Followers

Thursday, March 10, 2011

ஓ பதிவர்களே பதிவர்களே நீங்கள்!

ஓ பதிவர்களே பதிவர்களே நீங்கள் என்னை கரண்ட்டு கம்பியில் தூக்கி போட்டாலும் கலாய்ப்பதை நிறுத்தமாட்டேன்...........நீங்கள் என் எழுத்துக்களை பார்த்து சிரித்து கொள்ளலாம்...........சிணுங்க விடமாட்டேன் ஹிஹி!.......இன்னிக்கி மட்டும் கொஞ்சம் டென்சன் ஆவிங்கன்னு நெனைக்கிறேன் ஹி ஹி!..................


"சிவா, பாரு கொஞ்சம் மோரு!"


இது ஒரு குடும்பத்துல நடக்குற பிணக்கு பற்றியது ஹி ஹி!

அப்பா: என்ன சிவா கெளம்பலையா...........

சிவா: கெளம்பிட்டு தான் இருக்கேன்...............ஏன் எனக்கு ஒரு பைக்கு வாங்கி கொடுக்க மாட்டேங்குறீங்க...............

அப்பா: இப்போ தானே காலேஜு போயி இருக்க சீக்கிரத்துல வாங்கிடுவோம்............

சிவா: அவளுக்கு மட்டும் ஏன் வண்டி வாங்கி கொடுத்தீங்க.......

அப்பா: அவள் வேலைக்கு போறாடா.............அதுவும் இல்லாமா பஸ்சுல கஷ்டப்படக்கூடாதுன்னுதான்!


சிவா: எல்லாத்துலயும் அவளுக்கு முதலிடம்.........

பாரு: இப்போ என்னை ஏன் சண்டைக்கு இழுக்கறே.............உனக்கு வேணும்னா நீ வேலைக்கு போயி வண்டி வாங்கிக்க....................

சிவா: எங்க பாரு இவங்க தொல்ல தாங்க முடியல பஸ்சுல தனி சீட்டு..............எல்லா இடத்துலயும் இவங்களுக்கு மட்டும் அதிக இடம் கொடுத்து தலையில தூக்கி வச்சி இருக்கீங்க.................

அப்பா: இப்போ ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற.............ஒரு வண்டி பிரசின அவ்ளோ தானே..................

சிவா: வண்டி மட்டுமில்ல நாடே இவங்க கிட்ட அடிமையா கெடக்குது....................

பாரு: அப்படி என்ன அடிமையா கெடக்குது..................

சிவா: எங்க பாத்தாலும் உங்களுக்கே சப்போர்ட்டு..............நாங்க என்ன பாவம் பண்ணோம்.....................

அப்பா: இதுல என்னப்பா இருக்கு ராஜாவா இருக்குறத விட மந்திரியா இருக்குறது தான் அறிவாளித்தனம் அது தானே நடை முறையில நடந்துட்டு இருக்கு....................

சிவா: எங்க நடந்துட்டு இருக்கு............நாடு போற போக்க பாத்திங்கல்ல......

பாரு: இதுல எங்க தப்பு எங்க இருக்கு...............

சிவா: பார்க்குறேனே பப்புல என்னமா தண்ணி அடிக்கிறாங்க..............சிகிரெட்டு புடிக்கிறாங்க.......................

அப்பா: உன் அக்கா, உன் அம்மா புடிக்கிராங்களா.................

சிவா: அதுக்காக சமுதாய அக்கறை எனக்கு இருக்கக்கூடாதா....................

பாரு: இங்க பாரு நாங்க உங்க கிட்ட இருந்து எதையும் எடுத்துக்கல.............இது ஒரு சம தர்ம சமுதாயமா இருக்கணும்னு தானே நீங்க கூவிட்டு இருக்கீங்க..................அப்புறம் என்ன புடிக்கிராங்க......அடிக்கறாங்க.................

அப்பா: எனக்கென்னமோ இது எல்லோரும் செய்யுராப்புல தெரியல.............உன் பிரெண்டு கார்த்தி குடிக்கிறான், தம் அடிக்கிறான்.................நிறுத்த சொல்றது தானே................

