Followers

Tuesday, August 30, 2011

சீரியஸ் Vs காமடி! பதிவர்களின் கவனத்திற்கு....(!?)

வணக்கம் நண்பர்களே....

இந்தப்பதிவு எல்லா உள்குத்துகளுடன் எழுதப்படுகிறது(!) என்பதை முதலில் தெளிவாக உங்களுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்....அதனால யாரும் நான்தானா அதுன்னு தோணிச்சின்னா சரக்கடிக்கரவங்க ஒரு கல்ப் அதிகமா அடிசிக்கவும்(!)....அந்தப்பழக்கம் இல்லாதவங்க ஒரு புடி சோறு அதிகமா சாப்பிடவும்(!) தண்ணி சேத்துக்காம...

இப்படியெல்லாம் நான் சொல்வேன் கும்மலாம்னு நெனைக்காதீங்க ஹிஹி!....இது அப்பழுக்கற்ற(!) ஒரு மனசாட்சியின் குரல் அவ்வளவே!

ஆரம்பிப்போமா.......

முதல்ல இந்த சீரியஸ் அண்ட் சிரியஸ் பதிவர்கள்னா என்ன ?


உலக அரசியல்ல இருந்து உள்ளூரு கிழவி வரை புட்டு புட்டு வச்சிட்டு அதை ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குறது...அப்புறம் அது என்னாது அது....ஆங் ....பொறுப்பு அப்படிங்கற விஷயத்த யாருமே உணரலன்னு குய்யோ முய்யோன்னு கத்துறது...இதெல்லாம் விட....சொல்ல வந்த விஷயத்த பல எடுத்துக்காட்டுகளுடன் சொல்லுறது இப்படி பல இத்தியாதிகளை கொண்டவர்களே இந்த "சீரியஸ்"பேருக்கு சொந்த மானவங்க(!)....இவங்க சில நேரம் சீரியஸா சொல்றாங்களா காமடியா சொல்றாங்களான்னு புரியாம மண்டைய பிச்சிக்கிட்டா அதுக்கு இவங்க பொறுப்பல்ல....

காமடி பதிவர்கள்னு பேர வச்சிக்கிட்டு இவங்க பண்றது இருக்கே யம்மாடி...சீரியசான விஷயத்த டாபிக்கா போட்டுக்கிட்டு அதுல மொத்த உலகத்தையும் போட்டு கும்மிடுறாங்க...கேட்டா நாங்க உன்னைய சொல்லல போய்யா போய் பொழப்ப பாரு(!) அப்படின்னு திருப்பி வேற விடுறாங்க....


இதுக்கு நடுவுல என்னைய போல(நீ பதிவனா...நீ போடுறது பதிவா...நெஞ்சுல கைய வச்சி சொல்லு!) காமடியும் இல்லாம சீரியசும் இல்லாம தனக்கும் புரியாம(!) ஊருக்கும் புரியாம பதிவு போடுறவங்களும்(உண்மைய ஒத்துக்கனும்ல!) இங்க இருக்காங்க.....

எப்படிப்பட்ட பதிவுகள் போடலாம்...?

இந்த கேள்வியே முதல்ல தப்புன்னு சொல்லுவேன்...ஏன்னா எங்க இஷ்டத்துக்கு வாழத்தான் முடியல(!)....பதிவுங்கர இடத்துலயாவது கொட்டலாம்னு தான் இங்க வர்றோம்...இங்க வந்தா...இத போடாத இது தப்பு...அது தப்பு இத மாத்து அத மாத்துன்னு....ஓசில கொடுத்த கூகுல்காரனே சிவனேன்னு கெடக்குறான்...ஏன்யா ஏன்?

உலகத்துக்கு புரோசனமா(!) எழுத முடியுமா?

