Followers

Friday, May 27, 2011

பொய் நல்லதா....!

வணக்கம் நண்பர்களே...........



வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது.......அதுவும் உண்மை மட்டுமே பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்த முன்னோர்கள்...........காலம் மாறும், காட்சி மாறும்........உலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு உண்மை பொய்யாகும் என்பதை சொல்லவில்லையோ என்று ஒரு சிந்தனை அதுதான் இந்த பதிவுக்கு காரணம்.......

நம்மில் பலர் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்........உதாரணமாக.......உண்மை பேசுபவனிடம் "தான்" என்ற சிறு அகந்தை இருக்கும்.......அவனுக்கு நடிக்க தெரியாது..........அதனால் பார்ப்பவர்கள் இவனுக்கு என்ன ஒரு திமிர் என்று கூற வாய்ப்பு அதிகம்.......ஏனெனில், உண்மைக்கு ஒரு பழக்கமுண்டு அது வீரம்............


அதாவது யாருக்கும் பயப்படாமலும் தன் மனசாட்சிக்கு மட்டும் நேர்மையாக வாழ்பவரில் நிறய பேர் அவப்பெயர் மட்டுமே கிடைக்கபெறுகிறார்கள்..........

உதாரணமாக...........

ஒரு கம்பனில வேலை செய்யுரவங்கல்ல யாரு உண்மை பேசுவாங்கன்னு மேலதிகாரிக்கு தெரியும். அந்த நல்லவன மட்டுமே பல துட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கூடவே வச்சி இருப்பாங்க.......அதே நேரம் வியாபார விஷயம் பேசும் போது கிட்ட சேக்கறது அதிகமா இருக்காது.....அப்படியே சேத்தாலும்.....அவர்கிட்ட சொல்லி இருப்பாங்க........ஏதும் பேசக்கூடாதுன்னு..........


என் நண்பர் ஒருவர் உண்மை மட்டுமே பேசுவேன்னு தீர்க்கமா இருந்து வர்றார்......இது வரை 27 வேலை மாத்தி உள்ளார்.......என்னிடம் கடந்த வாரம் வேலை நிமித்தமாக உதவி கேட்டார்..........

மாப்ள.......உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆளு கிடையாது.......

இல்ல சொல்லுடா கேட்டுக்கறேன்.......

இப்போ உன்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு...........

அதனால............

மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

அப்போ என்னை விளங்காதவன்னு சொல்ற.....இத நீ சொல்றது தான்டா கஷ்டமா இருக்கு............

இல்லடா.......என்ன பண்றது சில நேரத்துல........எனக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்......பல மொள்ளமாரிகள் கூட வேல செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும்..........அப்போ நான் அமைதியா இருந்திடுவேன்.....நீ என்னை சந்தர்ப்பவாதின்னு கூட நெனச்சிக்க..........

நான் பொய் சொல்ல மாட்டேன்......எந்த நிலைமையிலும்.......!..எனக்கு உன்னால வேலை வங்கி தர முடியுமா முடியாதா................

என்னால முடியும்..........ஆனா..அது வியாபாரம்........அதுவும் பெரிய அளவுல நடக்குற தொழிலுக்கு ஆள் தேவை..........நீ அங்க சில நேரம் வளைந்து கொடுத்து ஆகணும்.......

அது முடியாது.............

டேய்..........உன் பொண்டாட்டி ரொம்ப கஷ்டப்படுராடா...........பாவம்டா உன்ன நம்பி வந்ததுக்கு அவ வேலைக்கு போயி உனக்கு சாப்பாடு போட்டுட்டு இருக்கா.....ஏன்டா இப்படி இருக்க.......கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து போ......அதுதான் வாழ்க்க..........

நான் படிச்ச படிப்புக்கு........என் உண்மைக்கு கெடைக்காத வேலை.......வளைஞ்சி கொடுத்தாத்தான் கெடைக்கும்னு இருந்தா அது வேணாம்..........

