Followers

Saturday, March 19, 2011

அம்மா, அய்யா பிச்ச போடுங்க(!?)

வணக்கம் நண்பர்களே...........தானம் கொடுத்தே புகழ் பெற்றவர்கள் பலர்...............ஆனால் பிச்சைஎடுத்தே பேர் வாங்கியர்கள் பலராகிப்போனது காலத்தின் கோலம்...........................




தேர்தல் வருது...............எல்லாரும் ரெடியாகிக்கோங்க.........அடுத்த அஞ்சு வருஷ வாழ்கைய யாருக்கிட்ட ஒப்படைக்க போறீங்கன்னு முடிவு பண்ணிக்கோங்க ஹி ஹி!

ஓட்டு பிச்சை எடுக்க வருபவர்களிடம் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் போனது கொடுமையான விஷயம் தான்................இருந்தாலும் நம்மிடம் அது அதிகமாக இருப்பதும் கொடுமையான விஷயம்............கேக்குறவன் எது கேட்டாலும் கொடுப்போமா...........அப்படித்தான் இருக்கு இந்த அழுகுண வாதிகளோட பேச்சும் செயலும்..............

எப்படியா இவனுங்களால வாழ முடியிது..............எப்ப பாத்தாலும் யார் சொத்த புடுங்கலாம்............யாரு குடும்பத்த வேரோட அறுக்கலாம்னு மட்டுமே யோச்சிக்கிரானுங்க!............பதவி பணத்துக்காக கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாம நேத்துவரைக்கும் இவனுங்க கூட க்ளாஸ்(Glass) மெட்டுன்னு சொல்லிக்கிட்டு கூடவே சுத்திட்டு இருக்கரவனையே போட்டு தள்ளிடுறாங்க..............


ஒவ்வொருத்தனும் குடும்பத்த காப்பாத்த உயிரை குடுத்து உழைக்கிற நாட்டுல..........இவனுங்க தங்களோட குடுப்பத்துக்காக அடுத்தவங்க வாழ்கையே முடிசிடுரானுங்க.............யாரு இதெல்லாம் கேக்குறது.............கொடுமைய்யா.............கொஞ்சமாவது நாம யோசிக்க வேணாமா...........விலைவாசி எகிறிபோய் சுனாமில அடிச்ச போட்டு கணக்கா அந்தரத்துல நிக்குது.............குழந்தைங்க வெளில போயிட்டு வீட்டுக்கு வர்ற வரைக்கும்............உயிரை கைல புடிச்சிட்டு இருக்காங்க பெத்தவங்க.................

வீட்டுல இருக்க பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.............எவன் எப்ப வீடு புகுந்து திருடுவான்னு தெரியல............துட்ட கொண்டு போனாலும் போகுது.........உயிரையும் இல்ல கொண்டு போயிடறானுங்க..........இதுக்கு ப்ளான் போட்டு கொடுக்கரவனுங்களே அத வேற விசாரிக்கிரானுங்க.....................இது நாடா இல்ல சுடுகாடா.................

தடி எடுத்தவன் தண்டல் வசூளிக்கிறான்...........பய புள்ள சொந்தமா ஒரு ஜட்டி இல்லாம வந்ததுங்க எல்லாம் இப்படி ஊரையே பேக்கட்டுல போட்டுக்கிட்டு சுத்துதுங்க.............எங்க போயிட்டு இருக்கோம் நாம..............ச்சே இதெல்லாம் ஒரு பொழப்பா..............நித்தம் யாரையாவது கொன்னுட்டே இருக்கானுங்க...........மிருகம் கூட பசி எடுத்தாதான் இன்னொரு மிருகத்த கொன்னு சாப்பிடும்..............இந்த நாதாரிங்களுக்கு பணம்கர பசிய வயித்துல கட்டிக்கிட்டு சுத்துறானுங்க...........


