Followers

Thursday, April 14, 2011

தக்காளியும்+நண்பனும்(ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே.............பல இடையூறுகளுக்கு இடையே என் கடமையை செய்துவிட்டு வந்து விட்டேன்........


ஊருக்கு வருகிறேன் என்று நண்பனுக்கு போன் போட்டேன்......உடனே மச்சி கவலைப்படாதே...........நீ வர்றது நடு இரவு என்றாலும் நான் உனக்காக காத்து இருப்பேன் என்றான்..................இந்த முறை வெறும் ஒரு நாள் பயணம் என்பதால்..........என் நெருங்கிய நண்பர்களுக்கும் சொல்லவில்லை..........


நடு இரவில் சென்னை போய் சேர்ந்தேன்......நண்பன் தன் காருடன்(எனது பழைய!) காருடன் காத்து இருந்தான்...........

என்னடா எப்படி இருக்க.............

என்ன மச்சி நீ எப்படி இருக்க ............

நான் நல்லா இருக்கேன்..........

"சரி இந்தா கீ எடு" என்று கொடுத்தான்......நான் ஆசை ஆசையாய் வாங்கிய காரை ஓட்ட ஆரம்பித்தேன்..........

சீறிக்கொண்டு கிளம்பியது 5 கியர் கொண்டமாருதி(இன்றும் அதே ரேஸ் லெவெலில் வைத்து இருக்கிறான் நண்பன்!)

ஆமா எப்போ பேசுனாலும் குடும்ப விஷயத்த மட்டும் சொல்ல மாட்டேங்கிறியே ஏன்?

"அது ஒண்ணுமில்ல" என்று மழுப்பினான்.............

சொல்றா.............


அவ டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டாடா.............(இந்த கலயாணத்துக்கு எத்தன பேரு போராடுனோம்!)

என்னடா சொல்றே ................நீயும் அவளும் 5 வருஷம் காதலிச்சி தானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க............

அத விடு...........சரி உண்மையில நீ எத்தன நாளு தங்கப்போறே............ஏன்னா நான் உன்கூட தான் இருக்க போறேன்.......ஏன்னா இன்னிக்கி எப்படியும் விடுமுறை..........

இல்ல மச்சி.......இன்னிக்கி நைட்டு இதே பிளைட்டு...........

பெரிய லாடு லபக்கா நீ...........வந்து ஒரு நாளு இல்லாம ஓடுற...........

அப்படியில்ல......பயபுள்ளைங்க லீவு குடுக்கமாட்டேன்னு சொல்லிடுசிங்க....அதவிட கொடுமையான விஷயம் என்னோட லீவு எடுக்குற நோக்கத்தையே கொச்சப்படுத்திட்டாங்க.....விடு விடு.......

ஆமான்டா நீ ஓட்டு போடலன்னு யாரு அழுதா......எனக்கு கூடத்தான் ஓட்டு இல்ல.........

டேய் உன்னல்லாம் நிக்க வச்சி சுடனும்......

மச்சி இவ்ளோ தேசபக்தின்னு பீத்திக்கறியே.....நீ மட்டும் இந்தியாலையா வேல பாக்குற......

ஆனா இந்தியாவுக்காக வேல பாக்குறேன்டா.......

ஓகே விடு.....உன் wife உம் குழந்தையும் உன்ன ரொம்ப மிஸ்பன்றாங்கடா.......

என்ன பண்றது சில விஷயங்க அப்படித்தான் நம்ம மீறி நடக்குது....ஆமா அதுவும் ஒரு முக்கியமான காரணம்......ஏன்னா அவங்க மே மாசம்தான் வரப்போறாங்க.......ஏன் இவ்ளோ ஒல்லியாயிட்டே.....


வேலதாண்டா.....(5 ஸ்டார் ஓட்டல் குக் அவன்!)......நீ மட்டும்......

எனக்கு சாப்பாடு பிரச்சன......உனக்கென்ன......

எனக்கு லைப் பிரச்சன..........(அவன் கண்ணில் கண்ணீர் நெட்டி நின்றது!)

ஒருவழியாக இந்திய தம்மை அடித்து விட்டு (ரொம்ப காலம் கழித்து....ஹிஹி!)

(வீடு, மனைவி, மக்கள் எல்லோரையும் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டாச்சி!)

காலை என்னை பூத்துக்கு அழச்சிட்டு போய் ஜனநாயக கடமையை முடிக்க வைத்து கூட்டி வந்தான் ஓட்டு போட விரும்பாத என் அருமை நண்பன்!(ஹிஹி!)

எல்லாம் நல்ல படியாக முடிந்து திரும்பும் போது.....என் மனைவியிடம் நண்பன் கூறியது........

சிஸ்டர்........நீங்களும் வர்ரீங்களா ஏர்போர்ட்டுக்கு என்றான்......


இல்லங்க நாங்க அடுத்தமாசமே ஊருக்கு போறோம்........ நீங்க போய் உங்க கடமைகள முடிச்சிட்டு அவர டைமுக்கு பிளைட் ஏத்திட்டு........நல்ல விதமா வீடு போய் சேருங்க என்றாள்......(நாங்க என்ன செய்வோம்னு தெரியும்ல ஹிஹி!)

"தேங்க்ஸ்.....எங்களுக்கு சொரனையே கெடயாதுங்க ஹிஹி!"..என்றான் நண்பன்..