ஸ் ஸ் ஸ் முடியல, முடியல....அது என்னாது உலகத்துக்கு புரோசனமா(!) எழுதறது.....தன்னை மறந்து சிரிக்க வைக்கிற எழுத்து பலம் தான் நல்ல பல மனங்களை சந்தோஷப்படுத்தும் அப்படின்னு யாரோ சொன்னதா நெனைக்கறேன்(!)...அந்த எழுத்து முடிஞ்சவரைக்கும் ஆபாசம் இல்லாம இருந்தா அதுவே போதும்....

நீ எழுதறது எதுக்கு?

யாருக்கோ இல்ல ஒரு சாந்திக்குதான்(மன சாந்திப்பா!).....

கில்மா பதிவர்கள்ன்னா என்னா..?


உண்மையில் வீட்ல அப்புரானிங்க(!) இவங்க எதையும் ஓபனா(அங்க!) சொல்ல முடியாம இங்க வந்து கொட்றாங்க...இதுக்கு எதிர்ப்புகள் வர்றது எப்படி இருக்குன்னா....இந்தப்பதிவுகள் குப்புற படுத்து படிச்சி புட்டு குய்யோ முய்யோன்னு கத்தராப்போல இருக்கு...நமக்கு ஒருத்தரோட பதிவு புடிக்கலையா ஒதுங்கிட்டா பிரச்சினையே இல்ல..(அவங்களுக்கும்!)..

பெண் பதிவர்களுக்கு ஏதேனும் வரையறை இருக்கா?

என்னை பொறுத்தவரை....வெளிப்படையா பேசுரறது நல்லது.....யாரும் பெண், ஆண் என்ற பேதத்துடன் அணுகாம நண்பர்கள் என்று அணுகினால் மனஸ்தாபத்துக்கு ஆளாகவேண்டியதில்ல....

சொந்த கத சோகக்கத..........

இது தான் இங்க அதிகமா ஓடுது...ஏன்னா சினிமாவ விட அடுத்தவங்க வாழ்கைல நடந்த சுவாரஸ்யங்களே அதிக விருப்பத்தை உண்டாக்குகின்றன.....


இன்னும் உங்க மனசுல இருக்க கேள்விகள கொட்டுங்கப்பா...மனசு லேசாயிரும்......


தொடரும்....(@#@#@##)..இல்ல இல்ல தொடரலீங்க விட்ருங்க....

கொசுறு: இது ஒரு மனசாட்சியின் குரலே...இத வச்சிக்கிட்டு யாரவது அரசியல் செய்ய வந்தீங்க ஹிஹி ஒன்னும் சொல்றதுக்கில்ல...!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

34 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுல நான் எந்த வகை?

தங்கம்பழனி said...

கில்மா பதிவர்கள்ன்னா என்னா..? அது நீங்கதானே..! என்ன தல இப்படி சொல்லிட்டீங்க..!! சுவராஷ்யமாக இருந்தது.. வாழ்த்துக்கள்..!! பகிர்வுக்கு மிக்க நன்றி..

இதையும் ஒருதடவைப் பாருங்களேன்..! இனி தடைகள் இல்லை உனக்கு..!

சசிகுமார் said...

hee hee

கந்தசாமி. said...

///என்னை பொறுத்தவரை....வெளிப்படையா பேசுரறது நல்லது.....யாரும் பெண், ஆண் என்ற பேதத்துடன் அணுகாம நண்பர்கள் என்று அணுகினால் மனஸ்தாபத்துக்கு ஆளாகவேண்டியதில்ல..../// நல்ல கருத்து ..)

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! அப்புறம்? :-)

M.R said...

நல்லா சொல்லியிருக்கீங்க மாம்ஸ்

தமிழ் மணம் நாலு

பாலா said...

மாப்ள ஊம குத்தா இருக்கு. ஆமா அந்த மூணு பேர் யார்? கில்மா பதிவரை கண்டுபுடிச்சிட்டேன்...

இரவு வானம் said...

மாம்ஸ் விரிவா விளக்கியிருக்கீங்க(?) நல்லா புரிஞ்சிருச்சு, ஆமா யாரு அந்த மூணு பேரு???

