ..........அப்போ தனியாளா நின்னு அந்தப்பாட்ட சூப்பரா பாடி பரிசு வாங்குனா அந்த ஹரீஷ்(டான்சு மற்றும் பாட்டு இணைந்து பாடுவதாகத்தான் எல்லோரும் அங்கு சென்றோம்!?).


கொசுறு: இந்தப்படத்தில் இருக்கும் திரு. ஹரிஷ் ராகவேந்திரா தான் அந்தப்பாடகர்(பெருமையுடன் நான் சொல்லிக்கொள்கிறேன் இவர் எனது காலேஜ் நண்பன் சாரி நண்பர்). அந்த நண்பனுக்கு இன்று என்னை நினைவிருக்கிறதோ இல்லையோ தெரியாது.
இந்த மொக்க பதிவை இவ்ளோ நேரம் நேரம் கொடுத்து படித்த என் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி(ஹி ஹி).
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

21 comments:

Philosophy Prabhakaran said...

// மற்றும் நம்ம பதிவுலக நண்பருங்க நம்மள சீரியசு பார்ட்டின்னு நெனைக்கறாங்க போல //

ஆமா... அப்படித்தான் நினைக்கிறேன்...

// அடி செருப்பால............நாயே .........குடிச்சது கோகு(coca cola) என்னமா நடிக்கிராண்டா ...........
என்றான் ஹரிஷ் //

நாங்க கூட இப்படி ஒரு நண்பனை வெறுபேத்தி இருக்கோம்...

க்ளைமாக்ஸ் ஆச்சர்யமாக இருந்தது...

சி.பி.செந்தில்குமார் said...

mudha முத கமெண்ட் போடலைன்னா என்ன? முத ஓட்டு போட்டாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

டீன் ஏஜ் ஞாபகங்கள்?

எப்பூடி.. said...

//திவுலக நண்பருங்க நம்மள சீரியசு பார்ட்டின்னு நெனைக்கறாங்க போல. அப்புறம் நமக்கு அழுவாச்சி சங்க செயலாளர் பதவி குடுத்துடப்போறாங்க என்று பயம் வந்துடுச்சி //

யாரு சார் அது ? :-)

//இந்தப்படத்தில் இருக்கும் திரு. ஹரிஷ் ராகவேந்திரா தான் அந்தப்பாடகர்(பெருமையுடன் நான் சொல்லிக்கொள்கிறேன் இவர் எனது காலேஜ் நண்பன் சாரி நண்பர்). /

அருமையான பாடகர் ரகுமானின் இசையில் ஒரு பாடலாவது அவருக்கு பாட சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

sathish777 said...

திரு. ஹரிஷ் ராகவேந்திரா தான் அந்தப்பாடகர்(பெருமையுடன் நான் சொல்லிக்கொள்கிறேன் இவர் எனது காலேஜ் நண்பன் சாரி நண்பர்).//
ஓ..நீங்க ரெண்டு பேரும் அந்தளவு நெருக்கமான தில்லாலங்கடிகளா...கிளாஸ் ஃபிரெண்டா?

THOPPITHOPPI said...

நீங்க ரொம்ப சீனியர் போல இருக்கே?(ஹரிஷ் ராகவேந்திரா உங்கள் நண்பரா?)

பட்டாபட்டி.... said...

கலக்கல்

நா.மணிவண்ணன் said...

ஆஹா நீங்க ரொம்ப பெரியவுங்களா நா ரெம்ப சின்ன பய்யைங்க .அப்பறம் நாங்களும் இதே போல ஒரு அப்பாவி நண்பனை சரக்கு அடிக்கவச்சு லந்த குடுத்திருக்கும் .ஆனா வேற புகை சரக்கு

ஜீ... said...

எனக்கு ஹரிஷின் குரல் மிகவும் பிடிக்கும்! உங்க நண்பரா? சூப்பர்! :-)

அஞ்சா சிங்கம் said...

// மற்றும் நம்ம பதிவுலக நண்பருங்க நம்மள சீரியசு பார்ட்டின்னு நெனைக்கறாங்க போல //

நானும் அப்படிதான் நெனச்சேன் ........

வெறும்பய said...

எனக்கு மிகவும் பிடித்தா பாடகர்...

உங்கள் நண்பரா... சொல்லவே இல்ல...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.சி.பி.செந்தில்குமார் அவர்களே,

"டீன் ஏஜ் ஞாபகங்கள்? "

>>>

"அது ஒரு கனாக்காலம் "

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே,

"யாரு சார் அது ? :-)"
>>>

"நீங்க தான் வேற யாரு"

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே,

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran


வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே,

"// மற்றும் நம்ம பதிவுலக நண்பருங்க நம்மள சீரியசு பார்ட்டின்னு நெனைக்கறாங்க போல //

ஆமா... அப்படித்தான் நினைக்கிறேன்..."

என்னை நீங்க தவற புரிஞ்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்...........

உண்மையான நிகழ்ச்சிங்க அதுல உண்மைதானுங்களே இருக்கும்

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே,

"ஓ..நீங்க ரெண்டு பேரும் அந்தளவு நெருக்கமான தில்லாலங்கடிகளா...கிளாஸ் ஃபிரெண்டா?">>>>>>>>>>

அவரு இப்போ பெரிய ஆளுங்க ...........நம்மள எல்லாம் ஞாபகம் இருக்குமா தெரியலீங்க..............

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே,

>>>>>>
அவரு இப்போ பெரிய ஆளுங்க ...........நம்மள எல்லாம் ஞாபகம் இருக்குமா தெரியலீங்க.......

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.பட்டாபட்டி....அவர்களே,


நன்றி

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.அஞ்சா சிங்கம் அவர்களே,

இல்லீங்க , இல்லீங்க

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே,


"ஆஹா நீங்க ரொம்ப பெரியவுங்களா நா ரெம்ப சின்ன பய்யைங்க .அப்பறம் நாங்களும் இதே போல ஒரு அப்பாவி நண்பனை சரக்கு அடிக்கவச்சு லந்த குடுத்திருக்கும் .ஆனா வேற புகை சரக்கு"

>>>>>>>>>>

இல்லீங்க , இல்லீங்க நான் சின்னப்பய.....

களவும் கற்று மற(மறக்கனுமுங்க!?)

விக்கியுலகம் said...

@வெறும்பயருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.வெறும்பய அவர்களே,

"உங்கள் நண்பரா... சொல்லவே இல்ல"

>>>>>>
அவரு இப்போ பெரிய ஆளுங்க ...........நம்மள எல்லாம் ஞாபகம் இருக்குமா தெரியலீங்க.....