Followers

Friday, March 25, 2011

திரும்பி வந்த கண்ணகி(!?)

எல்லோருக்கும் வணக்கம்............என் மக்களே உங்களை தரிசித்து போகவே யாம் வந்தோம்.......................


ஏம்மா யாரு நீங்க..............புரியாத மாதிரி பேசுறீங்க....................

என் பெயர் கண்ணகி..............மதுரையை எரித்து உலகுக்கு நீதி எடுத்துக்கூரியவள்...............

நல்லா கூறுன போ..............உன்ன வச்சி தான் இந்த அசிங்க வாதிங்க மேடைக்கு மேடை இந்த பேசி பேசுறாங்களோ......................

ஏன் நான் என்ன தவறு செய்தேன்..................


எம்மா நீ உம்புருசன அன்னிக்கே காதுமேலையே ஒன்னு விட்டு..........ஏன்யா ஊர மேய போறன்னு கண்டிச்சி வளத்துருந்தா ஏன் எங்களுக்கு இந்த நெலம...............ஆளாளுக்கு சங்க கால பண்பாடுன்னு சொல்லி 4, 5 தேத்திடுதுங்க...........

ஏன் அப்படி கூறுகிறீர்கள்...............எல்லாம் விதிப்படி நடந்தது................

நீயுமா................ஏற்க்கனவே இங்க எப்போ எவன் உசுரு போவோம்னு பாத்துட்டு இருக்கோம்.........நீயும் விதிங்கற என்ன ஆகப்போகுதோ...........எந்த நேரத்துல இந்த ஊர எரிசியோ...........இப்போ கூட எரிஞ்சி கிட்டே இருக்கு..............

நான் என் மக்களான தங்களின் வாழ்கைத்தரத்தை அறிந்து செல்லவே வந்தேன்........

நல்லா பாத்துக்கோ எங்க வாழ்கைய..........வாளு போனா கத்தி வருது என்னா பண்றது.............நீயே சொல்லு.......

நான் இம்மண்ணை ஆளும் மன்னனை கண்டு கேட்டுவிட்டு வருகிறேன்................

எம்மா தாயே பாத்து போ அங்க அந்த புறத்துல ஒரே கூட்டமா நடிகைங்க கும்மி அடிச்சிட்டு இருப்பாங்க...........அங்க தான் நம்ம மன்னர் இருப்பாரு.............

மன்னார்புரம்



மன்னா என்ன இது........மக்கள் துயரை நீ அறியாயோ.............

எம்மா பொண்ணு நீ இன்னா புதுசா இருக்கியே இது வரைக்கும் உன்ன இங்க பாத்ததில்லையே...........

நான் கண்ணகி..............

யாரு நம்ம குளித்தல MLA வா!

இல்லை நான் மதுரையை எரித்த கண்ணகி..............

இன்னாது மதுர எரிஞ்சிடுச்சா..............டேய் போன போட்டு இளவல் எப்படி இருக்காருன்னு கேளுங்கடா...........

மன்னா நீ இவ்வாறு செய்யலாமா.................

நீ வேற இப்போ மறுபடியும் நான் வருவனான்னு பாக்க மக்களுக்குள்ள போட்டியே நடக்குது............அதுக்கு தான் என்னப்பத்தி புகழ நம்ம பரதேசி சீய் பண்பான மக்களை கூட்டிக்கிட்டு போயிட்டு இருக்கேன்...............

நீ ஏன் அவ்வாறு போக வேண்டும் நல்லது செய்திருந்தால் அவர்களே உன்னை தேர்ந்தெடுத்து விடுவார்களே.................

ஹிஹி!.............நல்லத்துன்னா என்னாது...........அது எந்த கடையில கிடைக்கும் எனக்கு தெரிஞ்சது எல்லாம் வீடு, மனைவி, மக்கள் .................வாழ்வில் எல்லாம் சிக்கல்..............இது மட்டும்தான்............இந்த வயசிலையும் என் உசிர வாங்குறாங்க..............



