Followers

Friday, January 21, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-21/1/11

அந்தி சாயும் நேரம் .......குடியோ குடிலில்:

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.............

வா மானி என்னா பாட்டு ஒரே அமக்கலப்படுது..................




மானி: ஒன்னும் இல்லப்பா குடும்பத்துக்குள்ள இருந்த குத்து வெட்டல்லாம் நம்ம தலிவரு ரொம்ப நேக்கா சரிபண்ணிப்புட்டாருள்ள அதேன்!

குவா: விளக்கமா சொன்னாத்தானே புரியும்.............

மானி: அது வேற ஒன்னுமில்லப்பா நம்ம மதுர சிங்கம் கொஞ்ச நாளா இனி உங்க கூட ஓட்டும் வேணா உறவும் வேனாங்குராமாதிரி இருந்தாரு............இப்பா கலியுக சாணக்கியரு கூப்பிட்டு அவர சாந்தப்படுத்தி............இப்போ சண்ட போட நேரமில்ல.....எதிராளிங்க நெறைய சேந்துபுட்டாங்க...........தேர்தல் முடியட்டும் மாநிலமே நம்மள்து தான் வேணுமுன்னா பிரிசிக்கலாமுன்னு சொல்லிட்டாரோன்னு நெனைக்கிறேன்.............

குவா: என்னப்பா இது நம்ம நிலைமே என்னாகுறது............

மானி: நமக்கு இன்னா ஒரு சட்டில அரிசியும்.....இன்னொரு புட்டில சரக்கும் கெடைக்கும்....நேரா சுடுகாடுதான்...............டோன்ட் ஓரி நோ ஹேப்பி.....

குவா: சரிப்பா வெளிநாடு மேட்டரு ஏதாவது இருக்கா?

மானி: இல்லையா பின்ன ..........நம்ம விக்கிலீக்கு இப்போ புத்சா நம்மூரு ஆளுங்களோட சுவிஸ் பேங்கு கருப்பு பண தகவல்கள கொஞ்ச கொஞ்சமா லீக் பண்றாங்க............

குவா: நான் சொன்னேன்ல நம்ம அரசாங்கம் அடுத்து அந்த விஷயங்கள வச்சி அவங்கள புடிச்சி...........

மானி: டேய் லூசா நீ..........ஏன்டா பணம் போட்டு வசிகிரவனுங்க தான் இப்போ ஆட்சிலையே இருக்கானுவ.............அவங்க உட்டுருவான்களா.....நீ வேற.......சீகிரதுல விக்கிலீக்கு ஆகுதோ இல்லையோ........நாம வீக்காயிடுவோம்.......

குவா; இன்னா மானி நீ சீமான் மேட்டர்ல சொன்னது நடக்கலையே......

மானி: நல்லா கவனி நான் இன்னா சொன்னேன்.......அவரு எதிர் தரப்புக்கு போறது சரியான மூவு அப்படின்னுதானே...........

குவா: இன்னாபா இப்படி பல்டி அடிக்கற.......

மானி: ஏன்யா அவ்ளோ பெரிய ஆளுங்களே அடிக்கும்போது.......நான் ஒரு சராசரி ஓட்டுக்கு துட்டு வாங்குற....மானமுள்ள தமிழன்! நான் அடிக்க கூடாதா........என்னாங்கடா....

குவா: ஆமா இந்த காமடி தாஸு சாரிப்பா தாஸு அய்யா இனிமே இன்னா பண்ணப்போறாரு....

மானி: எனக்கு என்னமோ நம்ம சாணக்கியரு கூட கூட்டி வச்சிக்கிட்டு......அரசியலில் ஆயாவா இருந்தா இன்னா..........போயாவா இருந்தா இன்னா அப்படின்னு பேட்டி குடுப்பாரு போல......

குவா: சரி இப்போ மத்தில அமைச்சருங்க மாத்துனாங்களே.......நம்ம மாநில ஆளுங்களுக்கு எதுவும் ஒத்துக்கலையே!?

மானி: நீ வேற .........பெட்ரோலு, எல்லா அத்தியாவசியப்பொருளுகளோட விளையும் யேரிட்டதுனால.....அமைச்சருங்க மாறுனா அத ஒரு காரணமா காட்டி ஒட்டிடலாம் அப்படின்னு யோசிச்சிருப்பாங்க......நம்ம மாநில ஆளுங்களோட தல hair இப்போ அவங்க கைல......சும்மா விடுவாங்களா..........


குவா: இன்னாபா இந்த இளங்கோ மனுஷன் இப்படி ஜகா வாங்கிட்டாரே!!

மானி: ஆமாம்பா சீகிரதுல தானைதலீவர சந்திச்சி நாங்கல்லாம் காமடியனுங்க நீங்க ஒன்னும் பெருசா எடுத்துக்காதீங்க.....அப்படின்னு சொல்லிடுவாரு பாரு ..........கூட்டிகளவானிங்க நடுவுல இதெல்லாம் சகஜம் அப்படின்னு நாம நம்ம மனச தேத்திக்க வேண்டியது தான்.


குவா: ச்சே நம்ம குருவி நடிகரு ரொம்ப வருத்தப்பட்டு சொல்லிகிறாரு பாத்தியா.......