கும்மாச்சி said...

மாப்ள இப்படியா அக்கக்கா அலசறது, ரொம்ப உள்குத்து இருக்கே.

ராஜா MVS said...

மாம்ஸ் சக பதிவர்கள இப்டி கோத்துவிடுரது நியாயமா?
ஆமா அந்த மூணு பேரு யாரு???

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Tamilmanam 7

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//பெண் பதிவர்களுக்கு ஏதேனும் வரையறை இருக்கா?

என்னை பொறுத்தவரை....வெளிப்படையா பேசுரறது நல்லது.....யாரும் பெண், ஆண் என்ற பேதத்துடன் அணுகாம நண்பர்கள் என்று அணுகினால் மனஸ்தாபத்துக்கு ஆளாகவேண்டியதில்ல....//... அதே ...

செங்கோவி said...

யோவ், இதுக்குத்தான் காலைல இருந்து தேடிக்கிட்டு இருந்தீங்களா..நல்ல ஆளுய்யா!

மாய உலகம் said...

காமடி பதிவர்கள்னு பேர வச்சிக்கிட்டு இவங்க பண்றது இருக்கே யம்மாடி...சீரியசான விஷயத்த டாபிக்கா போட்டுக்கிட்டு அதுல மொத்த உலகத்தையும் போட்டு கும்மிடுறாங்க... ஆஹா வீடியோவுல வடக்கு பட்டி ராமசாமி காமெடியும் மிக்சிங்க் ஆவுதே ஹி ஹி ஹி .... மாம்ஸ் கண்டுபுடுச்சுட்டோமா இல்ல சொதப்பிட்டமா

மாய உலகம் said...

தமிழ் மணம் 9

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி என்னிக்குத்தான் எல்லாருக்கும் புரியற மாதிரி எழுத போறியோ?

Prabu Krishna said...

ஹி ஹி ஹி இது எடாகூடத்துக்கு எழுதப்பட்ட பதிவு போல.

நிரூபன் said...

சீரியஸ் Vs காமடி! பதிவர்களின் கவனத்திற்கு....(!?//

அப்படீன்னா எனக்குப் பொருந்தாதா மேட்டரா இது?
நான் எந்த வகை மாம்ஸ்?

நிரூபன் said...

என்னய்யா நடக்குது இங்கே?
நான் வலைக்கு வரலை என்றதும் இப்படியா?

பாஸ்...நான் கூட ஆபாச, மூவாச தலைப்பு வைப்பதில்லை என்று திருந்தி ரொம்ப நாளாச்சு பாஸ்,

ஆனால் பின்னூட்டப் பெட்டி வழியா நேற்றைக்கு கூட என் டவுசரை உருவிட்டாங்க பாஸ்.....

நிரூபன் said...

ஏஎன் பாஸ்,
நாய்க் குட்டிங்களைத் தொங்கப் போட்டு அடிச்சிருக்கிறீங்க....

சீ...படம் போட்டிருக்கிறீங்க.

Chitra said...

வெளிப்படையா பேசுரறது நல்லது.....


.... rightly said!!!!

Chitra said...

பெண் பதிவர்களுக்கு ஏதேனும் வரையறை இருக்கா?

என்னை பொறுத்தவரை....வெளிப்படையா பேசுரறது நல்லது.....


..... இருக்காவா? ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... இது சிரியஸ் ஆன கேள்வியா? இல்லை, சீரியஸ் ஆன கேள்வியா? ஹா,ஹா,ஹா,ஹா,....

ரெவெரி said...

மொத்தத்திலே எல்லாம் டைம் பாஸ்ங்க ...

Chitra said...

காமடி பதிவர்கள்னு பேர வச்சிக்கிட்டு இவங்க பண்றது இருக்கே யம்மாடி...சீரியசான விஷயத்த டாபிக்கா போட்டுக்கிட்டு அதுல மொத்த உலகத்தையும் போட்டு கும்மிடுறாங்க...கேட்டா நாங்க உன்னைய சொல்லல போய்யா போய் பொழப்ப பாரு(!) அப்படின்னு திருப்பி வேற விடுறாங்க....

