Followers

Monday, August 29, 2011

இப்போ என்ன செய்வது....மக்களே...!

வணக்கம் நண்பர்களே....


தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மனு ஏற்கனவே குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட நிலையில்....மாண்பு மிகு அம்மாவும்(!) இந்த விஷயத்தில் தம்மால் தலையிட முடியாது என்று கூறிவிட்டத்தாக செய்தி வெளியாயிருக்கிறது.....

பல பெரிய தலைகளை காப்பாற்ற கதறும் சட்டம்(!) எம் சகோதரர்களுக்கான வாயிலை ஏன் திறக்க மறுக்கிறது...என்ன செய்வது யாரிடம் புலம்புவது என்று அறியாத காரணத்தால் இடப்பட்ட பதிவு இது....

சகோதர்களே...இனி என்ன செய்வது....யாரிடம் முறையிடுவது......புரியவில்லை உங்கள் கருத்துக்களை முடிந்தால் பகிரவும்.....

யாரும் இந்தப்பதிவை எந்த பட்டையிலும் இணைக்க வேண்டாம்....நன்றி...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்ன சொல்றதுன்னே தெரியல..
வருத்தமா இருக்கு?

நிரூபன் said...

ம்....மௌனம் தான் மன ஆதங்கமாக வெளிப்படுகிறது.

# கவிதை வீதி # சௌந்தர் said...

தூக்கு தண்டனை அறிவித்த நாளில் இருந்து போராட்டங்கள் ஆதரவுகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியிருந்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல முடிவு கிட்டியிருக்கும்...

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எல்லோரும் அமைதியாக இருந்துவிட்டோம் அவரிடத்தில் இவ்வளவு ஆதவுகள் தெரிவித்து விடுலை செய்ய பணிந்திருந்தால் ஒரு முடிவு கிட்டியிருக்கும்..

கண் கெட்டப்பின்னே சூரிய உதயம்தான் இது...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்னே தூக்கு போட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை இருக்காது...


தமிழ் தமிழர் என்று சொல்கிறோமே இந்த தமிழ்களால்தான் 20க்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் ராஜீவுடன் இறந்துப்போனார்கள்...

ராஜீவ் கொலைக்கு மட்டும் இவர்கள் உடந்தையல்ல அன்று இறந்த 20 தமிழர்களில் கொலைக்கு என்ன பதில் சொல்ல போகீறார்கள்....

NAAI-NAKKS said...

WHAT TO SAY??;(

காட்டான் said...

# கவிதை வீதி # சௌந்தர்said...
தமிழ்மணம் 1

August 29, 2011 5:30 PM
அப்பிடி உனக்கு என்னப்பா அவசரம் நாலு பதிவில ஓட்டு போடனும் அப்பதான் உங்கட பதிவ நாளுபேர் பாப்பாங்கன்னா.. படிச்சவங்கதானே நீ பதிவ இனைக்க வேண்டாம்ன்னு சொல்லுறத பாக்கிறதில்லையா?? உங்கள் காழ்ப்புணர்சிக்கு அளவே இல்லையா.இருபது தமிழர்கள் இறந்ததும் கண்டிக்கப்பட வேண்டும்.. அதே நேரத்தில் இன்னும் உயிரோடு இருக்கும் மூன்று தமிழர்கள் உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டும்.. படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோன்னு போவான்.. முதல்ல பதிவ வாசித்திட்டு கருத்து போடு மாப்பிள.. பதிவ வாசிக்காம ஊரெல்லாம் படல தட்டாத..



தக்காளி என்ன மன்னிச்சுக்கொள்..

உணர்வைத் தொலைத்தவன் said...

தள முகாமையாளரே மன்னிக்கவும்

உணர்வைத் தொலைத்தவன் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

ராஜீவ் கொலைக்கு மட்டும் இவர்கள் உடந்தையல்ல அன்று இறந்த 20 தமிழர்களில் கொலைக்கு என்ன பதில் சொல்ல போகீறார்கள்....
----------------------------

கருத்துரையாளரே நீங்கள் சொல்வது சரி. செத்த தமிழரின் உயிருக்கு கொன்றவர்கள் தான் பதில் கூற வேண்டும்.
நீ எல்லாம் தமிழனாடா. அந்த மூன்று பேரிலும் சுமத்தப்பட்ட ககுற்றத்தை ஒருதரம் சொல்லடா பாப்பம். கொலை வெறி பிடித்தலைகிறாயே போய் காங்கிரசுக்கு கழுவிறத விட்டுட்டு ஏன் கழுதை வீதியில தேர் ஓட்டுறாய்.

உணர்வைத் தொலைத்தவன் said...

உனக்கு படிப்பறிவே இல்லையா. அந்தாளு மனித நேயத்துக்காகவோ தெரியல இணைக்க வேண்டாம் என்று சொல்ல வாக்கு போடுறாராம் வாக்கு. கொண்டே குப்பையில போடு உன்ர வாக்கை

தமிழ்வாசி - Prakash said...

நாம் உணர்வை மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆண்டவன் இருக்கிறார்

அந்நியன் 2 said...

மக்கள் மன்றம் ஒன்னு இருப்பதை எல்ல்லோரும் மறந்து இருக்கின்றோம் இம்மக்கள்களை ஒன்று திரட்டுவது என்பது எல்ல்லோராலேயும் முடியாது ஒன்னு பெரும் கொண்ட அரசியல் கட்சியாக இருக்கனும் இல்லையேல் ரஜினி விஜய் போன்ற நடிகர்களின் ஆதரவு தேவை.

மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராடுவதை தவிர வேர வழியே இல்லை.

நான்தான் சொன்னனே ஜனாதிபதி நிரகரித்த கருணை மனுவை தட்டி கேக்குற உரிமம் மக்கள் சக்திக்கு மட்டுமே உள்ளது என்று.

முதல்வர் அமைச்சரவையை கூட்டி புதிய சட்டம் மூலம் அந்த தண்டனையை நிறுத்தி விட முடியாது அப்படியே நிறுத்திக்க முயன்றாளும் கவர்னரின் அனுமதி வேண்டும் அச்சட்டம் அமலுக்கு வருவதற்கு.

ஜனாதிபதி கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கவர்னர் ஜனாதிபதி நிராகரித்த ஒரு மனுவிற்கு எப்படி கைய்யெழுத்து இடுவார்?

இனி இவர்களை நம்பியோ கருணை மனு கொடுத்தோ பலன் இல்லை திரட்டுவோம் மக்கள் சக்தியை.

அனைத்து இயக்கங்களுக்கும் தந்தி மூலமாகவோ ஈ மெயில் மூலமகவோ தகவல்களை அனுப்புங்கள் நடிகர் மன்றங்களுக்கும் கருணை மனுவை கொடுங்கள் அவர்கள் கூட்டம் கூட்டியால் தமிழகம் தாங்காது.

இதை தவிர வேறு வழியில்லை நண்பா.

கந்தசாமி. said...

இன்னமுமா வன்மம் போகவில்லை சகோதரா? ஈழத்தில் அன்று பத்தாயிரம், முள்ளிவாய்க்கால் வரை ஒரு லட்சம்.... இவ்வளவும் போதாதா??

சசிகுமார் said...

வருத்தமாக உள்ளது.....

மாய உலகம் said...

மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மாற்றம் வர வாய்ப்பு உண்டு

செங்கோவி said...

//இன்னமுமா வன்மம் போகவில்லை சகோதரா? ஈழத்தில் அன்று பத்தாயிரம், முள்ளிவாய்க்கால் வரை ஒரு லட்சம்.... இவ்வளவும் போதாதா??//

இது கேள்வி.

# கவிதை வீதி # சௌந்தர் said...

////////
காட்டான்
August 29, 2011 5:59 PM

# கவிதை வீதி # சௌந்தர்said...
தமிழ்மணம் 1

August 29, 2011 5:30 PM
அப்பிடி உனக்கு என்னப்பா அவசரம் நாலு பதிவில ஓட்டு போடனும் அப்பதான் உங்கட பதிவ நாளுபேர் பாப்பாங்கன்னா.. படிச்சவங்கதானே நீ பதிவ இனைக்க வேண்டாம்ன்னு சொல்லுறத பாக்கிறதில்லையா?? உங்கள் காழ்ப்புணர்சிக்கு அளவே இல்லையா.இருபது தமிழர்கள் இறந்ததும் கண்டிக்கப்பட வேண்டும்.. அதே நேரத்தில் இன்னும் உயிரோடு இருக்கும் மூன்று தமிழர்கள் உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டும்.. படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோன்னு போவான்.. முதல்ல பதிவ வாசித்திட்டு கருத்து போடு மாப்பிள.. பதிவ வாசிக்காம ஊரெல்லாம் படல தட்டாத..

///////////////
ஏன் இணைக்க கூடாது...
இது ஒரு தேசியப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது திரட்டியில் இணைத்து அதனால் விவாதத்திற்க்கு நிறைய பேர் வருவார்கள்...

பதிவை படிக்காமல்தான் விரிவான கருத்து சொல்லியிருக்கேனா.?

20 ஆண்டுகள் வழக்கு நடத்தி ஒரு நிரபராதியை தூக்கில் போட வேண்டும் என்ற கட்டயாம் நம் நீதிமன்றங்களுக்கும் அரசுக்கும் இல்லை..

தமிழ்களை காக்க வேண்டும் என்பது நம் கடமைதான் ஆனால் அதே சமயம் தீவிரவாதிகளுக்கு வக்காளத்து வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை...

அதிக பதிவுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை...

நீங்கள் பதிவுக்கு எந்த கருத்துமட் சொல்லவில்லை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////////
உணர்வைத் தொலைத்தவன் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

ராஜீவ் கொலைக்கு மட்டும் இவர்கள் உடந்தையல்ல அன்று இறந்த 20 தமிழர்களில் கொலைக்கு என்ன பதில் சொல்ல போகீறார்கள்....
----------------------------

கருத்துரையாளரே நீங்கள் சொல்வது சரி. செத்த தமிழரின் உயிருக்கு கொன்றவர்கள் தான் பதில் கூற வேண்டும்.
நீ எல்லாம் தமிழனாடா. அந்த மூன்று பேரிலும் சுமத்தப்பட்ட ககுற்றத்தை ஒருதரம் சொல்லடா பாப்பம். கொலை வெறி பிடித்தலைகிறாயே போய் காங்கிரசுக்கு கழுவிறத விட்டுட்டு ஏன் கழுதை வீதியில தேர் ஓட்டுறாய்.
////////////

நாகரீகம் அற்று பேசும் உமக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை...

முகத்தைமூடிக் கொண்டு எது வேண்டுமனாலும் பேசிவிடலாம்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////////
உணர்வைத் தொலைத்தவன் said...

உனக்கு படிப்பறிவே இல்லையா. அந்தாளு மனித நேயத்துக்காகவோ தெரியல இணைக்க வேண்டாம் என்று சொல்ல வாக்கு போடுறாராம் வாக்கு. கொண்டே குப்பையில போடு உன்ர வாக்கை
///////////////

அவ்வளவு படிப்பறிவு இல்லை...
மனித நேயமும் கொஞ்சமும் இல்லாதவன் நான்...