எலேய்....இதெல்லாம் நீ தனியா இருந்தா ஓகே..........இப்போ உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கு........ஒரு குழந்த இருக்கு..........மவனே இப்படி பேசிட்டு இருந்தா......இதுக்கு பேரு விதண்டா வாதம்...........

என் நல்ல குணங்களை பார்த்து தான் என் பொண்டாட்டி என்னை கல்யாணம் பண்ணிகிட்டா.......இன்னிக்கி வரைக்கும் அவள் எதுவும் சொல்லல.......


அடங்கோ.......அதான்டா நீ இப்படி இருக்க.....காதலிக்கும்போது நீ நல்ல ஆண்மகனா இருந்தா போதும்.......ஆனா திருமணம் ஆனா நல்ல குடும்பஸ்தனா இருக்கணும்.......உன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..........அதான் உன் பொண்டாட்டி அமைதியா இருக்கா.........அவ சம்பாதிக்கற துட்டுல எத்தன நாளு இப்படியே ஓட்டுவ வாழ்கைய......நமக்காக இல்லாட்டியும் குடும்பத்துக்காக சில நேரங்களில் வளைஞ்சி போகுறது தப்பு இல்லடா மாப்ள..........

சரி முடிவா என்னை என்ன செய்ய சொல்ற..........

கொசுறு: நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது....

டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற

சி.பி.செந்தில்குமார் said...

>>மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

ஓஹோ.. அதனால தான் நீ பொய்யா பொளக்கறியா? ராஸ்கல்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...

>>வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது....

டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற"

>>>>>>>>>

சிங்கிள் தான் நீ டபுள் ஆக்காத பிச்சிடுவேன்!
.............................

சி.பி.செந்தில்குமார் said...

>>மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

ஓஹோ.. அதனால தான் நீ பொய்யா பொளக்கறியா? ராஸ்கல்

>>>>>>>>>>>>>>>>>

பய புள்ள எப்படில்லாம் யோசிக்குது ஹிஹி!

ஜீ... said...

//வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது//
எந்த அளவுக்கு வளையலாம்? ரொம்ப வளைஞ்சா முறிஞ்சிடாது? :-)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

போட்டு தாக்குங்க

"என் ராஜபாட்டை"- ராஜா said...

///
கொசுறு: நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!

////


ஒன்னுமே புரியல

சங்கவி said...

//மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத//

உண்மையான வரிகள்...

FOOD said...

//சி.பி.செந்தில்குமார்
>>வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது....
டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற//
சி பி எப்ப திருந்துவார்#டவுட்டு

FOOD said...

//நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!//
வாழ்க்கை நிதர்சனங்கள்!

ஷர்புதீன் said...

//டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற//

strogly agreed sibi boss

சசிகுமார் said...

காலத்திற்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால் தான் இன்றைய வாழ்வில் வாழமுடியும்.

Chitra said...

interesting....

பட்டாபட்டி.... said...

டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற

-நன்றி
கமென்ஸ் உதவி.. சி.பி செந்தில்குமார்..

ரேவா said...

நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!

கண்டிப்பாக சரிதான் சகோ...சுயநலவாதியாக இருக்க வேண்டாம்...ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு, வளைந்து தருவதில் தவறென்ன இருக்கிறது....

நிரூபன் said...

This is a good topic . Sorry friends, actualy my net connection is broken. I can't type in tamil.

MANO நாஞ்சில் மனோ said...

நாலுபேருக்கு நல்லதுன்னா பொய் தப்பில்லை ஹே ஹே ஹே ஹே ஹே கொன்னியா இது நீ சொன்னதுதான் ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

வளஞ்சி நெளிஞ்சி என்ன, நேரே போயும் திரும்பலாம், சரிய்யா அவனுக்கு வேலையை வாங்கி குடுய்யா...

Jana said...

கறையே நல்லது என்றானபின் பொய் கூடாதா என்ன?