Followers

Monday, June 27, 2011

தமிழனை தாழ வைக்க துடிக்கும் தறுதலைகள்!

வணக்கம் நண்பர்களே....


காலையில் லபக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சி போய் கொண்டு இருந்தது....என்ன நிகழ்ச்சின்னு பாத்தா பிஞ்ச மணி பேட்டியாம்...எனக்கு வேலைக்கு செல்ல நேரம் அதிகமாக இருந்ததால்(!) அந்த பெட்டியை ச்சே பேட்டியை காணும் கண்கொள்ளாக்காட்சி காணக்கிடைத்தது....

நூறு நாள் வேலை விஷயத்தை எப்படி மாற்றி அமைப்பதுன்னு அந்த அறிவாளி சொல்லிக்கொண்டு இருந்தார்...அதுவும் பாதிப்பணத்தை மானியமாக விவசாயிகளுக்கு கொடுத்துவிடும்படியும்(!)....மீதிப்பணத்தை வேலை செய்பவர்களுக்கு நேரிடையாக அளித்துவிடும்படியும் கூறிக்கொண்டு இருந்தார்...


ஏற்கனவே இந்த பணத்தில் ஒரு பகுதி அதை செயல் படுத்துபவர்கள் எடுத்துக்கொண்டு மீதம் இருப்பதையே வேலை செய்பவர்களுக்கு கொடுத்து வருவது ஊரறிந்த விஷயம்...இது இல்லாமல் ட்ராக்டர் ரெண்டு வாங்கி ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம்...அதனை தினமும் வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன் பெறுவார்களாம்....

ஊராட்சி தலைவர்கள் உண்மையாக கொண்டு சேர்த்தால் பரவாயில்லையே...!

இத்தனை நாள் நேரடியாக மக்களை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஜாதி எனும் பீடையை காட்டியே பிச்சை எடுத்த பரதேசி...தமிழ் பற்றி சொல்லுகின்றது...எல்லோரும் தமிழ் வழிக்கல்வியை மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டுமாம்....தன் குழந்தைகளை உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் படிக்கவைத்துக்கொண்டு இருக்கும் ஒரு தந்தை(!)...தமிழ் மக்கள் எங்கு படிக்கவேண்டும்...என்ன படிக்க வேண்டும் என்று கூறுகிறார்..


ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்...


தேர்தலில் தோற்ற போதும் மக்களுக்காக போராடுவதை நிறுத்தமாட்டார்களாம்(!)...என்ன கொடுமை இது...இதுவரை தான் பெற்றெடுத்த மக்களுக்காக போராடும் தலைவர்களின் வாயில் வந்து விழும் வார்த்தைகள் அவ்வளவும் உள் நோக்கத்துடன் இருக்கின்றன.........

இன்னும் இவர்களை நம்பிக்கொண்டு இருக்கும் மனிதர்களை(!) என் சொல்வது தெரியவில்லை.....எதிரிகளிடம் போராடத்தெரிந்த  நமக்கு, துரோகிகளை இனங்கானத்தெரியவில்லையே!.....

இலங்கை பிரச்சனயை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இவர்களின் தொலைகாட்சி துடித்த செயலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்!.....


இனியாவது திருந்துங்கப்பா....விடுமுறையை கடலுக்கடியில்(!) வெளிநாட்டில் கழிக்கும் செல்வசீமான்களே...இனியாவது தமிழனை வாழவிடுங்கள்....

அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!

கொசுறு: இந்தப்பதிவு ஒரு குமுறலே...நன்றி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

26 comments:

Carfire said...

தாத்தவ விட அவன் அல்லக்கை நொல்லக்கை பண்ற அட்டகாசம் தாங்காம தான் இந்த தேர்தல்ல தொரத்தி அடிசுருக்காங்க இன்னுமா இது புரியல அவங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

>>ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்..

பின்னீட்டே போ

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் உனக்கும் இன்டலி அவுட்டா ஹை ஜாலி ஜாலி.....

MANO நாஞ்சில் மனோ said...

மிலிட்டிரிகார அண்ணே உங்க சூன்யம் ஸாரி உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்..

