Followers

Monday, April 25, 2011

சினிமாவுக்காக அவள்.....!

வணக்கம் நண்பர்களே..........


இந்த வாக்கியம் யாருக்கு சொந்தம் என்று பார்ப்போம் நண்பர்களே...........

நெறைய பேரு அறியாத வயசுல யாருக்காவது ரசிகனா இருந்திருப்போம்.........அல்லது தொண்டனா இருந்திருப்போம்!.....அப்பேர்ப்பட்ட காலத்துல யாரும்,.... தலைவன பத்தி சொன்னாலும் நமக்கு கோவம் வரும்..........அந்த உருப்பட்டவன் அவன் துட்டு சம்பாதிக்கறதுல குறியா இருந்தாலும்.......நாம என்னமோ நமக்காக அவன் வாழுறா மாதிரி நெனச்சிக்குவோம்........

நானும் அப்படி இருந்தவன்தான்.........யார்ருக்குங்கறது வேணாமே(ஹிஹி!).....அப்படி ஒரு காலத்துல நிகழ்ந்தது.............

தலைவனோட படம் ரிலீஸ்......நமக்கு மன்றத்துல டிக்கட்டு வந்தது.......அத துட்டு கொடுத்து வாங்க பல இரவு அயர்ன் பண்ணி சம்பாதிச்ச காச கொண்டுபோய் வாங்கிட்டு வந்தாச்சி.........அடுத்தது....பல இத்தியாதிகளுக்கு துட்டு இல்ல.......

மாமாகிட்ட கேட்டா.....ரொம்ப நல்ல வார்த்தைகள்ல திட்டுவார்(காது கொடுத்து கேக்க முடியாது!)....சரி என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது.......அந்தப்பக்கமா மஞ்சு வந்துட்டு இருந்தா........(நண்பி ஹிஹி!)


ஹாய் மஞ்சு!.......எங்க போற.........

என்னடா விஷயம்.....என்ன பணம் வேணுமா(அவகிட்ட புடிச்சதே சட்டுன்னு விஷயத்துக்கு வந்துடுவா!)

அது வந்து.......தலைவர் படம் ரிலீஸ்.......அதான்!

சரி அதுக்கு என்ன.......?

வந்து......டிக்கெட் கெடச்சிடுச்சி........ஆனாலும் கொண்டாட்ட செலவுக்கு துட்டு வேணும் ஹிஹி!

ஏன்டா இப்படி கெட்டுப்போரே...எங்கிட்ட இப்போ பணம் இல்ல....

நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்குறியா......என்றான் நண்பன் பஷீர்!

சொல்லு...........என்றாள் மஞ்சு!

அதுவந்து....உன் செயின கொடு...ரெண்டு நாள்ல நான் திருப்பி தந்துடறேன் ...ஏன்னா எங்கப்பா ஊருல இல்ல...அவர் வந்த உடனே ஒரு பிட்ட போட்டு வீட்டுல பணம் வாங்கிடுவேன்......என்றான் பஷீர்....

வீட்டுல கேட்டா என்ன சொல்றது என்றாள்.......மஞ்சு.

உனக்கா சமாளிக்க தெரியாது......ஹெல்ப் பண்ணு என்றேன் நான்..........

அவளும் சரியென்று சொல்லி செயின் கொடுத்தாள்.........

அதை கொண்டு சென்று நம்ம சேட்டு கடையில் அண்ணன் முனி(ரிக்ஸா அண்ணன்!) மூலமாக அடகு வைத்து துட்டை எடுத்துக்கொண்டு ஓடினோம்....

அங்கே எங்களுக்கு எதிரணி நின்று கொண்டு பல விஷயங்களில் மூக்கு நுழைத்து கொண்டு இருந்தது..........இடையில் நடைபெற்ற சண்டை வேறுவிஷயம் ஹிஹி!.......

நல்ல படியாக படம் முடிந்து திரும்பியாச்சி.......சில நாட்கள் கழித்து பணத்தை எடுத்து கொண்டு வந்தான் பஷீர்.......அதை கொண்டு போய் கொடுத்து செயினை மீட்டு வந்தோம்....அவளிடம் கொடுக்க என்னிடம் கொடுத்து விட்டார்கள் நண்பர்கள்........நானும் எடுத்து கொண்டு சென்றேன்....

அன்று நல்ல மழை......நன்றாக நினைவிருக்கிறது....மாலையில் அவளை சந்தித்து அந்த செயினை கொடுத்தேன்.........அவள் வாங்க மறுத்து விட்டாள்.......

என்னாச்சி கோச்சிகிட்டியா மஞ்சு....ஒரு வாரம் ஆயிருச்சி செயின திருப்ப சாரி ஹிஹி!


