தளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும்: திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இருந்ததால் பதிவு போட இயலவில்லை.
சரி நூடுல்ஸ் கதைக்கு வரேன்.
Start action:
காருல ஏறி உற்காந்தாச்சி.
அப்புறம்………(ஆப்புக்கு அப்புறம்னு கேட்ட மாதிரி இருந்தது)
எங்க சாப்பிட போலாம் சொல்லுங்க.
இப்போ உங்க வீடு எங்க இருக்கு?
எங்களுக்கு ரெட்டை ஏரி கிட்ட.
அப்படியா எனக்கு அண்ணா நகர் தான் என்ன குமார் வீடு ஞாபகம் இருக்கா?
(மறக்க முடியுமா) இருக்குங்க.
அப்புறம் சொல்லுங்க friend.
இல்லங்க நீங்க வண்டி ஓட்டும்போது பேசுறது நல்லதில்ல அதான்.
it is ok, பரவாயில்ல பேசலாம்.
சாரிங்க நாம இறங்கனதுக்கு அப்புறமா பேசலாமா (என்னடா gap உடாம அடிக்கராங்கலேன்னு பார்த்தேன் ஸ்ஸ்ஸ் பரவால்ல..timing ok)
காரை விட்டறங்கி அந்த பணக்கார ஓட்டலுக்குள் நுழைந்தோம்.
சாப்பிடும் வகையறாக்களை menu கேட்பவரிடம் சொல்லிவிட்டு....
ஓகே சொல்லுங்க என்னோமோ சொல்ல வந்தீங்களே... 3 நாளைக்கப்புறம் கிளம்பறதா........
ஆமாங்க இவருக்கு இப்போ வேலை வியட்நாம்ல. இப்போ நாங்க லீவுக்கு வந்து இருக்கோம். அததான் சொன்னேன்.......
அப்படியா .... அவள் என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்தாள் (அதன் அர்த்தம்:மவனே அதான் என் கண்ணுலேயே மாட்டலியா)
என்ன குமார் எப்போ போனீங்க.....
நாங்க போய் ஒரு வருஷம் ஆகுதுங்க....
அங்கே எப்படி இருக்கு life?
என்ன food மட்டும் பிரைச்சினை. மற்றபடி மக்கள் ரொம்ப அன்பானவங்க(என்னமோ போடா குமாரு சூப்பரா கலக்கறே).
சரி நான் கொஞ்சம் குழந்தைய toilet கூட்டிட்டு போயிட்டு வந்திடறேன்........
ஏன் உங்க வீட்டுகாரர் போக மாட்டாரா?
உடனே நான் அப்படில்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லிக்கொண்டே குழந்தைய தூக்கிட்டு கிளம்பினேன்(நான் வேண்டிகொண்டது - அம்மா தாயே gap கிடைச்சுதுன்னு நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிடாத).
நான் சென்ற இடத்தில் நிறைய பேர் என்னைப்போல குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தனர்(ஏன்டா டேய் இவ்ளோ பெரிய restaurant கட்டிவிட்டுட்டு ரெண்டு toilet கட்டுனா என்ன?)
கொஞ்ச நேரம் கழித்து வந்து சாப்பிட ஆரம்பித்தேன். அதன் பிறகு எந்த பேச்சையும் காணோம் (என்ன புயலுக்கு முன்னே அமைதியோ).
அவள் சாப்பிட்டு முடித்து விட்டு என்னைப்பார்த்து - நீ ரொம்ப lucky குமார். நீங்க ரெண்டு பேரும் made for each other(என்னடா நடக்குது வசிஷ்டர் வாயால.....) - என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர் பார்க்காமல் கிளம்பிவிட்டாள்(கிளம்பிட்டாயா, கிளம்பிட்டாயா ).
பின்பு நான் என் மனைவியிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்.
ஒன்னும் இல்லைங்க நீங்க போன உடனே அவங்க நான் யாரு தெரியுங்களா அப்படின்னாங்க.......
நான் அவங்களையே பார்த்தேன் ....பிறகு............அவங்களே .......... நானும் குமாரும் ஒரு காலத்துல lovers அப்படின்னாங்க............ (சொல்லிட்டாளா - நல்லாதானே போயிட்டு இருந்தது- ஒரு சின்ன toilet ... டைமிங் மிஸ்ஸிங்)
அதுக்கு இப்போ என்னங்க அப்படின்னேன்
என்ன நீங்க கொஞ்சம் கூட டென்சனே ஆகலையே என்றாள்.
இதுக்கு என்னத்துக்குங்க டென்ஷன். அவரோட கல்யாணத்துக்கு முந்தய personal விஷயங்க எனக்கு தேவையில்லாதது அப்படின்னு சொன்ன உடனே அவங்க கண்கலங்கிட்டாங்க(ஏன் கலங்க மாட்டா, என்னை ஒரு கலக்கு கலக்கனும்னு நெனச்சு இருப்பா முடியல அதான் it ok ma - தேங்க்ஸ்ரா கடவுளே)
நீங்க சொன்னத தான் சொன்னேன். எப்போ சொன்னேன் என்ன சொன்னேன்?
கல்யாணம் ஆன முதல் நாளே சொன்னீங்களே மறந்துடீங்களா............ஆமாம் என்னது .............. (நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி இருப்பேன்)
“””நான் உன்னோட past life பத்தி எதுவும் கேட்க மாட்டேன். நீயும் என்னோட past பத்தி கேக்காத”””
(வாரே வா என்ன ஒரு ஞாபக சக்தி ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்)
நம்மளோட life என்னிக்குமே சந்தோசமா இருக்கும் அப்படின்னீங்க. (என்னைக்கோ கொஞ்சம் புத்தியோட செயல்பட்டது இன்னிக்கு தல தப்பிடுச்சி)
wife is life இல்லையா ...................
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
11 comments:
ஃஃஃஃஃஃwife is life இல்லையா ........ஃஃஃஃஃ
ஆகா இன்னைக்கு துடப்பங்கட்டை தப்பிச்சு...
தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு சந்தோசப்படுங்க... எப்படியோ அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க.... ஓகே ரைட்டு
நீங்க உண்மையிலேயே லக்கி தான்... Made for each other...
இப்போ உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துவிட்டேன்... மரியாதையாக இன்னும் ஒரு வாரத்திற்குள் பதிவெழுதி விடுங்கள்... இல்லைன்னா ஆட்டோ அனுப்புவோம்...
ரைட்டு...
வாழணும்னு முடிவு பண்ணிட்டா மனைவி பேச்சை கேட்டுதான் ஆகணும். இல்லன்னா எதாவது living together லைப் தேட வேண்டியதுதான்.
ஹி ஹி சும்மா ஒரு flow ல வந்துடுச்சி.
ஐயோ அம்மா !!
தளத்திற்க்கு வருகை தந்து கருத்து தெரிவித்த திரு.
ம.தி.சுதா,திரு. ,திரு.வெறும்பய,திரு.ஹரிஸ், அவர்களுக்கும் நன்றி.
Very nice and interesting to read!!!!!!!!
very thrilling moment of your life it seems....
Sorry for typing in English... There is a problem in my Tamil fonts....!
நன்றி திரு. அசோக் குமார் அவர்களே.
good, vunkaloda antha thavaippai enkaloda thavippa mathareenka. Good. Different concept. great.
Baesh baesh romba nallaa irukku
இந்த கத்தி எப்போதும் உங்க தலைக்கு மேல தொங்கிகிட்டே தான் இருக்கும் மாப்பிள்ளை... ஜாக்கிரதையா இருங்க....
Post a Comment