சிவா: அது அவன் தனிப்பட்ட விஷயம்................அத நான் எப்படி தடுக்க முடியும்..............

பாரு: இதுவும் எங்களோட தனிப்பட்ட விஷயம்............எங்களுக்கு எது இஷ்டமோ அத நாங்க செய்யிறோம் உனக்கு ஏன் இவ்ளோ டென்சனு...............

சிவா: அது எப்படி..........இப்படி செய்ஞ்சா சமுதாயம் என்ன ஆகுறது............உங்களுக்கு அதிகமா சுதந்திரம் கொடுத்தது தப்பு.................


அப்பா: சிவா சுதந்திரம் கொடுக்க அவங்க என்ன அடிமைகளா....................இது சம தர்ம சமுதாயம்................அவங்களுக்கு விழிப்புணர்வு என்ற விஷயத்த வேணும்னா நாம் செய்ய முடியும்............இப்படித்தான் இருக்கணும்னு கட்டாயப்படுத்தக்கூடாதுப்பா..........அவங்களுக்கே தெரியனும்..............

சிவா: அடப்போங்கப்பா நீங்க எப்பவும்................

அப்பா: இப்போ என்ன எடுத்துக்க எனக்கும் உங்க அம்மாவுக்கும் கல்யாணம் ஆகி 25 வருசமாகுது..........இது வரைக்கும் நாங்க சண்ட போட்டு நீங்க பாத்து இருக்கீங்களா............

சிவா: நீங்க அம்மாகிட்ட அடங்கிப்போறது போல தான் எனக்கு தெரியுது..........


அப்பா: இல்ல.............உண்மையில நான் பேசும்போது அவளும், அவ பேசும்போது நானும் காது கொடுத்து கவனிப்போம்.......இது சரி இது தப்புன்னா அத வெளிப்படையா பேசிடுவோம்..........அதனாலாதான் இதுவரை வாழ்க பிரச்சன இல்லாம போயிட்டு இருக்கு..........ஒவ்வொருத்தனும் விட்டுக்கொடுத்தா கெட்டுப்போக மாட்டோம்...............

சிவா: எனக்கு இதுல நம்பிக்க இல்ல....................


அப்பா: திருமணம் ஆகட்டும் வாழ்க புரிஞ்சிடும் ஹி ஹி!

கொசுறு: இந்தக்கதையில மோரு ஏன் வரலன்னா அது அங்கேயே இருக்கு.......இது ஒரு கதைன்னு படிச்ச உங்களுக்கு ஹி ஹி நன்றி..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

42 comments:

அஞ்சா சிங்கம் said...

பழம் எனக்குதான்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்.

மைந்தன் சிவா said...

ஹிஹி வீட்டுக்கு வீடு வாசல் படி @@இவருக்கு மட்டும் விதிவிலக்கா என்ன!!

அஞ்சா சிங்கம் said...

.இது ஒரு கதைன்னு படிச்ச உங்களுக்கு ஹி ஹி .............../////////////////////
///////////////////////////////////////////////////////////////////////


இத ஒரு கதைன்னு எழுதின உங்களுக்கு ஹி ஹி ஹி .................................

மைந்தன் சிவா said...

பரவாயில்லையே தமிழ் மணம் வேலை பண்ணுது!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Tamilmanam -ல் சேர்த்துவிட்டேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நம்ம பக்கம் ஆளைக் கானோம்.

செங்கோவி said...

கலக்கல்...

இக்பால் செல்வன் said...

ஏன் இப்படி எல்லாரும் சிரிக்க வைச்சிட்டே இருக்கீங்க !!! கலைஞர் முதல் பதிவர்கள் வரை.........