பின்னீட்டே போ//

இந்த மூதேவி கமேண்ட்சை மறுபரிசீளைனை செய்ய வேண்டும், என்னமோ டிரிபிள் மீனிங்ல சொன்னா மாதிரியே இருக்கு ராஸ்கல்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அன்புத்தம்பிய எப்படியாவது மந்திரியாக்கனும், அதான் லட்சியம், கனவு, கொள்கை, குறிக்கோள் எல்லாமே...! அதுக்கு எது தடையா வந்தாலும் தகர்த்தெறியப்படும்.......!

koodal bala said...

பொங்கி எழுந்துட்டீங்களே மாம்ஸ் ....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இவனுங்க பண்ற சாக்கடை அரசியல்ல ஒரு மொழி கத்துக்காம விட்டுட்டு இப்ப நான் படற அவஸ்த்த இருக்கே .. அடேயப்பா.. எனக்கு பக்கத்து வீட்டு சின்ன பையன் ஒரு நாள் டவுட்டு கேட்டான் ஹிந்தில .. எனக்கு தெரியாதுன்னு சொன்னவுடனே அவங்கம்மா கிட்ட போய் அந்த வாத்திக்கு ஒன்னும் தெரியம்மா .. ன்னு சிரிக்கிறான்,, நான் என்னத்த சொல்ல..

கந்தசாமி. said...

////அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!// உண்மையான வரிகள் ...

கந்தசாமி. said...

///தன் குழந்தைகளை உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் படிக்கவைத்துக்கொண்டு இருக்கும் ஒரு தந்தை(!)...தமிழ் மக்கள் எங்கு படிக்கவேண்டும்...என்ன படிக்க வேண்டும் என்று கூறுகிறார்./// யார் பாஸ் அது )))

செங்கோவி said...

//அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!// மாமூ..நச்சுன்னு சொன்ன மாமூ!

தமிழ்வாசி - Prakash said...

ungal kumural unmaiye

விக்கியுலகம் said...

@கவிதை காதலன்

வருகைக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@Carfire

" Carfire said...
தாத்தவ விட அவன் அல்லக்கை நொல்லக்கை பண்ற அட்டகாசம் தாங்காம தான் இந்த தேர்தல்ல தொரத்தி அடிசுருக்காங்க இன்னுமா இது புரியல அவங்களுக்கு"

>>>>>>>>>>>>

முதல் கோணல் முற்றும் கோணல் மாப்ள!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

நன்றிங்ணோவ்!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றிங்ணோவ்!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அன்புத்தம்பிய எப்படியாவது மந்திரியாக்கனும், அதான் லட்சியம், கனவு, கொள்கை, குறிக்கோள் எல்லாமே...! அதுக்கு எது தடையா வந்தாலும் தகர்த்தெறியப்படும்.......!

>>>>>>>>>

பார்ரா....மாப்ள எல்லாருமே கொலைவெறிலத்தான் இருக்கீங்க போல!

விக்கியுலகம் said...

@koodal bala

மாப்ள முடியல அதான்!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள சரியா சொன்னய்யா உதாரணத்தோட!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

மாப்ள நன்றி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

மாப்ள நன்றி!

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

மாப்ள நன்றி!

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

மாப்ள பிஞ்ச மணி தெரியாதா உனக்கு ஹிஹி!

FOOD said...

//அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!//
சூப்பர் சூப்பர் வரிகள். சுயமாய் சிறிதேனும் சிந்திப்போம்.

மைந்தன் சிவா said...

நல்ல ஆதங்கப் பதிவு..உங்கள் ஆதங்கம் தான் எங்களுடையதும்!!

நிரூபன் said...

தமிழனைத் தொடர்ந்தும் முட்டாளாக்குவோருக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில் உங்களின் இப் பதிவு அமைந்துள்ளது.

மக்கள் அனைவரும் இந்தத் திருட்டு அரசியல்வாதிகளை உணர்ந்து ,
ஆட்சியில் இருந்து ஓரம் கட்டினால் தான்
நாட்டிற்கு விடிவு கிடைக்கும்.