மக்களே ஓட்டு போடும் போது யோசிச்சி போடுங்க..........அதுவும் O போடுங்க......இல்ல துணிச்சலுக்கு ஓட்டு போடுவோம் இல்ல மஞ்ச துண்டுக்கு ஓட்டு போடுவோம்............என்று சொல்லி போட்டுபுட்டு...........கட்டி இருக்க கோமணதையும் உருவிட்டு உட்ருவானுங்க ஜாக்கிரதை..........


எனக்கு அவரைத்தான் புடிக்கும்னு சொல்லி உங்களுக்கு நீங்களே சனிய வீட்டுக்கு ஓட்டு போட்டு அழைக்காதீங்க................

கொசுறு: பிச்ச போட்டே பழக்கப்பட்ட நமக்கு அத திருப்பி எடுத்து பழக்கமில்ல..........ஆனா அந்த பிச்சையே நம் வாழ்கைய மாத்திபுடுது..... 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

25 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கலைஞர் விட்ட தெர்தல் அறிக்கையை பார்த்தா மறுபடி அவங்க தான் இந்த நாட்டை அடுத்த 5 வருஷத்துக்கு கொள்ளை அடிப்பாங்க போல இருக்கே

விக்கியுலகம் said...

இனி நகரங்கள் நரகங்களாகும்.......
மொத்த விவசாயிகளும் இந்தாளு வந்தா நாண்டுக்கிட்டு தான் சாகனும்..

தமிழ்வாசி - Prakash said...

எல்லாம் நம்ம தலையெழுத்து... விக்கி...

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையில் நல்ல பதிவு..

ஓட்டு யோசிக்கம போட்டா 5 வருஷம் நாமதான் கஷ்டப்படனும்..

இதை மக்கள் எல்லோரும் உணரனும்..

பகிர்வுக்கு நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

அய்யா நான் இங்க ஓட்டு போடனமா வேணாமா...

யோசிச்சி பார்த்தேன் நம்ம பயபுள்ள ஓழிஞ்சி போட்டும் -ன்னு என் உள் மனசு சொல்லிச்சி..

அதனால போட்டுடுறேன்..

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash
"எல்லாம் நம்ம தலையெழுத்து... விக்கி..."

>>>>>>>>>>

எழுத்து என்று ஒன்று இல்லை நண்பா நாமே எழுதிக்கொள்வதை தவிர!

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
அய்யா நான் இங்க ஓட்டு போடனமா வேணாமா...

யோசிச்சி பார்த்தேன் நம்ம பயபுள்ள ஓழிஞ்சி போட்டும் -ன்னு என் உள் மனசு சொல்லிச்சி..

அதனால போட்டுடுறேன்.."

>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள!

ஓட்டு போட்டதுக்கும் நன்றி ஹிஹி!

ராஜகோபால் said...

சாகரவைக்கும்(தமிழன்) கலைஞர் தான் முதல்வர்

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்

MANO நாஞ்சில் மனோ said...

மக்களே யோசியுங்கள்.....
உங்கள் பொன்னான ஓட்டுகளை குத்த வேண்டிய நபருக்கு குத்துங்கோ....

நா.மணிவண்ணன் said...

நாம் நாசமாக போவது உறுதி

நா.மணிவண்ணன் said...

அண்ணே இத படிச்சோடன கெட்ட கெட்ட வார்த்தையா திட்டணும்னு தோனுதுனே திட்டவா ?

தமிழ் 007 said...

ஐந்து வருஷத்துக்கு ஒரு தடவை தான் அவன் நம்மட்ட பிச்சை எடுக்கிறான்.

ஆனால்,

நாம பிச்சையைப் போட்டுட்டு ஐந்து வருஷமும் எதாவது இலவசம் இருந்தா போடுங்கன்னு அவனுங்ககிட்ட பிச்சை எடுக்கிறோம்.

என்ன கொடுமை சார் இது?

Yoga.s.FR said...

...........பய புள்ள சொந்தமா ஒரு ஜட்டி இல்லாம வந்ததுங்க எல்லாம் இப்படி ஊரையே?!யார சொல்லுறிங்கன்னு புரியுது.வயசானவங்கள இப்புடில்லாம் கிண்டல் பண்ணக் கூடாது,சொல்லிப்புட்டேன்,ஆமா!

செங்கோவி said...

யாருக்குத் தாங்க ஓட்டுப் போடறது?

டக்கால்டி said...

நண்பர்களே,
பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.

நன்றி,
டக்கால்டி

விக்கியுலகம் said...

@ராஜகோபால்

"சாகரவைக்கும்(தமிழன்) கலைஞர் தான் முதல்வர்

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்"

>>>>>>>>>>>>>

நண்பா அப்படி சொல்லாதீங்க மக்கள் உண்மையிலேயே இன்னும் புழு பூச்சி கணக்கா இருக்குறதுனாலதான் இப்படி எல்லாம் நடக்குது

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"மக்களே யோசியுங்கள்.....
உங்கள் பொன்னான ஓட்டுகளை குத்த வேண்டிய நபருக்கு குத்துங்கோ...."

>>>>>>>>>>>>>>

மக்கா யாருன்னு சொல்லவே இல்லை!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"அண்ணே இத படிச்சோடன கெட்ட கெட்ட வார்த்தையா திட்டணும்னு தோனுதுனே திட்டவா ?"

>>>>>>>>>>>>>

மாப்ள செயல்ல காட்டுவோம்..........
திட்டிபுட்டா அதோட போயிரும் அதேன் சொன்னேன்!

விக்கியுலகம் said...

@தமிழ் 007

"ஐந்து வருஷத்துக்கு ஒரு தடவை தான் அவன் நம்மட்ட பிச்சை எடுக்கிறான்.

ஆனால்,

நாம பிச்சையைப் போட்டுட்டு ஐந்து வருஷமும் எதாவது இலவசம் இருந்தா போடுங்கன்னு அவனுங்ககிட்ட பிச்சை எடுக்கிறோம்.

என்ன கொடுமை சார் இது?"

>>>>>>>>>>>>

நண்பா பிச்சை போட்டவனே பிச்சை எடுக்குறான் பிச்சை வாங்கியவனிடம் இதுதானுங்க நடக்குது!

விக்கியுலகம் said...

@Yoga.s.FR

"பய புள்ள சொந்தமா ஒரு ஜட்டி இல்லாம வந்ததுங்க எல்லாம் இப்படி ஊரையே?!யார சொல்லுறிங்கன்னு புரியுது.வயசானவங்கள இப்புடில்லாம் கிண்டல் பண்ணக் கூடாது,சொல்லிப்புட்டேன்,ஆமா!"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா......வயசு என்பது ஓர் தகுதியல்ல........
எப்படிப்பட்ட வாழ்கை வாழ்கிறோம் என்பதே தகுதி என்று நினைப்பவன் நான் அவ்வளவே!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"யாருக்குத் தாங்க ஓட்டுப் போடறது?"

>>>>>>>>>>

O போடுங்க நண்பா.....நெறைய பேரு O போட பயந்துக்கிட்டு எந்த நாதாரிக்கும் போட மனசில்லாம செல்லாத ஓட்டா போட்டு போறவங்களும் இருக்காங்க நண்பா!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

நண்பா உங்கள் தளம் மீண்டது சந்தோசம் அளிக்கிறது........நான் வந்த போது தளம் கிடைத்து விட்டதாக கூறி இருந்தீர்கள் வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மக்களே ஓட்டு போடும் போது யோசிச்சி போடுங்க..........அதுவும் O போடுங்க......இல்ல துணிச்சலுக்கு ஓட்டு போடுவோம் இல்ல மஞ்ச துண்டுக்கு ஓட்டு போடுவோம்............என்று சொல்லி போட்டுபுட்டு...........கட்டி இருக்க கோமணதையும் உருவிட்டு உட்ருவானுங்க ஜாக்கிரதை..........

மிகவும் அவசியமான எச்சரிக்கை நண்பா!

அஞ்சா சிங்கம் said...

கலைஞ்சர் அறிக்கை பார்த்து எனக்கு தலை சுத்துது ...........

பெம்மு குட்டி said...

WOW! this is the sprit.