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜாவா இருக்குறத விட மந்திரியா இருக்குறது தான் அறிவாளித்தனம்

இதை வன்மையாக கண்டிக்கரேன்.. ராசாவா இருந்தா கோடிக்கனக்குல ஊழல் பண்னலாம். மந்திரின்னா லட்சக்கனக்குல தான் ஊழல் பண்ண முடியும்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

">>ராஜாவா இருக்குறத விட மந்திரியா இருக்குறது தான் அறிவாளித்தனம்

இதை வன்மையாக கண்டிக்கரேன்.. ராசாவா இருந்தா கோடிக்கனக்குல ஊழல் பண்னலாம். மந்திரின்னா லட்சக்கனக்குல தான் ஊழல் பண்ண முடியும்"

>>>>>>>>>>>>>

மந்திரின்னா முதல் மந்திரின்னு அர்த்தம் நீயெல்லாம் ஹி ஹி

நா.மணிவண்ணன் said...

சரிதான் ,கதையின் நீதி ?

அதலாம் கரெக்டா போடணும் பாஸ் என்னை மாதிரி அர அறிவாளிகளுக்கு புரியாதுல

டக்கால்டி said...

Present sir

டக்கால்டி said...

யோவ் தொப்பி தொப்பி எல்லார் கிட்டயும் உரைநட இழுக்கறாரு... என்னான்னு தெரில...கொஞ்சம் புத்தி மதி சொல்லுங்கப்பா...

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"பழம் எனக்குதான்"

>>>>>>>>>
சுட்ட பழமா சுடாத பழமா சிங்கம் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

"இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்"

>>>>>>>>>>>>
வாத்யாரே என்னே வச்சி காமடி பண்ணலே இல்ல ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"ஹிஹி வீட்டுக்கு வீடு வாசல் படி @@இவருக்கு மட்டும் விதிவிலக்கா என்ன!!"
>>>>>>>>>>>
அதே அதே!
.........................

பரவாயில்லையே தமிழ் மணம் வேலை பண்ணுது!!

>>>>>>>>>>>

அதானே என்ன திடீர்ன்னு வேல செய்யுது!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"இத ஒரு கதைன்னு எழுதின உங்களுக்கு ஹி ஹி ஹி ................................."

>>>>>>>>>>>>
இப்படியெல்லாம் என்ன புகழாதிங்க சிங்கம் ஹி ஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

"நம்ம பக்கம் ஆளைக் கானோம்"

>>>>>>>>>>>
வந்தேனே வாத்யாரே நீங்க பாக்கல!

............................

Tamilmanam -ல் சேர்த்துவிட்டேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>

நன்றி நண்பா உங்களுக்கு தான் தினமும் இந்த வேலையாப்போச்சி மன்னிக்கவும்!

Ashwin-WIN said...

அவ்.. எவ்வளவு நீளமான பதிவு பொறுங்க வாசிச்சிட்டு வாறன்..
நீங்க நம்ம இனமைய்யா.. உங்க கருத்த நம்ம குரூப்போட மகுடவாசகமா போட்டுக்கலாமா?
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்

விக்கியுலகம் said...

@இக்பால் செல்வன்

"ஏன் இப்படி எல்லாரும் சிரிக்க வைச்சிட்டே இருக்கீங்க !!! கலைஞர் முதல் பதிவர்கள் வரை........."

>>>>>>>>>>>

அவருக்கு சிரிக்க வச்சி பழக்கம் கிடையாதே!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

thank you sir

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"சரிதான் ,கதையின் நீதி ?

அதலாம் கரெக்டா போடணும் பாஸ் என்னை மாதிரி அர அறிவாளிகளுக்கு புரியாதுல"

>>>>>>>>>>>>>>

என்னை ஒரு தொக்கு சாரிபா மக்குன்னு நீங்க சொன்னத நெஞ்சி ஒரு கஷ்டமா கீதுபா!

Speed Master said...

மேட்டர் நச்சுனு புரிந்தது

திரும்பிபார்க்கிறேன்

http://speedsays.blogspot.com/2011/03/blog-post_10.html

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"யோவ் தொப்பி தொப்பி எல்லார் கிட்டயும் உரைநட இழுக்கறாரு... என்னான்னு தெரில...கொஞ்சம் புத்தி மதி சொல்லுங்கப்பா.."

>>>>>>>>>>>>

அப்படியா என்னாச்சின்னே!

சங்கவி said...

சரிதான்...

விக்கியுலகம் said...

@Ashwin-WIN

நண்பா உங்க சந்தோசம் என் பாக்கியம்!

விக்கியுலகம் said...

@சங்கவி
நண்பா சரியேதான்!

விக்கியுலகம் said...

@Speed Master

நண்பா புரிசிடுச்சா நன்றி!

வைகை said...

அப்ப இந்த பதிவு கல்யாணம் ஆகாதவங்களுக்கா?

விக்கியுலகம் said...

@வைகை

ச்சே ச்சே அப்படி சொல்லிடுவேனா ஹி ஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ பதிவர்களே பதிவர்களே நீங்கள் என்னை கரண்ட்டு கம்பியில் தூக்கி போட்டாலும் கலாய்ப்பதை நிறுத்தமாட்டேன்...........நீங்கள் என் எழுத்துக்களை பார்த்து சிரித்து கொள்ளலாம்...........சிணுங்க விடமாட்டேன் ஹிஹி!.......இன்னிக்கி மட்டும் கொஞ்சம் டென்சன் ஆவிங்கன்னு நெனைக்கிறேன் ஹி ஹி!..................

ஹி......ஹி.......ஹி........ எத்தனை அறிக்கைகள் படிச்சிருக்கோம்! எத்தனை சீரியல்கள் பார்த்திருக்கிறோம்! அப்போவெல்லாம் டென்சன் ஆகாத நாம, இப்பமட்டும் எப்படி டென்சனாவோம்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொசுறு: இந்தக்கதையில மோரு ஏன் வரலன்னா அது அங்கேயே இருக்கு.......இது ஒரு கதைன்னு படிச்ச உங்களுக்கு ஹி ஹி நன்றி..........


அவ்!........ முடியலையே!

# கவிதை வீதி # சௌந்தர் said...

இது விக்கி உலகமா..
நக்கல் உலகமா..?

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த ஓட்டவடை நாராயணன் வாரம் ஒரு பேரு மாத்திகிட்டு இருக்கான் இது மாதிரி இருந்த ஓட்டு லிஸ்ட்ல இருந்து பேரு எடுத்திடு வேன் சொல்லுங்க..

THOPPITHOPPI said...

இன்ட்லி படைப்புகள் பிரிவில் இணைக்காமல் நகைச்சுவை பிரிவில் இணைத்திருக்கலாம் இன்னும் கொஞ்சம் பேர் சிரிச்சிருப்பாங்க

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"அவ்!........ முடியலையே!"

>>>>>>>>>>
அதே அதே ஹி ஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
"ஹி......ஹி.......ஹி........ எத்தனை அறிக்கைகள் படிச்சிருக்கோம்! எத்தனை சீரியல்கள் பார்த்திருக்கிறோம்! அப்போவெல்லாம் டென்சன் ஆகாத நாம, இப்பமட்டும் எப்படி டென்சனாவோம்?"

>>>>>>>>>
"அதானே ஹி ஹி!

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
இது விக்கி உலகமா..
நக்கல் உலகமா.."

>>>>>>>>>>>>
வாங்க கவிஞரே ஹி ஹி!

எதோ நம்மால முடிஞ்சது.........நாலு பேரு சிரிப்போட சிந்திக்கனும்னா எதவேணா செய்யலாமுங்க ஹி ஹி!
..............................

இந்த ஓட்டவடை நாராயணன் வாரம் ஒரு பேரு மாத்திகிட்டு இருக்கான் இது மாதிரி இருந்த ஓட்டு லிஸ்ட்ல இருந்து பேரு எடுத்திடு வேன் சொல்லுங்க..

>>>>>>>>>>>>>>>

சொல்லிடுறேன் தக்காளி மாப்ளைக்கு இதே வேலையா போச்சி

விக்கியுலகம் said...

@THOPPITHOPPI

"இன்ட்லி படைப்புகள் பிரிவில் இணைக்காமல் நகைச்சுவை பிரிவில் இணைத்திருக்கலாம் இன்னும் கொஞ்சம் பேர் சிரிச்சிருப்பாங்க"

>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

விடு இதுவும் கடந்து போகும்!

விக்கியுலகம் said...

@Sathishkumar

"ஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
http://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00"

>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா