Followers

Wednesday, June 22, 2011

ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 9)

வணக்கம் நண்பர்களே...டைரி தொடர்கிறது.....


இப்போ சொல்லுங்க உங்களுக்கு இந்த திருமணத்துல சம்மதமா..........

நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாமே எனக்கு நேத்தே தெரியும்........உங்க அக்கா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க...எனக்கு நம்பிக்கையிருக்கு நம் வாழ்கை நல்ல விதமா இருக்கும்னு...


(எனக்கு அவள் மிகப்பெரிய தைரியசாலியாக தோன்றினாள்...என்னை விட மனதளவில் இவள் உறுதியானவள் என்று எனக்கு அப்போது தோன்றியது!)

நான் பொய் சொல்ல விரும்பல அதான் உங்க கிட்ட உண்மைய சொல்லிடலாம்னு.....

நானும் சில உண்மைகள் சொல்லணும்.........

சொல்லுங்க...


நீங்க நெனைக்கிரா மாதிரி நான் பத்தாவது வரை படித்தவள் அல்ல.......வீட்டுல சொல்லவேணாம்னு சொன்னாலும்(!)...உங்க கிட்ட சொல்லனும்னு தோணிச்சி அதான்..........நான் எட்டாவது வரை படித்தவள்...எனக்கு உங்க அளவுக்கு ஈடா யோசிக்க தெரியாது என்றாள்..


ம்...படிப்பு அறிவை வளர்க்கவே...என்னைப்பொறுத்தவரை என்னை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா என்பதே முக்கியம்...எப்போன்னாலும் படிச்சிக்கலாம்......

உங்களைப்போல வெளிப்படையா பேசுறவங்கள நான் பார்த்ததில்லை..தவிர நான் வீட்டை விட்டு அதிகமா வெளிஉலக வாழ்கைய பத்தி தெரியாதவள்...என்றாள்!

என்னை பொறுத்தவரை முழு சம்மதம்..உங்களுக்கு சம்மதம் என்றால் நல்லது என்றேன்.....

(இருவருக்கும் மனதளவில் சம்மதத்துடன் அங்கிருந்து விடைபெற்றோம்)

சரியாக....திருமணத்துக்கு 10 நாள் இருக்கும், மாங்கல்யம் வாங்க செல்வதாக முடிவாகியது....அப்போது நான் இன்னொரு வேலை விஷயமாக எண்ணூரில் இருந்து வரவேண்டி இருந்தது தி நகருக்கு.....!

மழை மெலிதாக பெய்து கொண்டு இருந்தது........


வரும் வழியில் திடீரென்று புகுந்தது அந்த கன்டைனர் லாரி....நான் என் புல்லட்டின் பிரேக்கை சடாரென்று அழுத்த.......ரோட்டில் தேய்த்துக்கொண்டு உருண்டது.....புல்லெட் என்னையும் இழுத்துக்கொண்டு.......!

ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 8)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 7)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 5)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 4)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 3)
ரத்தக்கறை -(டைரி பேசுகிறது - பாகம் 2)
ரத்தக்கறை (டைரி பேசுகிறது - பாகம் 1)

கொசுறு: நேரம் குறைவு காரணமாகவும்.......கிடைக்கும்போது எழுதுவது காரணமாகவும் இந்த தொடர் விட்டு விட்டு வருவதை மன்னிப்பீர்களாக...........!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

தமிழ்வாசி - Prakash said...

இந்த தொடரில் படங்கள் அருமையான கலக்சன்.

தமிழ்வாசி - Prakash said...

நீங்க நெனைக்கிரா மாதிரி நான் பத்தாவது வரை படித்தவள் அல்ல.......வீட்டுல சொல்லவேணாம்னு சொன்னாலும்(!)...உங்க கிட்ட சொல்லனும்னு தோணிச்சி அதான்..........நான் எட்டாவது வரை படித்தவள்...>>>>>>>>

பத்துக்கும், எட்டுக்கும் ரெண்டு வயசு தானே வித்தியாசம்.

தமிழ்வாசி - Prakash said...

நேரம் குறைவு காரணமாகவும்.......கிடைக்கும்போது எழுதுவது காரணமாகவும் இந்த தொடர் விட்டு விட்டு வருவதை மன்னிப்பீர்களாக...........!>>>>

நீங்க இனியும் மன்னிப்பு புகழ் சி.பி கூட சேர்ந்திங்க.... இப்படி தான் மன்னிப்பு கேட்டுட்டே இருப்பிங்க...

செங்கோவி said...

மாமூ, நீங்க விட்டு விட்டு எழுதுனாலும் நாங்க விடாமப் படிப்போம்!

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி.. தொடர்னா விட்டு விட்டுதான் வரும்.. விடாம உன் பின்னாலயே வர அது என்ன உன் ஆஃபீஸ் பி ஏ வா? ஹா ஹா

சங்கவி said...

மாப்பு தொடர் கலக்குது...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள அந்த புல்லட்டுக்கு என்னாச்சு?

ராஜி said...

வரும் வழியில் திடீரென்று புகுந்தது அந்த கன்டைனர் லாரி....நான் என் புல்லட்டின் பிரேக்கை சடாரென்று அழுத்த.......ரோட்டில் தேய்த்துக்கொண்டு உருண்டது.....புல்லெட் என்னையும் இழுத்துக்கொண்டு.......!
>>>>
ஒரு தமிழ்பட கிளைமாக்சை பார்த்த ஃபீலிங்க் சகோ

கந்தசாமி. said...

தொடருகிறேன் பாஸ் ....

சசிகுமார் said...

மாப்ள சும்மாவெல்லாம் மன்னிக்க முடியாது ரெண்டு பீர் பார்சல் அனுப்பினால் மன்னிக்க தரை பண்றேன்.

FOOD said...

ஒரே தொடர்கிறதா இருக்கே!

மைந்தன் சிவா said...

தொடருகிறோம் மாப்பிளே!!

மைந்தன் சிவா said...

தொடருகிறோம் மாப்பிளே!!

நிரூபன் said...

இப் பதிவிலும் சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீங்க. அடுத்த பாகத்தைப் படிப்பதற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நிரூபன் said...

படிப்பறிவினை விடப் பட்டறிவு/ அனுபவ அறிவே சிறந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக உங்களின் இந்தப் பாகம் அமைந்துள்ளது.