நெறி படுத்தப்பட்ட வாழ்கை என் நாட்டு மக்கள் வாழ்கிறார்கள் என்று தவறாக நினைத்து விட்டேனே..................

அசரீரி: எம்மா தாயி இன்னும் அப்படிப்பட்ட மக்கள் வழுரதுனாலதான் இப்படிப்பட்ட மனிதர்கள் பதவில இருக்காங்க..............அந்த மக்களோட அறியாமைய தான் இந்த மனிதர்கள் பயன் படுத்திக்கறாங்க............

கொசுறு: கண்ணகி பாவம் மயக்கம் போட்டு வீன்ட்டாங்க.....................மன்னரப்பாத்தா இல்ல நம்ம பேசுற தமிழப்பாத்தா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

21 comments:

நா.மணிவண்ணன் said...

அடங்கப்பா

Chitra said...

அசரீரி: எம்மா தாயி இன்னும் அப்படிப்பட்ட மக்கள் வழுரதுனாலதான் இப்படிப்பட்ட மனிதர்கள் பதவில இருக்காங்க..............அந்த மக்களோட அறியாமைய தான் இந்த மனிதர்கள் பயன் படுத்திக்கறாங்க............


......மக்கள் அறியாமை, அவங்களுக்கே கேடாக அமையுதே... :-(

பாலா said...

நல்ல கற்பனை.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஓகோ..
இதைத்தான் கற்பனைன்னு சொல்லுவாங்களா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்பு..
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

10. எதாவது கேட்கனுமே...

# கவிதை வீதி # சௌந்தர் said...

பிள்ளை கிள்ள வேண்டியது அப்புறம் தொட்டியை ஆட்டி விட வேண்டியது..
தொடரட்டும் தங்கள் தர்பார்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

9..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அபூர்வமாக வரும் கற்பனை..

# கவிதை வீதி # சௌந்தர் said...

வந்துட்டேன் மாப்ள...

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@பாலா

"நல்ல கற்பனை"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா.......அதாவது பண்ணலாமேன்னுதான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@Chitra
வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"ஓகோ..
இதைத்தான் கற்பனைன்னு சொல்லுவாங்களா?"

>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள......ஏதாவது பண்ணலாமேன்னுதான் ஹிஹி!
.....................

"எதாவது கேட்கனுமே..."

>>>>>>>>>>>>

கேளுங்கோ hehe!

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
பிள்ளை கிள்ள வேண்டியது அப்புறம் தொட்டியை ஆட்டி விட வேண்டியது..
தொடரட்டும் தங்கள் தர்பார்.."

>>>>>>>>>>>.

மாப்ள நான் எந்த தொட்டியையும் ஆட்டல அதுக்கு தான் சிபி இருக்காரே ஹிஹி!

விக்கியுலகம் said...

@♔ம.தி.சுதா♔

வருகைக்கு நன்றி நண்பா

கடமை தான் முக்கியம் முதலில் அதை பார்த்துக்கோங்க!

சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ.. மானம் போச்சு மரியாதை போச்சு கலாச்சாரம் என்னாகரது? கண்ணகியை கவர்ச்சியா காண்பிச்சுட்டீங்களே.. அடடா.. இதனால என்னென்னெ பிரச்சனை வரப்போவுதோ எத்தனை மைனஸ் ஓட்டோ.. ஹி ஹி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

நடத்துய்யா நடத்து!

சிங்கக்குட்டி said...

//ஏன்யா ஊர மேய போறன்னு கண்டிச்சி வளத்துருந்தா//

ஹி ஹி ஹி சூப்பர் :-)

தலைவர் சுபாஸ் படம் கப்பீரம் :-)

விக்கியுலகம் said...

@சிங்கக்குட்டி

வருகைக்கு நன்றி நண்பா