Followers

Sunday, February 20, 2011

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - 100 வது பதிவு

என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.




உண்மையில் "தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்(பலம் மற்றும் பலவீனம்)" - இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். அதாவது எனக்கு பேச்சு பலம் கொஞ்சம் இருக்கிறது, எழுத்து பலம் அந்தளவுக்கு இல்லை என்பதை அடிக்கடி யோசித்துக்கொண்டு இருக்கும்போது தான் இந்தப்பதிவிடும் விஷயம் என்னை அடுத்த கட்டதிட்க்கு அழைத்து சென்றது. 

என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே.
அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து  செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து.

இந்த விஷயங்களை உலகில் எங்கோ இருந்தும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன். 

பொதுவாக கவிதை ரசிக்க தெரிந்தால் போதும் என்று நினைக்கும் சராசரி மனிதன் நான். அதனால் அந்த விஷயத்தில் விஷப்பரீட்சை எடுப்பதில்லை. இதுவரை நான் எந்த சினிமாவுக்கும் விமர்சனமோ, நடிகர்களை புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பதிவிட்டதில்லை. அது பலரின் மனத்தை காயப்படுத்தும் என்பதால் மற்றும் அவரவர் தொழில்களில் சிறந்து விளங்குபவர்களை விமர்சிப்பதால் மட்டுமே என்னால் உயரத்திற்க்கு செல்லமுடியும் என்ற மாய நம்பிக்கை என்னிடம் இல்லை(பதிவர்கள் மன்னிக்க).

100 வது பதிவிலாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெரிஞ்சிக்கிற விஷயம் சொல்லலாமுன்னு.....ஹி ஹி!
நான் வாழும் நாட்டுல நம்ம தமிழனோட ரேக்ளா ரேஸ் ரொம்ப பேமசு...........வருசத்துல அக்டோபர் மாசம் 9 மற்றும் 10 தேதில நடத்தப்படுது இந்த பந்தயம்.........இதுல கொஞ்சம் வித்தியாசம் என்னன்னா இந்த பந்தய மைதானத்துல கொஞ்சம் தண்ணியும் இருக்கும் அதுனூடே திறமையா ஓட்டனும் அதுதானுங்க பங்களிக்கரவங்களோட தெறமையே!

இந்த பந்தயம் நடக்கும் போது அப்படியே தமிழ் நாட்டுல இருக்குறா மாதிரி இருக்கும்..........என்னா ஒரு கைத்தட்டலு...........மக்கள் என்னமா என்சாய் பண்ணுவாங்க தெரியுங்களா.............சும்மா அப்படி ஒரு அமக்களமா இருக்கும்....
நீங்களும் பாத்து சந்தோசப்படுவீங்கன்னு நெனைக்கிறேன்...

என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன். என் பதிவுகள் எதுவும், இல்லாத ஒன்றை சொல்லும் விஷயங்கள் இல்லை, அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதரிடமும் ஆயிரம் விஷயங்கள் உள்ளன அதனை வெளிப்படுத்தும் ஒரு இடமே பதிவுலகம் - இது என்னுடைய தாழ்மையான கருத்து.இன்றுவரை என்னை உற்சாகப்படுத்தி ஓட வைத்துக்கொண்டு இருக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.


கொசுறு:இருக்குற இடத்த சொந்த இடம் மாதிரி பார்ப்பவனே வாழத்தெரிந்தவன். வழக்கம்போல ஓட்ட குத்துங்க, கருத்த மறக்காம சொல்லுங்க.


என்றும் நட்புடன்....
வருங்கால அரசியல்வாதி (வியாதி அல்ல ஹி ஹி !)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

46 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Vadai...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன்.///வழிமொழிகிறேன்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தலைவரே

THOPPITHOPPI said...

வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@THOPPITHOPPI

வருகைக்கு நன்றி

என்ன ஆச்சி ஆளையே காணோம்!

எனி கோவம்!

செங்கோவி said...

வாழ்த்துகள் தலைவரே..தொடர்ந்து கலக்குங்க..உண்மையிலேயே அரசியல்வாதி ஆக ஆசைப்படுறீங்களா.’விக்கியும் தமிழகமும்’னு ஒரு தேர்தல் ஸ்பெஷல் பதிவு போட்டுடுவமா?

செங்கோவி said...

வாழ்த்துகள் தலைவரே..தொடர்ந்து கலக்குங்க..உண்மையிலேயே அரசியல்வாதி ஆக ஆசைப்படுறீங்களா.’விக்கியும் தமிழகமும்’னு ஒரு தேர்தல் ஸ்பெஷல் பதிவு போட்டுடுவமா?

செங்கோவி said...

ரெண்டு தடவை க்ளிக் பண்ணீட்டென் போல..அதான் மூணாவதா இந்தக் கமெண்ட்..ஏன்னா ‘முக்க முக்க மூணாட்டை’ன்னு சின்ன வயசுல விளையாண்டவங்க நாங்க!

JOTHIG ஜோதிஜி said...

இருநூறு ஆக வளர்ந்து ஆயிரம் பிறைகள் காண வாழ்த்துகள்.

விக்கியுலகம் said...

@ஜோதிஜி

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@செங்கோவி

"வாழ்த்துகள் தலைவரே..தொடர்ந்து கலக்குங்க..உண்மையிலேயே அரசியல்வாதி ஆக ஆசைப்படுறீங்களா.’விக்கியும் தமிழகமும்’னு ஒரு தேர்தல் ஸ்பெஷல் பதிவு போட்டுடுவமா?"

>>>>>>>>>>>>>>>>>>
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தலைவரே.........

கண்டிப்பா இன்னும் 5 வருசத்துல தேர்தல்ல நிப்பேனுங்க........

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!

அதுவரைக்கும் உங்களைப்போன்ற ஆதரவாளர்கள் பதிவு ஏதும் போட்டு என்ன களி திங்க வைக்க வேண்டாமுன்னு கேட்டுக்கறேன் ஹி ஹி!!

கக்கு - மாணிக்கம் said...

விக்கியின் கருத்துக்கள் அனைத்தும் என்னுடன் இணைந்தே போகின்றன.

கக்கு - மாணிக்கம் said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் விக்கி.

மதுரை சரவணன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள்....

ஆமாம் படங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் எடுத்தது போலவே தான் இருக்கின்றன... பேனரில் இருக்கும் வியட்நாம் மொழி வாசகத்தை தவிர்த்து...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நூறு பதிவு வரை வந்துட்டீங்க வாழ்த்துக்கள்!! இன்னும் பலநூறு பதிவுகள் நீங்க எழுதணும்! மறுபடியும் வாழ்த்துக்கள்!



அப்படியே என்னோட ப்ளாக் கையும் சும்மா எட்டிப் பாருங்க!!

மாணவன் said...

வாழ்த்துக்கள் பாஸ் :)

தொடர்ந்து கலக்குங்க...

♔ம.தி.சுதா♔ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க....

♔ம.தி.சுதா♔ said...

////வருங்கால அரசியல்வாதி (வியாதி அல்ல ஹி ஹி !////

என்ன ஆட்டோ அனுப்பவா ?

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@மாணவன்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@மதுரை சரவணன்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@ம.தி.சுதா

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

...............
"என்ன ஆட்டோ அனுப்பவா ?"

>>>>>>>
நாங்க ரெடி நீங்க ரெடியா ஹி ஹி!

இரவு வானம் said...

வருங்கால ச ம உ வின் 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :-)

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"வருங்கால ச ம உ வின் 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :-)"

>>>>>>>
நன்றிங்கோ ஆனா சிபி சாருக்கு போடவேண்டியது எனக்கு போட்டதுக்கு கண்டனங்கள் ஹி ஹி!

Jana said...

வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் said...

@Jana

நன்றிங்கோ

தமிழ்வாசி - Prakash said...

விக்கி அண்ணே முதல் சதத்துக்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை.

appoo அப்போ நான் பதிவர்தான்/.. ஹி ஹி

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கும்,வாழ்த்துரைக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

6 ஓட்டு ரொம்ப கம்மி யா இருக்கு,

சி.பி.செந்தில்குமார் said...

லீவ் நாள்ல உங்களை யார் 100வது பதிவு போடச்சொன்னது?இப்போ போட்டிருக்கற பதிவுல 100வது பதிவுக்கு லிங்க் குடுங்க..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"appoo அப்போ நான் பதிவர்தான்/.. ஹி ஹி"

>>>>>>
நீங்க கண்டிப்பா நம்ம ரகம்தானுங்க தலைவரே ஹி ஹி(பதிவர் வர்றார்.....எங்க எங்க!!!)
.................................

லீவ் நாள்ல உங்களை யார் 100வது பதிவு போடச்சொன்னது?இப்போ போட்டிருக்கற பதிவுல 100வது பதிவுக்கு லிங்க் குடுங்க..
>>>>>>>>>>>>

கண்டிப்பா லேட்டானாலும் லேட்டஸ்டா ஹிட் ஆகும்னு நம்பிக்க...........அதானுங்களே வாழ்க ஹி ஹி!
..............................

6 ஓட்டு ரொம்ப கம்மி யா இருக்கு,

>>>>>>>>>>>>>>>>>>>

நூறாவது படம் ஹிட்டானா என் முகத்த போடணும் அதான் ஹி ஹி!
(சமாளிச்சிங்!)

Speed Master said...

ஆயிரம் ஆயிரமாக வாழ்த்துக்கள்

ரேவா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன். super

விக்கியுலகம் said...

@ரேவா

நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றிங்கோ

விக்கியுலகம் said...

@Speed Master

நன்றிங்கோ

பாரத்... பாரதி... said...

நூறாவது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள்.
வலையுலகில் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... said...

//என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன்.///

நச்-னு சொன்னாலே அவரு படைப்பாளியாக மாறிவிட்டதாக அர்த்தம்..

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...


வருகைக்கும்,வாழ்த்துரைக்கும் நன்றி

நிலாமகள் said...

"தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்"

எங்களுக்கும் புரிய வைத்தமைக்கும், 100 - வது பதிவுக்குமாக மிக்க நன்றி சகோ...

நிலாமகள் said...

தாமதமான வருகையிலும் திருப்தியான பதிவுகளை வாசித்தேன்... வாழ்த்துகள்!!

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

@நிலாமகள்

"எங்களுக்கும் புரிய வைத்தமைக்கும், 100 - வது பதிவுக்குமாக மிக்க நன்றி சகோ..."
>>>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ
..............................

தாமதமான வருகையிலும் திருப்தியான பதிவுகளை வாசித்தேன்... வாழ்த்துகள்!!
>>>>>>>>>>>>>>>>>>

வாழ்த்துரைக்கும் நன்றி