...... சே....இப்படியெல்லாமா பண்ணுறாங்க????? என்ன கொடுமை (காமெடி) சார், இது!!!!!! ஹா,ஹா,ஹா,ஹா....

koodal bala said...

\\\\ஏன்னா எங்க இஷ்டத்துக்கு வாழத்தான் முடியல(!)....பதிவுங்கர இடத்துலயாவது கொட்டலாம்னு தான் இங்க வர்றோம்...இங்க வந்தா...இத போடாத இது தப்பு...அது தப்பு இத மாத்து அத மாத்துன்னு....ஓசில கொடுத்த கூகுல்காரனே சிவனேன்னு கெடக்குறான்...ஏன்யா ஏன்?\\\ சரியான பாய்ன்ட் மாம்ஸ் !

நிரூபன் said...

எப்படிப்பட்ட பதிவுகள் போடலாம்...?

இந்த கேள்வியே முதல்ல தப்புன்னு சொல்லுவேன்...ஏன்னா எங்க இஷ்டத்துக்கு வாழத்தான் முடியல(!)....பதிவுங்கர இடத்துலயாவது கொட்டலாம்னு தான் இங்க வர்றோம்...இங்க வந்தா...இத போடாத இது தப்பு...அது தப்பு இத மாத்து அத மாத்துன்னு....ஓசில கொடுத்த கூகுல்காரனே சிவனேன்னு கெடக்குறான்...ஏன்யா ஏன்?//

ம்....

மற்றையவர்கள் இப்படி எழுதக் கூடாது என்று சொல்லுவதும் ஒரு வகையில் தவறு தான்..

ஆனால் சட்டத்தைக் கையில் எடுத்திருப்போர் சொன்னா புரிஞ்சுக்கிற நெலமையிலா இருக்காங்க?

மாய உலகம் said...

நிரூபன்

ஆனால் பின்னூட்டப் பெட்டி வழியா நேற்றைக்கு கூட என் டவுசரை உருவிட்டாங்க பாஸ்.....//

ஹா ஹா ஹா செம காமெடி கருத்துங்கோ

ராஜி said...

என்னை பொறுத்தவரை....வெளிப்படையா பேசுரறது நல்லது.....யாரும் பெண், ஆண் என்ற பேதத்துடன் அணுகாம நண்பர்கள் என்று அணுகினால் மனஸ்தாபத்துக்கு ஆளாகவேண்டியதில்ல.
>>
நச்சுன்னு மண்டையில் ஆணியடிச்சாப்புல சொல்லியிருக்கீங்க சகோ

மகேந்திரன் said...

மாம்ஸ் செமையா உப்புமா கிண்டியிருகீங்க.....

தனிமரம் said...

இதில் தனிமரம் எந்தவகை மாப்பூ !

தனிமரம் said...

யாரையா நிரூபனின் கோவணத்தை உருவியது காட்டானா!
கோர்த்துவிடுவம் இல்ல!ஹீ ஹீ!

காட்டான் said...

என்னையா இவங்க தொல்லை பெருசாபோச்ச்சு... கோகில்காரன் சும்மாதாறான் பதிவு எழுத இதில வேற இன்னும் கொஞ்ச ரவுடிகளிட்ட கேட்டுத்தான் எழுதனுமா?? இது ரெம்ம நல்லாதான் இருக்கையா..

ரம்மி said...

சைக்கிள் எடுத்துட்டு ஒரு சுத்து வந்துட்டிங்க !

சி.பி.செந்தில்குமார் said...

உன் கிட்டே எனக்குப்பிடிச்ச விஷயமே யார்க்கும் புரியாத மாதிரி நீ பதிவு போடறதுதான் ஹி ஹி