வணக்கம் நண்பர்களே....
இன்னும் நாலு நாளைக்கு உங்க பதிவுகளுக்கு வர இயலாது...எனவே திட்ரவங்க....ரூம் போட்டு திட்டாமல்...பின்னூட்டத்தில் வசைமாரி(திசைமாரி!) பொழியுமாறு கேட்டுக்கொள்கிறேன்(கொல்கிறேன்!).....சரி விஷயத்துக்கு வாடாங்கன்னு....நீங்க நினைக்கறது புரியுது....
ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு வியாபாரக்கூட்டம்(கொள்ள!) இங்க வந்து சேந்துது(!)....பெரிய அளவுக்கு முகாந்திரம்(!) இருந்ததால்....நேரிடையாக களத்தில்(!) இறங்கி வேலை பார்க்க வேண்டியதாகிவிட்டது(ஹிஹி!)....
இம்புட்டு விளக்கமா எப்படி, எதுல Invest பண்ணலாம்னு சொல்றானே....இவன் ரொம்ப நல்லவன்னு(!) கூட்டிபோய் ரெண்டு நாளைக்கு மலைப்பாங்கான(!) இடத்துல வச்சி கும்மிட்டானுங்க(!)....இன்னும் கும்முவானுங்க போல(!)...நான் சரியாத்தான் பேசுரனா....
அங்க ஒருத்தரு....என்னைய பாத்து...தம்பி(!)...இந்த நாடு இம்புட்டு நல்ல நாடான்னு கேட்டாரு....நானும் ஆமாமா ரொம்ப அமைதியான அப்பாவிங்க...ஆனா வாலாட்டுனா நறுக்கிடுவாங்கன்னே.....
வந்ததுல ஒரு பய புள்ள ரெண்டு நாள் ஊர சுத்திபுட்டு ஒரு பொண்ண(!) கூட்டியாந்து அப்பன்கிட்ட காட்டி இவளைத்தான் நான் கட்டிக்கபோறேன்(திருமணமாம்!) அப்படின்னு அடம் புடிக்குது....அந்த பெரிய தொந்தி வச்சவன் வாயில இருக்க குட்கா எதிர்ல இருக்கவங்க மேல சிதர்ரத கூட கண்டுக்காம(!)...அவரு பாட்டுக்கு அவங்க மொழில காட்டுக்கத்து கத்திட்டு இருந்தாரு.....
அண்ணே நீங்க உங்க குடும்ப பிரச்சனைய தனியா பேசி தீத்துக்கங்க(!)....என்னைய விடுங்கய்யா....என் குடும்பத்த போய் பாக்கோணும் அப்படின்னு கெளம்ப நெனச்சா....முடியல.....
அந்த மன்சன் அனத்த ஆரம்பிச்சிட்டாரு.....தம்பி நீயும் தான் இங்க கொஞ்ச வருசமா இருக்கையே...இப்படி பண்ண உனக்கு தோனிச்சா....கொஞ்சம் இந்த பயபுள்ளைக்கு அறிவுரை சொல்லுன்னாரு(!).....(இந்த விஷயம் தெரிஞ்சிதான் வீட்ல முன்னாடியே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களோ!)
யோவ்....ஏன்யா....இது வேறயா.....வேணாம்யா நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல....அந்தப்பைய பேசுற ஆப்ரிக்க ஆங்கிலமே(!) எனக்கு புரியல இதுல இது வேறயா...என்னைய விடுங்கய்யா.....
அந்த குடும்பத்தின்(!) பிடியில் மாட்டி தவித்து(நசுங்கி!) கொண்டு இருக்கும் தக்காளியின் விடுமுறை கடிதமே இந்தப்பதிவு......
கொசுறு: வந்தவங்க யாரும் திட்டாமே போயிடாதீங்க ஹிஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
24 comments:
இம்புட்டு சிக்கலிலும் இப்படி ஒரு பதிவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//தம்பி நீயும் தான் இங்க கொஞ்ச வருசமா இருக்கையே...இப்படி பண்ண உனக்கு தோனிச்சா....கொஞ்சம் இந்த பயபுள்ளைக்கு அறிவுரை சொல்லுன்னாரு//
அதானே!
உங்களால முடியும் மாம்ஸ்! மனந்தளராதீங்க! அப்புறம் என்னென்ன நடந்திச்சுன்னு விரிவா பதிவு போடுங்க! :-)
இப்பவே கண்ணை கட்டுதே...
இது என்ன பதிவு.....இதுக்கு என்ன கமெண்ட் போட...போய்யா.....
தக்காளிக்கே ஆப்பா........ தக்காளி என்ன ஒலகமடா இது.......?
போயிட்டு வாங்க மாப்ள
shhhhhhhhhhhhhh அப்பா முடியல
அருமை
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Kalakkal
ஆஹா கேட்கவே மனசுக்கு சந்தோஷமா இருக்கு. அடுத்தவங்களுக்கு ஆப்பு வைக்கும் விக்கிக்கே ஆப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வந்தவங்க யாரும் திட்டாமே போயிடாதீங்க ஹிஹி!/// ரைட்டு...
தக்காளிக்கு தேவைதான்யா...
நல்லாருக்கு நண்பரே
நாலு நாளைக்கு வரமாட்டேன் என் விடுமுறை பதிவு ஒன்று போற்றலாமே!!!!!!!!!
பஞ்சாயத்து தலைவர் வாழ்க !
//கொசுறு: வந்தவங்க யாரும் திட்டாமே போயிடாதீங்க ஹிஹி!//
ஏண்டா எங்களை பார்த்தா உனக்கு வேலை வெட்டி இல்லாதவங்க மாதிரி தெரியுதா. இப்ப இந்த பதிவ போடலைன்னு யாரு அழுதாங்க. நீ 4 நாளு இல்ல நாற்பது நாளு கழிச்சு வந்து எழுதுனாலும் ஒன்னும் கவலையே இல்ல பொறுமையா வா ஹீ ஹீ
மாப்ள ஆசை பட்டு கேக்கும் பொழுது திட்டாம போயிட்டா எப்படி...
தக்காளி சூப் ..
இன்றுதான் உங்கள் பதிவுக்கு
வந்தேன் உங்களை என வலைப்
பக்கம் அழைக்க.
பதிவு நல்லாவே இருக்கு
பெயர், அகடவிகடம் மிகப் பொருத்தம்
புலவர் சா இராமாநுசம்
//வந்தவங்க யாரும் திட்டாமே போயிடாதீங்க ஹிஹி!///
விக்கியின் ஆசையை நிறைவேற்றாத நண்பர்கள் சுத்த மோசமுங்க.
சசி சொன்னது ரிப்பீட்டு...
//சசிகுமார் said...
//கொசுறு: வந்தவங்க யாரும் திட்டாமே போயிடாதீங்க ஹிஹி!//
.......
//
வியட்நாம்ல ஒரு பதிவர் சந்திப்பை முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யுங்க மாம்ஸ். நாங்களும் வர்றோம்!
மிளகு ரசம் நன்று .வாழ்த்துக்கள் .
வந்தவங்க யாரும் திட்டாம
போயிடாதீங்கன்னு வேர
சொல்லிட்டீங்க. என்ன சொல்
லி திட்டன்னு யோசிச்சுகிட்டு
இருக்கேன்.
காலம் தன் கடைமையை செய்யும்
Post a Comment