இல்லடா நீ இப்படி ஏதாவது பண்ணுவேன்னு தெரியும் அது தான் வீட்ல செயின் தொலஞ்சிடுசின்னு சொல்லிட்டேன்.......

அடிப்பாவி...ஏன் அப்படிப்பன்னே......



பின்ன நீ செயின கொடுன்னு கேட்டுட்ட.....அப்புறம் என்ன பண்றது....பிரெண்ட விட செயின் பெருசாடா விடு...அத நீயே வசிக்க என்று கொடுத்து விட்டு சென்றாள் அந்த நண்பி...(ரொம்ப நாள் வரை அந்த ஜெயின் சாரி செயின் எங்களை காப்பாற்றியது ஹிஹி!)

கொசுறு: அவளுடைய திருமணத்துக்கு அந்த செயினய்யே கிப்டா கொடுத்தது தணிக்கத....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

24 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. போடற பதிவெல்லாம் எம் ஜி ஆர் மாதிரி.. ஹி ஹி

ரம்மி said...

இதுதான்பா தோழி!

செங்கோவி said...

கொசுறு கலக்கல்!

! சிவகுமார் ! said...

//நானும் அப்படி இருந்தவன்தான்.........யார்ருக்குங்கறது வேணாமே//

ராமராஜன்னு உண்மைய சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்..!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

@சி.பி.செந்தில்குமார்

ரொம்ப சரி தலைவா

# கவிதை வீதி # சௌந்தர் said...

வந்துட்டேன் மாப்ள...

விக்கியுலகம் said...

@ரம்மி

"ரம்மி said...
இதுதான்பா தோழி!"

>>>>>>

சரிதானுங்க நண்பா!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. போடற பதிவெல்லாம் எம் ஜி ஆர் மாதிரி.. ஹி ஹி

>>>>>>>>>>

போங்க தம்பி உங்களுக்கு எப்பவுமே குறும்பு ஹிஹி!"

விக்கியுலகம் said...

@செங்கோவி

"செங்கோவி said...
கொசுறு கலக்கல்!"

>>>>>

சரிதானுங்க மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
வந்துட்டேன் மாப்ள..."

>>>>>>>>>>>.

வாய்யா மாப்ள வா!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

"! சிவகுமார் ! said...
//நானும் அப்படி இருந்தவன்தான்.........யார்ருக்குங்கறது வேணாமே//

ராமராஜன்னு உண்மைய சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்..!!"

>>>>

விடுய்யா விடுய்யா ஹிஹி!

நா.மணிவண்ணன் said...

அண்ணே உங்கள விட நா ரொம்ப நல்லவனே

சசிகுமார் said...

பதிவு ரசிக்கும் படி உள்ளது நண்பா

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"நா.மணிவண்ணன் said...
அண்ணே உங்கள விட நா ரொம்ப நல்லவனே"

>>>>

நானும் அதுதான்யா சொல்றேன்!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...
பதிவு ரசிக்கும் படி உள்ளது நண்பா"

>>>>>

வருகைக்கு நன்றி நண்பா!

கந்தசாமி. said...

நல்ல நண்பர்களப்பா..........

MANO நாஞ்சில் மனோ said...

//மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

சன்னலை மூடு///

ரெண்டாவது ஓட்டு [[கள்ள ஓட்டு]] போடபோனா மேலே உள்ளமாதிரி சொல்றாங்க ஏன்...? டவுட்டு....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. போடற பதிவெல்லாம் எம் ஜி ஆர் மாதிரி.. ஹி ஹி///


நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: அவளுடைய திருமணத்துக்கு அந்த செயினய்யே கிப்டா கொடுத்தது தணிக்கத....///

நன்பேண்டா....

MANO நாஞ்சில் மனோ said...

//போங்க தம்பி உங்களுக்கு எப்பவுமே குறும்பு ஹிஹி!"//

ஆனாலும் சிபி'யை பாராட்டனும்ய்யா, கொய்யால எவ்வளவு அடி வாங்குனாலும் வலிக்காத மாதிரி நடிக்குரத்தை. யோவ் ரித்தீஷ் ஆட்கள் தேடிட்டு இருக்காங்க சிபி'யை....

MANO நாஞ்சில் மனோ said...

//அண்ணே உங்கள விட நா ரொம்ப நல்லவனே///

கள்ளன் என்னைக்காவது களவான்டதை ஒத்துருக்கானா.....ஹி ஹி ஹி ஹி ஹி....

இரவு வானம் said...

யார்னே அது உங்க தலைவர் ராஜ்கிரணா? எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லுங்க, ஒரு கை பாத்துடுவோம் :-)))

ஜீ... said...

ச்சே! 'டச்' பண்ணிட்டீங்க மாம்ஸ்! :-)

ரஹீம் கஸாலி said...

ஓகே....ஓகே...