(குழந்தை என்னை பிடித்துக்கொண்டு அழுதவாறு இருந்தான்......அவனுக்கு பல விஷயங்களை சொல்லி சமாதானப்படுத்திவிட்டு கிளம்பினேன்)

நாங்கள் ஓடி விளையாடிய இடத்துக்கு சென்று அமர்ந்துகொண்டு ஏற்கனவே நண்பன் ப்ரீசர் பாக்ஸ்ஸில் கொண்டு வந்த குளிர்பானத்தை(!) குடித்துக்கொண்டு.....பேச ஆரம்பித்தோம்..........பல விஷயங்கள் பேசி முடித்து.....கிளம்பினோம்.......என்னை கொண்டு வந்து விமான நிலையத்தில் விட்டு விட்டு.......பிளைட் கிளம்பும் வரை போனில் மொக்கை போட்டு விட்டு.....கடைசி நிமிடத்தில் பை சொல்லி கிளம்பினேன்....(அவனுக்கு நல்லதொரு துணையை அருளும் என் ஆண்டவனே!)


கொசுறு: ஓட்டு போடுறதுல ஜெயிச்சிட்டேன் ஹிஹி!.......ஆனா ஜனநாயக அறிவிப்புல தோத்திடுவேனோ!......தெரியல! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

23 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கோவை வர்றதா வாக்கு குடுத்துட்டு தக்காளி கத பேசுது பாரு..

சி.பி.செந்தில்குமார் said...

நாடோடிகள் பட கதை உல்டா மாதிரி இருக்கு ஓப்பனிங்க் ஃபிரண்டோட கதை..?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"கோவை வர்றதா வாக்கு குடுத்துட்டு தக்காளி கத பேசுது பாரு.."

>>>>>>>>>

யோவ் ஒரு நாள்ல வர்றது கஷ்டம்யா மன்னிச்சிக்க நண்பா!

வைகை said...

ஒரு சிறந்த இந்திய "குடி"மகன் வால்க!

எல் கே said...

எப்படியோ கடமையை செஞ்சு விட்டீங்க. உங்க நண்பருக்கு நல்ல வாழ்வு அமையட்டும்

Prabu Krishna said...

ஓட்டு போட என்றே வந்தீர்களா. எல்லா குடிமகனும் இப்படி நினைத்தால் எப்படி இருக்கும்.

எல்லாவகையிலும் நல்ல "குடி"மகன் தானோ ??

விக்கியுலகம் said...

@வைகை

"ஒரு சிறந்த இந்திய "குடி"மகன் வால்க!"

>>>>>>>>>

ஹிஹி நன்றியா மாப்ள!

என்னய்யா உள்குத்தா!

விக்கியுலகம் said...

@எல் கே

"எப்படியோ கடமையை செஞ்சு விட்டீங்க. உங்க நண்பருக்கு நல்ல வாழ்வு அமையட்டும்"

>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பரே!..........உங்க வாழ்த்துரைக்கும் நன்றி!

விக்கியுலகம் said...

@பலே பிரபு

வருகைக்கு நன்றி நண்பரே!..
................................

"ஓட்டு போட என்றே வந்தீர்களா. எல்லா குடிமகனும் இப்படி நினைத்தால் எப்படி இருக்கும்.

எல்லாவகையிலும் நல்ல "குடி"மகன் தானோ ??"

>>>>>>>>>>>>>>>

நடக்கும் விடுங்க!

அப்படித்தான் நினைக்கிறேன் உள்குத்தய்யும் சேர்த்து ஹிஹி!

கே.ஆர்.பி.செந்தில் said...

//ஒரு சிறந்த இந்திய "குடி"மகன் வால்க!//

வால்க.. வால்க...

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்

வருகைக்கு நன்றி தலைவரே

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இப்படி எல்லாரும் ஒட்டு போட்ட இந்திய எப்படி இருக்கும் ?

ரஹீம் கஸாலி said...

வாக்களிப்பதற்காக ஒருநாள் மட்டும் இந்தியா திரும்பிய உமது கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்குது மாம்ஸ்....ஆமா....எந்த கட்சிக்குப்பா வோட்டுபோட்ட....சொன்னா அந்த கட்சிக்காரங்க விமான டிக்கெட் வாங்கி தருவாங்கல்ல

செங்கோவி said...

அண்ணன் விக்கியின் கடமை உணர்ச்சிக்கு ஒரு சல்யூட்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...

வந்துட்டேன் மாப்ள...

விக்கியுலகம் said...

@Raja=Theking

என்னமோ சொல்றீங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

"வாக்களிப்பதற்காக ஒருநாள் மட்டும் இந்தியா திரும்பிய உமது கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்குது மாம்ஸ்....ஆமா....எந்த கட்சிக்குப்பா வோட்டுபோட்ட....சொன்னா அந்த கட்சிக்காரங்க விமான டிக்கெட் வாங்கி தருவாங்கல்ல"

>>>>>>>

நான் யாருன்னு தெரிஞ்சி கொளுத்தாம இருந்தா சரி மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...

வந்துட்டேன் மாப்ள..."

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள கலாய்கிரியா ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

யோவ் மாப்ள கலாய்கிரியா ஹிஹி!

! சிவகுமார் ! said...

எலக்சனுக்கு அப்பறம் கூட்டணில எத்தனை டைவர்சோ...

MANO நாஞ்சில் மனோ said...

நேதாஜி'ன்னா சும்மாவா...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இது எப்ப?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i like and welcome your duty sense