Followers

Wednesday, March 30, 2011

செக்ஸ்...இந்தியர்கள் பழமை விரும்பிகளா(!?)

வணக்கம் நண்பர்களே...........இந்த பதிவை படிக்க வருபவர்களுக்கு ஒரு நற்செய்தி...........அது என்னன்னா இது சாதாரண மனிதன் ஒருவனின் மனப்பிரதிபலிப்பு மட்டுமே...........ஆராய்ச்சி கட்டுரை அல்ல.............


சமூக காவலர்கள் one step back ப்ளீஸ் சரியா............

உண்மையில் செக்ஸ் எனும் சொல் எப்படி பாலினத்தை குறிக்கிறதோ.....அந்த வார்த்தை சொல்லி முடிக்கும் முன் நம் மக்களின் முகம் அஷ்ட கோணலாகிப்போகும்.........எதோ அருவருப்பான விஷயத்தை சொல்லப்போவதாக முடிவு செய்து விடுகிறார்கள்.............

உண்மையில் இப்போதுள்ள சமூகத்துப்பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயம் இது..........இதை சரியான முறையில் அறிவுறுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில தவறான பாதையில் நம் குழந்தைகள் செல்வதை தடுப்பது சிரமம் என்பது என் கருத்து...................

ஆனால் அவ்வாறு விளக்குவது நம் கலாசாரத்தை கொச்சைப்படுத்துவதாக எண்ணுகின்றனர் நம் பழமை விரும்பிகள்..................என்னை கேட்டால் இதற்க்கு காரணம் நம் பிள்ளைகளின் மீது நமக்கு இருக்கும் பாசம் மற்றும் ஒரு வித மன நெருடல் என்பதே..............

எனக்குள் ஒரு கேள்வி எப்போதுமே எழும் அது ஒரு யதார்த்தமானது என்றாலும்...........!


ஒரு பெண் பூ பெய்தபின் நம் சமூகத்தில் குழந்தை என்ற பிம்பத்தில் இருந்து பெரிய மனுசி ஆயிட்டா என்று சொல்லக்கேட்டு இருக்கிறேன்...............அதே நேரம் எந்த ஆணையாவது இவன் பெரியமனுசன் ஆயிட்டான் அப்படின்னு சொல்லிகேட்டு இருக்கிறோமா?............ஏன்?

இதுக்கு பல மருத்துவர்களின் பதில்கள் இருக்கும்............ஆனா நான் கேற்ப்பது விளங்கிக்கொள்கிரா மாதிரி இருக்கணும்...........நான் என்னுடைய 12 வகுப்பில்தான் செக்ஸ் எனும் விஷயத்தை பற்றி சிறிதளவாவது புரிந்து கொண்டேன் (அப்போ +2 ல Science Group)..................


அப்போ கூட பல விஷயங்கள் எனக்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது...........யாரும் தப்பா நினைக்கலைன்னா சொல்லறேன் கேளுங்க.............அம்மா, அப்பா எப்படி இப்படியா இருந்து இருப்பாங்க என்று நினைக்கும் போது என்னுள் ஒரு வித அருவருப்பு தோன்றியது என்மேல்!

ச்சே இது படிப்பு மட்டும் தானா அல்லது வாழ்கையின் சாராம்சமா.......இதனால் தான் அவங்க அப்படி நடந்து கிட்டு இருப்பங்களோ.......இது உண்மையா இல்லையா.........இப்படியாக பல வித குழப்பமான மன நிலை ஏற்ப்பட்டது. அதனில் இருந்து வெளிவர மனரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.............

இந்த நிலைக்கு காரணம் படிப்பு மட்டுமா அல்லது அந்த வயதில் எடுத்து சொல்ல ஆளில்லாத நிலையா..............!

அதனால்தான் என்னைப்பொறுத்தவரை செக்ஸ் கல்வி அவசியமான ஒன்று...........முன்பு போல ஒரு படத்த பாக்க ஒளிஞ்சி போயி பாக்கப்போரதில்ல நம் இக்கால குழந்தைகள்...........வீடு வரவேற்ப்பு அறைக்கே வரும் TV நிகழ்சிகள்..........முடிந்தவரை குடும்பத்தோட உற்க்காந்து TV பாத்திடுவீங்களா நீங்க!..........விட்டுடுவோமா நாங்க என்ற நிலையில் தான் எல்லா சேனலும் இருக்கிறது...........


அதே நேரம் நாம படிக்கும்போது பாக்காத கம்பியூட்டர இப்போ இருக்க பசங்க காமிக்ஸ் புக்க புரட்டராபுல புரட்டுதுங்க..............இந்த நிலமையில இவங்களுக்கு எப்படி ஒரு பாதுகாப்பான வாழ்கை முறைய நாம கொடுக்கப்போரோம்னு தெரியல................

இப்போ லேட்டஸ்டா வேற லிவிங் டுகெதர் அப்படின்னு ஆரம்பிச்சி இருக்காங்க...........இது மேலை நாடுகள்ல வெறும் உடல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு......ஆனா அவங்க அத காதல் சம்பந்தப்பட்ட விஷயமா சொல்லிப்பாங்க அது வேற விஷயம்(இதில் எனக்கு உலகம் சார்ந்த அறிவு கம்மி ஹிஹி!)...............

இப்போ இருக்க பசங்களுக்கு இந்த உடல் சம்பந்தப்பட்ட ஈர்ப்பு 12 வது வயதிலிருந்தே ஆரம்ப மாகிடறதா ஒரு கணிப்பு சொல்லுது..............(ஆனா அவங்கள மீறி இந்த வயசுல அவங்களுக்கு பல விஷயங்கள் தெரியவருது!) ஆரோக்கியமான சமூகத்த வளக்க வேண்டிய பொறுப்பு நம்ம எல்லாருக்கு உண்டு என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.............இதைப்பற்றிய உங்க கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது..........

கொசுறு: அறிவியல் எத வளத்துதோ இல்லையோ....................! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>>நான் என்னுடைய 12 வகுப்பில்தான்

தக்காளி.. நீ +2 வரை படிச்சிருக்கியா? அடேங்கப்பா...

சி.பி.செந்தில்குமார் said...

மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா.. இந்தாள் வேற 155 பதிவுகளாக இது வரை ஒரு மைனஸ் கூட விழுந்ததில்லைன்னு தம்பட்டம் அடிக்கறாரு..

ஜீ... said...

//இது உண்மையா இல்லையா.........இப்படியாக பல வித குழப்பமான மன நிலை ஏற்ப்பட்டது. அதனில் இருந்து வெளிவர மனரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.......//
உண்மை உண்மை! இதே மாதிரி அந்த வயதில் நானும் குழம்பியிருக்கிறேன்!

MANO நாஞ்சில் மனோ said...

செக்ஸ் கல்வி அவசியம் தேவை....

அஞ்சா சிங்கம் said...

செக்ஸ் கல்வி முதலில் பெற்றோருக்கு தேவை அவர்கள் குழந்தைகளுடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் .உள்ளபடியே மனதில் தோன்றிய குழப்பத்திற்கு முதலில் அவர்களிடத்தில் தான் குழந்தைகள் கேட்ப்பார்கள் அப்போது புரிகிற மாதிரி விளக்கி சொல்ல ஒருவருக்கும் தெரியாது ......

Chitra said...

.இது மேலை நாடுகள்ல வெறும் உடல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு......ஆனா அவங்க அத காதல் சம்பந்தப்பட்ட விஷயமா சொல்லிப்பாங்க அது வேற விஷயம்


...... I don't know about other countries. Over here, எல்லோரும் அப்படி வாழ்வதில்லை. அப்படி வாழ்வதும் தவறா சரியா என்பது வேறு விஷயம். அவர்கள் சொல்லும் காரணங்களுக்கு நிறைய புரிதல் வேண்டும். காதல் அல்லது காமம் என்று இரண்டே காரணங்களை மட்டுமே அளவுகோலாய் வைத்து நமது நாட்டில் பார்க்க படுகிறது.

இரவு வானம் said...

நீங்க சொன்ன பல விசயங்கள நானும் நினைச்சிருக்கேன்..

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@ஜீ...

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

ரொம்ப சந்தோசம்யா நல்லாயிரு ஹிஹி!

விக்கியுலகம் said...

@இரவு வானம்


மாப்ள வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@Chitra
வருகைக்கும் உங்கள் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

சிங்கம் உங்க கருத்துக்கு நன்றி ஆமோதிக்கிறேன்

Speed Master said...

Present Sir

மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது