Followers

Tuesday, August 30, 2011

குட்டிச்சுவர் - பாகம் 5

வணக்கம் நண்பர்களே...


முந்தய பாகங்களுக்கு சுவர் புராணம் (5)

தொடர்கிறது....குட்டிச்சுவர்....

டிங்கு: அந்த மேனஜரு ஒரு லட்சம் கொடுங்கராறு.....அப்பத்தான் நடக்கும்னு சொல்றாரு..என்னத்த பண்றது....

அப்பா: அதான் சொன்னேன்...உன்னோட ராசிப்படி இப்போ 7 1/2 சனி நடக்குது...இப்போ நீ எடுக்குற காரியம் எல்லாம் தடைப்ப்படும்டா...அதனால நான் சொல்றத கேளு....ஒரு வேலை வந்து இருக்கு...நம்ம சொந்தக்காரரு ஒருத்தரு Scrap இருக்குல்ல அந்த கோடவுன் வச்சி இருக்காரு...அதுல எதோ நெறைய வேலைங்க நடக்குதான்....கொஞ்சம் போய் பாத்துக்க...நல்ல சம்பளம் போட்டு கொடுக்கறேன்னு சொல்றாரு....


டிங்கு: இல்லப்பா...இதுல எல்லாம் எனக்கு நம்பிக்க இல்ல...இந்த முறை கண்டிப்பா எனக்கு லோன் கெடச்சிடும்.....அத வச்சி நான் முன்னேறி காட்டுறேன்...ஒரு வாரம் டைம் கொடுங்க....இல்லன்னா நீங்க சொல்றபடி செய்யிறேன்....

அப்பா: சரி...

(வெளியில் வந்தவுடன்...அந்த குட்டிசுவற்றின் மேல் போய் உற்க்காந்தான்!....)

டங்கு: என்னடா ஆச்சி...இவ்ளோ சோகமா இருக்கே.....

டிங்கு: இல்லடா மாப்ள இன்னைக்கு அந்த மேனஜரே மீட் பண்ணி ரெண்டுல ஒன்னு கேட்ருவோம்....


மீனா: டேய் தடி தாண்டவராயா.....

டிங்கு: என்ன மீனா நீயும் கலாய்க்கற....

மீனா: இல்லடா சும்மாத்தான்....எங்க அப்பா சொன்னாரு வேணும்னா எங்க வீட்டோட document கொடுத்து பாக்கலாம்னு சொல்றாரு....

டிங்கு: அதெல்லாம் வேணாம்....

மீனா: நீ சும்மா இரு....நாங்கல்லாம் இருக்கோம்....

(மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்று கடைசியில் அவருடைய வீட்டில் காத்திருந்து நள்ளிரவு 1 மணிக்கு அந்த மேலாளரை சந்த்தித்து கேட்ட போது...!)


மேலாளர்: இத பாருங்கப்பா....வெளிப்படயா சொல்றேன்....துட்டு கொடுக்காம நீ என்னதான் கியாரண்டி கொண்டாந்தாலும் இது நடக்காது....வேணும்னா ஒரு கவர்மென்ட் ஆபீசர ஜவாப் கொண்டா பாக்கலாம்!)

டங்கு: மாப்ள இது ஒன்னும் நடக்கறாப்போல தெரியல...


டிங்கு: ஸ் ஸ் நான் படிச்ச படிப்புக்கில்லாத மரியாத இந்த துட்டுக்கு இருக்கேடா...அதானடா கேவலமா இருக்கு....

டங்கு: சரி விடு போலாம்....

டிங்கு: நீங்க போங்க நான் அப்பறமா வரேன்.....

டங்கு: அடச்சீ வா...நீ இங்க இருந்தா என்ன பண்ணுவேன்னு எங்களுக்கு தெரியும் வா போலாம்....

டிங்கு: இல்லடா எனக்கு மனசு சரி இல்ல...நம்ம என்ன தப்பு செஞ்சோம்....மவனே இனி இவன் வேலைக்கே போகக்கூடாதுடா.....

டங்கு: சரி வா நாளைக்கு பாத்துக்கலாம்....

(காலையில் போலீஸ் வீட்டின் வாசலில் நிற்கிறது....)


அப்பா: என்னங்க ஏட்டைய்யா...இந்தப்பக்கம்.....

போலீஸ்: உங்க பையன கூப்பிடுங்க.....அய்யா கூட்டிட்டு வர சொன்னாரு....

தொடரும்......

கொசுறு: வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளயாடப்போகும்போது சொல்லிவைப்பாங்க.....உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

Chitra said...

கொசுறு: வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளயாடப்போகும்போது சொல்லிவைப்பாங்க.....உன் வீரத்தை கொழுந்திலேயே கில்லி வைப்பாங்க...


..... கிள்ளி

விக்கியுலகம் said...

@Chitra

வணக்கமுங்கோ....ஹிஹி மாத்திட்டேன்...நன்றிங்கோ சகோ!

FOOD said...

செத்தான் அந்த மேனேசரு!

ரெவெரி said...

அருமை...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன் ...

மகேந்திரன் said...

அவிய அப்படித்தான் சொல்வாவ
நாம மரத்தில எந்த பேய் தொங்குதுன்னு
பாத்திருவோம்ல
ஹா ஹா
மாம்ஸ் ஜமாயங்கைய்யா

கோகுல் said...

ஸ் ஸ் நான் படிச்ச படிப்புக்கில்லாத மரியாத இந்த துட்டுக்கு இருக்கேடா...அதானடா கேவலமா இருக்கு....//

ம்ம்.யதார்த்தமான கேள்வி!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Tamilmanam 7

சி.பி.செந்தில்குமார் said...

புரிஞ்சிடுச்சு

சசிகுமார் said...

கடைசியில தலைவர் பாட்ட போட்டு டச் பண்ணிட்ட மாப்ள..........

சென்னை பித்தன் said...

என்ன செஞ்சான் டிங்கு?

மாய உலகம் said...

மாம்ஸ் சஸ்பென்சுல முடிச்சுட்டீங்க... தமிழ்மணம் 11

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள ரைட்டு..

ஜீ... said...

Nice Maams!

நிரூபன் said...

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் பாஸ்,