மானி: இன்னாபா பண்றது..........ஆச அளவோட இருக்கணும்.......ஏதோ நம்ம லெவலுக்கு ஒரு MP ஒரு MLA  அத உட்டுட்டு.......முதல்வர் லெவலுக்கு ஆசைப்பட்டா நடக்குமா......அதுவும் யார எதிர்துகினு........நம்ம தலிவரு பகலவர எதிர்துகினு நடக்குமா.........இப்போ புலம்பி இன்னா புண்ணியம்........ஏதோ நாலு பாராட்டு விழாவுக்கு போணுமா...........புகழ்ந்துமா.....கல்லாகட்டுனமான்னு இல்லமா......அப்புறம்....இருக்கவே இருக்கானுங்க.......நம்ம குயந்தப்பசங்க...........அவங்கள வச்சிக்கிட்டு ஏதோ கபடி ஆடுனோமான்னு இல்லாம.........

குவா: ரொம்ப நாளா டச்சிங்கா ஒண்ணுமே மேட்டரு இல்லையே!?


மானி: நம்ம நமி இனிமே எமி மாதிரி வரப்போறாங்களாம்.........அந்த பான வயித்த இப்ப உடுக்க மாதிரி ஆக்கிக்கிட்டு இருக்காங்க............சீக்கிரத்துல சும்மா சிக்குன்னு வரும்.......6 அடி சிக்கன்னு......

கொசுறு:அவள் மெலிந்து போனாளே...........உடல் மெலிந்து போனாலே...........நான் பார்க்கும் போதே ...........மெலிந்து போ.....னாளே..............
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

13 comments:

நா.மணிவண்ணன் said...

ஆமாங்க மானி அந்த குருவி நடிகருக்கு குசும்பு ஜாஸ்தி . ஊரோட ஒத்து போகவேணாம் .அப்பறம்பா மானி///ரொம்ப நாளா டச்சிங்கா ஒண்ணுமே மேட்டரு இல்லையே!?/// டச்சிங் பண்ண வெரலு பத்தமாடேங்குதுபா

எப்பூடி.. said...

///இன்னாபா பண்றது..........ஆச அளவோட இருக்கணும்.......ஏதோ நம்ம லெவலுக்கு ஒரு MP ஒரு MLA அத உட்டுட்டு.......முதல்வர் லெவலுக்கு ஆசைப்பட்டா நடக்குமா...///

தளபதியை கிண்டல் செய்தமைக்கு சந்திரசேகர் ஆட்டோ அனுப்புவாரு கவனம்

இரவு வானம் said...

சூப்பருங்கன்னா, பின்னீட்டிங்கன்னா, அருமைங்ன்னா

ஜீ... said...

கலக்கல்ஸ்! டாகுடரு பாவம்ல!

சி.பி.செந்தில்குமார் said...

HA HA HA KALAKKAL SIR

சாமக்கோடங்கி said...

தேர்தல் இருக்கும் இன்னும் கொஞ்ச நாட்களில் என்னென்ன நடக்கப் போகிறதோ..?? கடவுளுக்கே வெளிச்சம்..

கலைஞரை ஒழித்துக் கட்டிட்டு தான் மறுவேலை, அதற்காக எதையும் செய்வேன்னு விஜயகாந்த் சொல்லி இருக்கிறார்.. அது தான் கலைஞரின் தற்போதைய தலைவலி.. விஜயகாந்த் பல்டி அடிக்க மாட்டார் என நம்பலாம்..

போற போக்கப் பாத்தா, கூடிய விரைவில், கலைஞரும், தலைவியும் சேர்ந்து கேப்டனை எதிர்க்கும் காலம் வந்து விடும் போல...

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கோ திரு.நா.மணிவண்ணன் அவர்களே

நல்லா சொன்னீங்க போங்க ....சாதாரண ஆளா அவங்க, முதலுக்கே மிட்டாய் கொடுத்தவங்க.....ஹி ஹி

விக்கியுலகம் said...

@இரவு வானம்வந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கோ திரு.இரவு வானம் அவர்களே..

விக்கியுலகம் said...

@எப்பூடி..வந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கோ திரு.எப்பூடி. அவர்களே..

ஆட்டோக்கு போடுற பெட்ரோலு பணத்துக்கு பாவப்பட்ட இரசிகர்கள காட்டி, தயாரிப்பாளர்களிடம் வாங்காம இருந்தா சரி.

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்வந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கோ திரு.ஜீ... அவர்களே

THANK YOU SIR

விக்கியுலகம் said...

@ஜீ...வந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கோ திரு.ஜீ... அவர்களே
>>>>>>>>>>>

அவரே பாவம்ணா தினக்கூலிக்கு போயிகிட்டு அவருக்காக செலவு பண்ணி அடிவாங்கும் ரசிகருங்க பாவமில்லையா......

விக்கியுலகம் said...

@சாமக்கோடங்கிவந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கோ திரு.சாமக்கோடங்கி அவர்களே....

அது நடக்காதுங்கோ அடிக்கிற சரக்குக்கு ஏற்கனவே ஒருமுற நெஞ்சுவலி வந்தாச்சி!

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கோ திரு.Philosophy Prabhakaran அவர்களே.

உங்களோட ஒவ்வொரு பதிவுக்கும் மறக்காம வருவேன் நண்பரே!